topbella

Sunday, May 3, 2026

தினமலர் - புத்தக உலகம் - கண்ணாடி வேண்டாமே பாப்பா - நூல் அறிமுகம்

தினத்தந்தி - நூல் அறிமுகம் - சிட்டுக்குருவி எங்கே போறீங்க?

நன்றி: #தினத்தந்தி

#அரசமனவுரை

https://nooleni.blogspot.com/2026/05/blog-post.html

குழந்தை இலக்கியம் தமிழுக்குப் புதியது அன்று. தமிழின் மிகப் பழமையான தொல்காப்பியத்தில் குழந்தை இலக்கியக் கூறுகளான ‘பிசி’, ‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி’ ஆகியன இருப்பதாக கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் டாக்டர் பூவண்ணன் அவர்கள்.

குழந்தைகள் புரிந்து கொள்ள அறிந்து கொள்ள அவர்களது அகவையைக் கருத்தில் கொண்டும், மனநிலையைப் புரிந்து கொண்டும் படைக்கும் படைப்புகளை குழந்தை இலக்கியம் எனக் கருத்தில் கொள்ளலாம். அதிலும் அறிவுரையின்றி வரும் படைப்புகள் தரம் மிகுந்ததாக வரவேற்கலாம். 

எளிமை, இனிமை, தெளிவு ஆகிய நடையில் கதை அமைந்தால், அதனைக் குழந்தைகள் கொண்டாடுவார்கள். அவர்களின் மனதில் ரணம் ஏற்படாத படைப்புகள் மிக முக்கியத்துவம் பெற்றுவிடும்.

தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் பிறந்து, அமெரிக்காவில் முப்பது ஆண்டுகளாக வசிக்கும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் பன்முகம் கொண்டவர். தன் பேச்சுத் திறமையால் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் நெறியாளராக, பட்டிமன்றப் பேச்சாளராக, சிறந்த நூல்களின் திறனாய்வாளராகத் திகழ்பவர். எழுத்தையும் எழுதுகோலையும் கண்ணெனப் போற்றும் இவர், மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ மற்றும் அதன் கிளை வடிவங்கள், தன்முனைக் கவிதை ஆகியவற்றில் சிறப்புற இயங்கி வருபவர். அண்மைக் காலங்களில் சிறார் நலம் குறித்து, சிறார் பாடல்கள், சிறார் கதைகள் படைத்து வருகிறார்.

 இவர் படைத்த படைப்புகள் தமிழ் மட்டுமின்றி, தமிழி, ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி அமெரிக்காவில் இருந்து வெளிவரும் முதல் நூல் என்ற பெருமையைத் தான் மட்டுமே அனுபவிக்காமல் தன்னோடு பயணிக்கும் தோழமைகளையும் இணைத்துக் கொள்கிறார். 

‘ஆரா வரைந்த எறும்பு காளான்’, ‘கண்ணாடி வேண்டாமே பாப்பா’ ஆகிய சிறார் கதை நூல்களுக்கு பிறகு மூன்றாவது கதை நூலாக இந்தச் ‘சிட்டுக்குருவி எங்கே போறீங்க?’ சிறார் கதை நூலைப் படைத்திருக்கிறார்.
நூலின் தலைப்புக் கதையில் ஒவ்வொருவருக்குமான உணவு முறை எவ்வாறு மாறுபடுகிறது? ஏன் உணவைத் தேடிப் போகவேண்டும். வேலை என்றால் என்ன? கடமை என்றால் என்ன? என்பதைச் சிறார் மற்றும் பறவைகளைக் கொண்டு கதையைப் பின்னி இருப்பது, படிக்கத் தூண்டுவதாய் அமைந்துள்ளது.
ஒவ்வொரு கதையைப் படிக்கப் படிக்க ஆர்வம் தொற்றிக் கொள்கிறது.

 சிறார்கள் மட்டுமின்றி கதை சொல்லிகளும் விரும்பிப் படிக்கும் விதமாக கதைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கதைக்கும் அதற்குரிய படங்கள் இணைக்கப்பட்டுள்ளதால், இதை வாசிக்கிற சிறார் மகிழ்வர் என்பது உறுதி. 

இவரின் நடை, எளிய நடை என்பதால் சிறார்கள் இக்கதைகளை கவனம் வைத்துக் கொள்ள வழி வகுக்கிறது. தொடர்ந்து சிறார் இலக்கியத்தில் கவனம் செலுத்தினால் பல சிறார்களுக்கான நூல்கள் பெருகும் என வாழ்த்துகிறேன்.

மகிழ்ச்சி பரவட்டும்.

- கன்னிக்கோவில் இராஜா
எழுத்தாளர் - புத்தக வடிவமைப்பாளர்
பேச: 9841236965

Saturday, May 2, 2026

திறனாய்வு களம் #04 - சதுரங்கத்தின் நாற்படை


நூலேணி பதிப்பகம் & கவிச்சிறகுகள் குழுமம் இணைந்து நடத்தும் 

திறனாய்வு களம் - 4


நாள்: 02.05.2026
சனிக்கிழமை 
இந்திய காலை 8:00 மணிக்கு 
இணைய வழியாக....

கவிஞர் அனுராதா சௌரிராஜன் அவர்கள் எழுதிய 
சதுரங்கத்தின் நாற்படை
(தன்முனைக்கவிதைகள்)

நூல் திறனாய்வு

நிகழ்ச்சி நெறியாள்கை:
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி
நிறுவனர், கவிச்சிறகுகள்

நூல் திறனாய்வு:
கவிஞர் ந. வேலாயுதம், சென்னை 

சிறப்புரை: 
கவிஞர் கன்னிக்கோவில் இராஜா
நூலேணி பதிப்பகம்,
லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகம் 

பதிப்பக நூல்களை வாங்கி படைப்பாளர்களை ஊக்கப் படுத்துங்கள்

அனைவரும் கண்டு களித்து கருத்தினை தாருங்கள். நிகழ்வின் காணொளி:


முந்தைய நிகழ்வுகள்:

திறனாய்வு களம்-3

திறனாய்வு களம்-2

திறனாய்வு களம்-1

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)