topbella
Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Sunday, February 23, 2014

சால்னா...!


தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி,பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மல்லி, புதினா இலை - சிறிது

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்

(பொடி செய்து கொள்ளவும்)
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 1

(அரைத்துக் கொள்ளவும்)
முந்திரி பருப்பு - 15
தேங்காய் - 1/2 கப்

செய்முறை:

  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • பொடித்து வைத்துள்ள கிராம்பு, ஏலக்காய், பட்டை தூளை சேர்த்து வதக்கி, பிறகு பொடியாய் நறுக்கிய தக்காளியை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
  • சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவும். தக்காளி எண்ணெய்  தெளிய வெந்து விடும்.
  • இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கி, அரைத்து வைத்திருக்கும் தேங்காய்,முந்திரிப்பருப்பு மசாலாவை சேர்த்து 2 லிட்டர் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். (கொதித்த பின் தேவையான அளவு கெட்டியாகி விடும்)
  • கொதிக்கும் பொழுதே மல்லி, புதினா இலையை சேர்க்கவும்.
  • 10 நிமிடங்களில் மசாலா பச்சை வாசனை போக, எண்ணெய் தெளிந்து மேலே வர சால்னா தயார் ஆகிவிடும்.

(சப்பாத்தி, பரோட்டாவுடன் சாப்பிடலாம்... இதில் விருப்பத்திற்கேற்ப சிக்கன் துண்டுகளை வதக்கி சேர்த்தும், முட்டையை அவித்து சேர்த்தும் கூட செய்யலாம் )



...அன்புடன் ஆனந்தி 




Tuesday, September 24, 2013

கத்தரிக்காய் காரக்குழம்பு...!


தேவையான பொருட்கள்:

அரைக்க:

சின்ன வெங்காயம் - 10 (அல்லது) பல்லாரி வெங்காயம் - 1
தக்காளி - 1
தேங்காய் துருவல் - 1/2 கப்
மிளகாய் வத்தல் - 6 (காரத்திற்கு ஏற்ப)
மல்லி விதை - 3 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

வதக்க: 

சின்ன வெங்காயம் - 10 (அல்லது) பல்லாரி வெங்காயம் - 1
தக்காளி - 1 (வெங்காயம், தக்காளி சிறியதாக நறுக்கி கொள்ளவும்)
கத்தரிக்காய் - 5 சிறியது (நீளவாக்கில் கீறி வைக்கவும்)

புளி கரைசல் - தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நீளவாக்கில் கீறி வைத்திருக்கும் கத்தரிக்காய்களை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அதை தனியே எடுத்து வைக்கவும்.
  • பின் அதே பாத்திரத்தில் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து அது சூடானதும் கடுகு சேர்த்து, கடுகு வெடித்ததும், வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்.
  • வெந்தயம் வாசம் வந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து அதனுடன் சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கியதும், புளிக்கரைசல் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து.. நன்கு கொதிக்க விடவும்.
  • குழம்பு வற்றி எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.


...அன்புடன் ஆனந்தி 







Monday, July 8, 2013

பாலக் பன்னீர்...!


தேவையான பொருட்கள்:

பன்னீர் - 1 கப்
கீரை - 3 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
மிளகாய் வத்தல் பொடி - 1 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி - சிறிது
பால் (அல்லது) க்ரீம் - சிறிதளவு

செய்முறை:

  • பன்னீரை சின்ன சின்ன துண்டுகளாக்கி, எண்ணையில் பொரித்து தனியே வைக்கவும்.
  • கீரையை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவைத்து, மிக்சியில் அரைத்து கொள்ளவும். (ரொம்பவும் மையாய் அரைக்க வேண்டியதில்லை)
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், சீரகம் போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். (சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரம் வதங்கி விடும்)
  • வெங்காயம் நன்கு வதங்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளியும் நன்கு வெந்ததும்.. அதில் மிளகாய்ப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இதில் அரைத்து வைத்த கீரையை சேர்த்து, அதில் தேவைக்கேற்ப உப்பும் சேர்க்கவும்.
  • நன்கு கொதித்ததும், பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து, அத்துடன் சிறிது பால் அல்லது க்ரீம் சேர்த்து இறக்கவும்.
...அன்புடன் ஆனந்தி 

Friday, May 10, 2013

கார முறுக்கு...!


தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்
சவர் க்ரீம் (sour cream) - 1/2 கப்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
ஓமம் - பொடி செய்தது சிறிது
காயப்பொடி - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

  • ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, சவர் க்ரீம் (sour cream), மிளகாய்த்தூள், உப்பு, காயப்பொடி, ஓமம் பொடி சேர்த்து நன்கு கலந்து, தேவையான தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு பதத்திற்கு கெட்டியாய் பிசைந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து, எண்ணெய் காய்ந்ததும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக்கொண்டு, முள்முறுக்கு அச்சை முறுக்கு குழலில் போட்டு, அதில் மாவை வைத்து சூடான எண்ணெயில்  பிழிந்து, பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.


~அன்புடன் ஆனந்தி



Saturday, April 6, 2013

பாகற்காய் பக்கோடா...!


தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 4
கடலை மாவு - 1/4 கப்
மிளகாய் வத்தல் பொடி - 1 டீஸ்பூன் (காரத்திற்கேற்ப)
கரம் மசால் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

  • பாகற்காயை நன்கு கழுவி ஈரம் போக துடைத்து மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அதில் கடலை மாவு, மிளகாய் வத்தல் பொடி, காயப் பொடி, கரம் மசால் பொடி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பிசிறிக் கொள்ளவும். (தண்ணீர் சேர்க்க அவசியம் இருக்காது, பாகற்காயில் உள்ள ஈரப்பதமே போதும். தேவை என்றால் லேசாக தெளித்துக் கொள்ளவும்).
  • ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, அதில் கொஞ்சம் கொஞ்சமாக பாகற்காய்களை உதிர்த்து விட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

~அன்புடன் ஆனந்தி

Thursday, January 3, 2013

மோர் குழம்பு...!


தேவையான பொருட்கள்:
கெட்டியான தயிர் - 2 கப்
வெண்டைக்காய் - 20
பெருங்காயப் பொடி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

அரைக்க:
தேங்காய் - 1/2 கப் துருவியது
பச்சை மிளகாய் - 10 (காரத்திற்கேற்ப)
சீரகம் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு

தாளிக்க:
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
  • தயிரில் 2 கப் தண்ணீர் சேர்த்து கடைந்து, அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி சேர்க்கவும்.
  • வெண்டைக்காயை கழுவி, தண்ணீர் போக துடைத்து, சிறு சிறு துண்டுகளாக்கி, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, நன்கு வறுத்து தனியே வைக்கவும்.
  • அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
  • அதனுடன் (தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், மல்லித்தூள், இஞ்சி) அரைத்த விழுதை சேர்த்து சிறிது வதக்கவும்.
  • இத்துடன் கடைந்து வைத்த மோரை சேர்த்து, அடுப்பை குறைத்து வைத்து கொதிக்க விடவும்.  நுரை பொங்கி, கொதிக்க ஆரம்பிக்கும் முன்பு அடுப்பில் இருந்து இறக்கி, வறுத்து வைத்துள்ள வெண்டைக்காய் துண்டுகளை சேர்க்கவும்.
(வெண்டைக்காய்க்கு பதில், வறுத்த சுண்டைக்காய் வற்றல், வேகவைத்த தடியங்காய் (வெள்ளைப் பூசணி), பக்கோடா சேர்த்தும் செய்யலாம்)


~அன்புடன் ஆனந்தி


Tuesday, November 6, 2012

பக்கோடா...!


தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
வெண்ணெய் - 2 tsp (அல்லது) சூடான எண்ணெய் - 1 கரண்டி
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சோடா உப்பு - 1 சிட்டிகை
வெங்காயம் - 1 பெரியது
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - 1 சிறிய துண்டு
உப்பு - தேவைக்கேற்ப
வேர்க்கடலை (அல்லது) முந்திரி பருப்பு - கொஞ்சம்

செய்முறை:

  • வெண்ணெய் (அ) எண்ணெய் , மிளகாய் தூள், சோடா உப்பு, உப்பு - சேர்த்து கலக்கவும்.
  • இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். 
  • இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து, தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாய் தெளித்து பிசையவும். 
  • வாணலியில் எண்ணெய் காய வைத்து, பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறிது சிறிதாக.. பிய்த்து போடவும். 
  • பொன்னிறமாக வெந்து, எண்ணெய் சத்தம் அடங்கியதும் எடுக்கவும்.



~அன்புடன் ஆனந்தி




Wednesday, October 3, 2012

பஜ்ஜி...!


தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 1/2 கப்
அரிசி மாவு - 1 கரண்டி
பெருங்காயம் - சிறிது
மிளகாய்த்தூள் - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 1 பல்
பஜ்ஜி மிளகாய் - 5
வெங்காயத் தாள் - 5 (ஒரு கட்டு)
 
செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயம், மிளகாய்த் தூள், இடித்த பூண்டு, உப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
  • மிளகாய் மற்றும் வெங்காயத்தாளை நீள வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். (மிளகாய் மிகவும் காரம் என்றால் உள்ளே உள்ள விதைகளை நீக்கி விடவும்)
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானவுடன் மிளகாய் மற்றும் வெங்காயத்தாளை ஒவ்வொன்றாய் கரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து, மெதுவாய் (எண்ணெய் தெறித்து விடாமல்) போட்டு, நன்கு வெந்து சத்தம் அடங்கியவுடன் எடுக்கவும்.
  • கத்தரிக்காய், குடை மிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம், அப்பளம், சௌ சௌ, காலிபிளவரிலும் கூட இதே மாவினை உபயோகித்து பஜ்ஜி செய்யலாம்.
 

~அன்புடன் ஆனந்தி

Sunday, September 23, 2012

இன்ஸ்டண்ட் கேரட் தோசை..!


தேவையான பொருட்கள்:

காரட் - 1 கப் (துருவியது)
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும். இதனுடன் கேரட் துருவலையும் சேர்க்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கரைத்த மாவுடன் சேர்க்கவும்.

தோசை கல்லில் ஒரு கரண்டி மாவை ஊற்றி, சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி இரு புறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.

தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
செய்து சாப்பிட்டு பாருங்க.





~அன்புடன் ஆனந்தி 





Friday, May 25, 2012

ஸுக்கினி பொரியல்...!



தேவையான பொருட்கள்:

ஸுக்கினி - 2
வெங்காயம் - 1 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது 

பெருங்காயம் - சிறிது
மஞ்சள் பொடி - சிறிது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 மேஜைகரண்டி


செய்முறை:

ஸுக்கினியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

வெங்காயம் சிறிது வதங்கியதும், நறுக்கி வைத்திருக்கும் ஸுக்கினியை சேர்த்து, சிறிது மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும். மிதமான தீயில், மூடி வைத்து ஒரு 5 நிமிடம் வேக வைத்தால் நன்கு வெந்து விடும்.

பிறகு மூடியை திறந்து அதில் மிளகாய் தூள், பெருங்காயம் சேர்த்து நன்கு கிளறி விடவும். ஒரு இரண்டு நிமிடம் கழித்து அதில் துருவிய தேங்காய் சேர்த்து இறக்கவும்.



~அன்புடன் ஆனந்தி 

Tuesday, March 6, 2012

உருளைக் கிழங்கு போண்டா...!


தேவையான பொருட்கள்:

உருளைக் கிழங்கு - 5
பச்சை பட்டாணி - 1/4 கப்
வெங்காயம் (பெரியது) - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 5
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி இலை - சிறிது

கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
இஞ்சி - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:


  • உருளைக் கிழங்கையும், பட்டாணியையும் குக்கரில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடேறியதும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் சேர்க்கவும். 
  • கடுகு வெடித்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளி, வேக வைத்த உருளை கிழங்கு, பச்சை பட்டாணி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு போல் கரைத்து கொள்ளவும். (பஜ்ஜி மாவு போல)
  • ஆறிய உருளைக்கிழங்கு மசியலை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும், ஒவ்வொரு உருண்டையாக எடுத்து, கரைத்த மாவில் தோய்த்து எண்ணையில் போட்டு, பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
  • இந்த போண்டாவிற்கு தேங்காய் சட்னி, தக்காளி சாஸ் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

~அன்புடன் ஆனந்தி 

Tuesday, January 3, 2012

பாதாம் கேக்...!


தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1/4 கப்
பால் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்

செய்முறை:

  1. பாதாம் பருப்பை குறைந்தது ஒரு நான்கு மணி நேரம் வெது வெதுப்பான தண்ணீரில் ஊறவைத்து, அதன் தோலை, நீக்கி விடவும்.
  2. பின்னர் அதனுடன் பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். (ரொம்ப மையாக அரைக்க வேண்டாம்)
  3. பின்னர் ஒரு அடி பிடிக்காத கனத்த பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் விட்டு, அது நன்கு கரைந்ததும், அரைத்த விழுதை போட்டு மிதமான தீயில் கிளற வேண்டும்.
  4. குறைந்தது ஒரு 30 நிமிடமாவது ஆகும். விடாமல் கிளறி விட வேண்டும். இல்லை என்றால் அடி பிடித்து விடும்.
  5. முதலில் கிளறும் போது, வெளியில் தெறிக்கும்... நேரம் ஆக ஆக.. தெறிப்பது குறைந்து விடும்.
  6. இதனுடன் ஏலக்காய் பொடி சேர்த்து, நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி வந்தால்... பாத்திரத்தில் ஒட்டாமல் வர ஆரம்பிக்கும். அப்படி வரும் போது.. ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி... நன்கு ஆறிய பிறகு வில்லைகள் போடவும்.


~அன்புடன் ஆனந்தி 

Tuesday, December 27, 2011

ராகி முறுக்கு...!

யாரும் கலரை பார்த்து பயப்பட வேண்டாம்... டேஸ்ட் சூப்பர்-ஆவே இருக்கு. கண்டிப்பா செஞ்சு பாருங்க.


தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 3 கிண்ணம்
அரிசி மாவு - 2 கிண்ணம்
உளுந்து மாவு - 1 கிண்ணம்
பெருங்காயம் பொடி - சிட்டிகை
எள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர்
எண்ணெய்

செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  2. உளுந்து மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  3. அதனுடன் அரிசி மாவு, ராகி மாவு, உப்பு, எள், காயம், வெண்ணெய் கலந்து தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
  4. தேன்குழல் (முறுக்கு) அச்சில் மாவை போட்டு, மிதமான சூட்டில் உள்ள எண்ணையில் பிழிந்து, பொறித்து எடுக்கவும்.
  5. (சத்தம் அடங்கியதும் எடுத்து விட வேண்டும்... ராகி நிறத்தில் பொன்னிறம் எல்லாம் கண்டு பிடிக்க முடியாது)

எளிமையான செய்முறை... குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செஞ்சு பார்த்து சொல்லுங்க.


~அன்புடன் ஆனந்தி 





Friday, September 9, 2011

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு...!


தேவையான பொருட்கள்:

சிறிய கத்தரிக்காய் - 10 (காம்பை மட்டும் நீக்கி விட்டு, நான்காய் கீறி வைக்கவும்)
வெங்காயம் - பெரிது 1
தக்காளி - பெரிது 1
தேங்காய் துருவல் - 3 மே.கரண்டி
புளி சாறு - சிறிது
குழம்பு மசாலா பொடி - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1. முதலில், வெங்காயத்தை பெரிய துண்டுகளாய் நறுக்கி, வாணலியில் சிறிது எண்ணெய் காய வைத்து, அதில் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். வதக்கிய வெங்காயத்துடன், தக்காளி, தேங்காய் துருவல் சேர்த்து மைய அரைக்க வேண்டும்.

2. ஒரு பாத்திரத்தில், புளி சாறு + அரைத்த விழுது + குழம்பு பொடி + உப்பு  சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து வைக்கவும்.

3. வாணலியில்.. இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து, அதில்.. நான்காய் கீறிய கத்தரிக்காய்களை சேர்த்து, மிதமான தீயில், மூடி வைத்து வேக வைக்கவும்.

4. காய், ஓரளவு வெந்ததும்.. கரைத்து வைத்துள்ள மசாலாவை ஊற்றி, மிதமான தீயில், 5 -10 நிமிடங்கள்.. கொதிக்க விட்டு, எண்ணெய் தெளிய இறக்கவும்.

சூடான சாதத்தில், இந்த குழம்பை விட்டு சாப்பிடுங்க.. செம டேஸ்டா இருக்கும்! வந்ததே வந்தீங்க...  சாப்பிட்டு போங்க! :)


Wednesday, March 16, 2011

தக்காளி கிச்சடி / கொத்சு :


தேவையான பொருட்கள்:
தக்காளி - 4 
வெங்காயம் - 2
மல்லி இலை - சிறிது 

மசாலா (அரைக்க):
தேங்காய் - 1 துண்டு
பொட்டு கடலை - 5 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 7 / 8 (காரத்திற்கேற்ப)
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு 

தாளிக்க:
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 / 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 / 2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிட்டிகை

செய்முறை:

          முதலில் தக்காளி, வெங்காயம் இவற்றை பெரிய பெரிய துண்டுகளாய் நறுக்கி, அதை பிரஷர் குக்கரில் வேக வைத்து கொள்ளவும். (பாத்திரத்திலும் வேக வைக்கலாம்).

          தக்காளி, வெங்காயம் ஆறியதும், அதை நன்கு மசித்துக் கொள்ளவும். (தேவைப்பட்டால் மிக்சியில் ஒரு சுத்து விட்டு அரைத்துக் கொள்ளலாம்), ரொம்பவும் மையாக அரைத்து விட கூடாது.

          ஒரு பாத்திரத்தில், சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து, அதனுடன் மசித்த தக்காளி கலவை, மற்றும், அரைத்த மசாலா, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். (தண்ணீர் வேண்டுமளவு சேர்த்துக்கொள்ளலாம்).

நன்கு கொதித்ததும், மல்லி இலை போட்டு இறக்கவும்.



இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாய் இருக்கும்.


Wednesday, December 8, 2010

காரக் குழம்பு....!!


தேவையான பொருட்கள்:

வெங்காயம் - பெரிது 1              
தக்காளி - பெரிது 1
பூண்டு - 5 பல்
மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 2 டீஸ்பூன் 
காய் - கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய் எது பிடித்தமோ அந்த காய்..
புளி - சின்ன எலுமிச்சை அளவு (ஊற வைத்து சாறு எடுக்கவும்)


தாளிக்க:

கடுகு - 1 / 4 ஸ்பூன்
வெந்தயம் - ஒரு சிட்டிகை
சீரகம் - 1 / 4 ஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்

அரைக்க:

தக்காளி - 1 பெரிது
சீரகம் -  1 / 4 ஸ்பூன்
தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
(இவை எல்லாமும் சிறிது தண்ணீர் விட்டு, நன்கு மசிய அரைத்துக் கொள்ளவும்)

செய்முறை:
        
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய காயைப் போட்டு, சிறிது நேரம் வதக்கி பின்  நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் பொடி, மல்லிப்பொடி சேர்த்து, வதக்கி, கரைத்து வைத்திருக்கும் புளி சாரைச் சேர்க்கவும்.

குழம்பிற்கு தேவையான அளவு உப்பு, தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.. பொடி வாசனை போனதும், அரைத்து வைத்துள்ள மசாலா (தக்காளி, சீரகம், தேங்காய் கலவை) சேர்த்து நன்கு கொதிக்க விட்டு எண்ணெய் தெளிய ஆரம்பிக்கவும் இறக்கவும்.

இதை சூடான சாதத்தில் விட்டு, அப்பளம் சேர்த்து சாப்பிடலாம்...!!

வந்தது தான் வந்தீங்க... ஒரு வாய் சாப்பிட்டு போங்க...! :-))





(காரம், புளிப்பு அவரவர் தேவைக்கு ஏற்ப கூட்டி குறைத்துக் கொள்ளலாம்....)

       









Friday, November 5, 2010

மிக்சர்...!!

உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!!

இந்த நல்ல நாளில் என்னைத்  தொடரும்  நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்...!!

உங்கள் நட்பிற்கு, இந்த பூங்கொத்து...! நன்றிகள் பல...!!

மிக்சர்...!!

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 6 கப்
அரிசி மாவு - 1  கப்
முந்திரி பருப்பு - 1 / 2 கப்
வேர்க்கடலை - 1 கப்
அவல் - 1 கப்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் - 1 / 2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 1 குழி கரண்டி
கடலை பருப்பு - 1 / 2 கப் (4 மணி நேரம் ஊறவைக்கவும்)
ஓமம் பொடித்தது - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

காரா பூந்தி:

3 கப் கடலை மாவை தோசை மாவை விட, கொஞ்சம் இளக்கமாக கரைத்துக் கொள்ளவும்.  ஒரு வாணலியில் எண்ணையை சூடாக்கி, அந்த எண்ணெய் மேல், கண் கரண்டி அல்லது ஜல்லிக் கரண்டியை பிடித்துக் கொண்டு, ஒரு குழிகரண்டி கரைத்த மாவை கரண்டி மேல் ஊற்றி, இன்னொரு கரண்டியால் அதை தேய்த்து விடவும்.. கார பூந்தி, சத்தம் அடங்கி வெந்ததும் எண்ணெய் வடிய விட்டு, ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.. பாதி மாவினை ஊற்றி முடித்த பின், மீதி மாவில் விரும்பிய கலர் சேர்த்து பூந்தி செய்யலாம்.. மிக்சர் கலர் புல்லாக இருக்கும்..

ஓமப்பொடி:

3 கப் கடலை மாவு, 1 கப் அரிசி மாவு, வெண்ணெய், ஓமம்  இவற்றை தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். மாவு ரொம்ப கெட்டியாகவோ, ரொம்ப தளர்வாகவோ இல்லாமல் ஓரளவு ஓம அச்சில் பிழியும் விதம் இருக்க வேண்டும். இடியாப்பம் பிழியும் குழலில் இந்த மாவை எடுத்து, சூடான எண்ணையில் பெரிய வட்டமாக பிழிந்து, இரு புறமும் திருப்பி, சத்தம் நின்றதும் எடுக்கவும்.

சூடான எண்ணையில் முந்திரி பருப்பு, அவல், கறிவேப்பிலை, வேர்க்கடலை இவற்றை பொறித்து எடுக்கவும்.

(சின்ன குறிப்பு: வேர்க்கடலை, அவல், முந்திரி, கறிவேப்பிலை இவற்றை பொரிக்கும் முன்பு, எண்ணையின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.. ஏனெனில், இவைகள் பொறித்த பின்பு மிச்சம் வரும் எண்ணையை உபயோகிக்க முடியாது.. கலங்கல் ஆகி விடும்)

ஊற வைத்த கடலை பருப்பை, நன்கு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி, ஒரு பேப்பர்-இல் தண்ணீர் வடிய விட்டு, பிறகு, அதையும் எண்ணையில் போட்டு, சத்தம் அடங்கும் வரை வேக வைத்து, எண்ணெய் வடிய விட்டு எடுத்து வைக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் செய்து வைத்துள்ள காராபூந்தி, ஓமப்பொடி, மற்றும் வறுத்து வைத்துள்ள பெருங்காயம், வேர்க்கடலை, கடலை பருப்பு, முந்திரி பருப்பு, கறிவேப்பிலை, அவல், மிளகாய்ப் பொடி, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.


சுவையான மிக்சர் தயார்..!!!


Wednesday, June 23, 2010

இன்ஸ்டன்ட் பால் கோவா...!!!

 

தேவையான பொருட்கள்:

கன்டன்ஸ்டு மில்க் (அல்லது) மில்க்மெய்ட் - 1 கப்
பால் பவுடர் -  1 / 4 கப்
கெட்டி தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்

(கன்டன்ஸ்ட் மில்க்கில் சுகர் இருப்பதால் அதுவே போதுமானது.. தனியாக சுகர் சேர்க்க தேவை இல்லை )

செய்முறை:

ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் கலந்து, மைக்ரோவேவ் ஓவனில்  ஒரு 4 - 6  நிமிடங்கள் வைக்கவும்..
இடை இடையே வெளியில் எடுத்து நன்கு கலந்து திரும்ப வைக்கவும்..
6 அல்லது 7 நிமிடங்களில்...சூடான...சுவையான... பால்கோவா தயார்..!!


INSTANT PAAL GOVA: 
NEEDED THINGS:

CONDENSED MILK (or) MILK MAID - 1 CUP
DRY MILK POWDER - 1/4 CUP
GHEE - 1 TBSP
CURD - 1 TBSP

METHOD:

In a deep microwavable dish, add condensed milk, dry milk powder, ghee, curd.. mix everything, and microwave it for 4-6 minutes..
In between take it out... mix well and keep it again..
From 6- 7 minutes, hot and tasty paalgova is ready...!!

Thursday, June 3, 2010

மசால் கடலை...!!

என்னங்க.. எல்லாரும் சௌக்கியமா.?? சரி, வாங்க அப்படியே ஒரு காஃபி சாப்பிட்டுட்டு, சூடா மசால் கடலையும் சாப்பிடலாம்.. :)
ஹலோ, கடலைன்னதும் வேற எதுவும் யோசிக்காம ரெசிபி பாருங்க.. :)

மசால் கடலை


தேவையான பொருட்கள்:


வேர்கடலை - 2 கப்
கடலை மாவு - 1 / 4 கப்
மிளகாய்த்தூள் - 2 tsp
கரம் மசாலா - 1 / 2 tsp (பிரியப்பட்டால்)
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
 செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் வேர்கடலை, கடலை மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலா, கிள்ளிய கறிவேப்பிலை, உப்பு இவற்றை நன்கு கலந்து கொண்டு, பிறகு.. சிறிது சிறிதாக உள்ளங்கையில் தண்ணீர் எடுத்து... அதை கலவையில் கலக்கவும்.. ஒரே நேரத்தில் மொத்தமாக தண்ணீர் விட கூடாது.. கலவை, உதிரியாக இருக்க வேண்டும்..


பின் ஒரு வாணலியில், எண்ணெய் சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக, உதிர்த்து விட்டு, பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.. மிகவும் எளிதான செய்முறை.. ஆனால் தண்ணீர் தெளித்து கடலையை கலப்பதில் தான் இருக்கிறது...  விஷயம்... :)

For Friends who dont know Tamil.. :)

Needed things:
Raw Peanuts - 2 cups
Gram Flour - 1/4 cup
Red Chilli powder - 2 tsp
Garam masala powder - 1/2 tsp (optional)
Curry leaves - little
Salt as needed. 

Method:

In a big vessel add peanuts, gram flour, red chilli powder, garam masala powder, chopped curry leaves,salt. Mix everything well, then add little by little water, by sprinkling it on top then mix it well. Do not add too much water at once.. The mix has to be in separate grains..

Now, heat some oil in a vessel, and add little by little at a time, and fry it until golden color.. Its very simple and delicious recipe.. but, the whole trick is in mixing the nuts only.. :)

Sunday, April 25, 2010

தக்காளி சட்னி

தக்காளி சட்னி:
தேவையான பொருட்கள்:

தக்காளி - 2 பெரியது
வெங்காயம் - 1 பெரியது
பூண்டு / பூடு - 2 (அ) 3 பல்
புளி - சிறிது
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல்- 5 (அ) 6 காரத்திற்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை- சிறிது
கடுகு - 1 /4 ஸ்பூன்


செய்முறை:

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, மிளகாய் வற்றல், உ.பருப்பு சேர்த்து வறுக்கவும்.  கடுகு வெடித்து, உ. பருப்பு நிறம் மாறியதும், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
சிறிது நேரம் வதக்கிய பின், தக்காளி சேர்த்து வதக்கவும்..
தக்காளி நன்கு வதங்கியதும், உப்பு, புளி சேர்த்து.. மிக்சியில் அரைக்கவும்.. மையாக அரைத்துவிட  வேண்டாம். அரைக்கும் முன்பு சிறிது நேரம் ஆற வைத்து அரைக்கவும்..

அரைத்த பின்பு,  சிறிது எண்ணையில் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்..


(தமிழ் வாசிக்க தெரியாத நண்பர்கள் சில பேருக்காக இங்கிலீஷ்-ல் ஒருமுறை....)

Tomato Chatni:
Needed things:


Tomato - 2 big ones
Onion - 1 big
Garlic pods - 2 or 3
Tamarind - little
Urad dhal - 2 tbsp
Red chillies - 5 or 6 (as needed)
Mustard seeds - 1/4 sp
Curry leaves - little
Salt - as needed


Method:

In a pan, put little oil and add mustard seeds, red chillies, urad dhal and fry them for little bit..
After the mustard seeds pops, and the urad dhal turns little brown,
add onion, garlic and fry for little.
After 2 minutes of frying, add tomato. now after the tomoatos get cooked add tamarind and salt and grind it. (coarsely). Let it cool for little time before you grind it. 

After grinding, season it with mustard seeds, curri leaves, urad dhal..




About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)