#பண்புடன் இதழில் எனது கவிதை
சாளரத்தைத் திறந்தவள்
சன்னமாய்ச் சிரித்தாள்
காத்திருப்பின் ரகசியம்
காற்றில் கலந்த கணம்
உள்ளக் கிளர்ச்சி எல்லாம்
ஊர்வலமாய்ப் போகுது
வெள்ளம் திரண்டது போல்
வெகுளித்தனம் மீறுது
கள்ளத்தனம் எல்லாம்
காணாமல் போனது
கரை கடந்த அன்பு இங்கே
கரம் கோர்க்கப் பார்க்குது
ஒற்றை மலர் தனியே
ஒய்யாரமாய் நின்றது
எட்டிப் பார்த்த அவளை
ஏறெடுத்துப் பார்த்தது
சாய்வது போல் நடித்தது
சாளரத்தை முறைத்தது
வாய் திறந்து சிரித்தவளை
வாய் பிளந்து ரசித்தது
தன்னை விட அழகவளை
தனிப்பூவென நினைத்தது
உள்ளத்தில் நிறைத்தது
உதிரும் வரை நினைத்தது
உணர்வும் உயிரும்
உதிரும் மலருக்குண்டு
உறவும் பகையும்
உணர்ந்தால் நன்று!
நெல்லை அன்புடன் ஆனந்தி
பண்புடன் லின்க்:

