"திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதைவணக்கம் செய்தல் வேண்டும்" என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப, தமிழ்ப் பணியால் தடம் பதித்து வரும் தங்களுக்கு இந்தப் பட்டம் வழங்கப்படுவது தகுதியான ஒரு அங்கீகாரமாகும்.
பன்முக ஆளுமையின் சிகரம்:
சொற்களால் கோலமிட்டு, உணர்வுகளை உயிர்ப்பிக்கும் உங்கள் கவித்திறன் போற்றுதலுக்குரியது.
தமிழால் இணைவோம் இயக்கத்தின் பன்னாட்டு இயக்குநராக, உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதில் உங்கள் உழைப்பு ஈடு இணையற்றது.
சிதறிக்கிடக்கும் முத்துக்களாய் இருக்கும் படைப்புகளைத் தொகுத்து, ஆவணப்படுத்தும் உங்கள் இலக்கியப் பணி காலத்தால் அழியாதது.
படைப்புகளின் ஆழம் கண்டு, அதன் உண்மைப் பொருளை உலகுக்கு உணர்த்தும் உங்கள் கூர்நோக்கு பாராட்டத்தக்கது.
நிகழ்ச்சிகளைத் திறம்பட வழிநடத்தி, தமிழைச் செழுமையாகக் கையாளும் உங்கள் பாணி தனித்துவமானது.
"தமிழால் உலகை ஆளவும், உலகால் தமிழைப் போற்றவும் அயராது உழைக்கும் தங்களுக்கு, இந்த 'மதிப்புறு முனைவர்' பட்டம் ஒரு மணிமகுடம். உங்கள் தமிழ்ப்பணி மென்மேலும் தொடர்ந்து, பல சிகரங்களை எட்ட மனதார வாழ்த்துகிறேன்!"
வாழ்க வளத்துடன் 🌹
தோழமையுடன்.
வேலாயுதம்.ந
சென்னை


0 comments:
Post a Comment