topbella

Tuesday, September 15, 2020

வெண்பா 19

வெண்பா 19

மயக்கும் குறளை மழலைக் குரலில்
வியந்து உவந்தனை விந்தை - பயத்தது
நன்மை வழங்கும் நயமும் சுரந்திட
இன்பம் நிறைந்தது காண்.
*~ஆனந்தி*
வெண்பா#19
ஆகஸ்ட்-3-2020

வெண்பா 17


மழைத்துளி தாங்கி மலர்ந்த கணத்தில்
தழைத்துச் செழிக்கும் தளிரும் - பிழைத்த
துளிகள் கிளைத்துத் துயின்றிட மேவிக்
களித்தது நாணும் தினம்.
~ஆனந்தி
வெண்பா#17

 

விடுதலை நாள் கவி அரங்கம்-பொதிகை தமிழ்ச் சங்கம்


 

செம்பருத்தி - வெண்பா 20


இதழை விரித்தே இனிய மகிழ்வை
இதமாய் அளித்தே இரவில்- பதமாய்
மலர்வாய் தருவாய் மனமே நிறைவாய்
அலர்வாய் கனிவாய் தினம்.
~அன்புடன் ஆனந்தி
வெண்பா#20


 

வரவேற்புரை-சான்றோர் தளம்-காரணக் கிறுக்கல்கள் நூல் திறனாய்வு


 

இணையதள புலனக்குழு-திரை அரங்கம்-சிவாஜி


 

சங்கப்புலவர் விருது-தமிழ்மாமணி புலவர் வெ.அனந்தசயனம்-உலகப் பாவலர் தமிழன்னைத் தமிழ்ப் பேரவை


வென்று தமிழாள வேண்டும்
மண்புகழ
என்றும் தமிழால் இணைந்து .
அறிக்கை ~ 4
**************
**************
5) பல்கலை வாணர் , பைந்தமிழ்க்
காவலர்
வெல்கலை கற்ற புகழ்
வித்தகர்
பொதுமை ஒளிரும் நல்ல
சிந்தனையாளர்
புகழ் மேவி வாழ்பவர்
வணங்கும் இனிய பண்பினர்
மணக்கும் கல்வியில் வல்லவர்
#திருநெல்வேலி சீமையிலே
பிறந்து , ஈண்டு 24
ஆண்டுகளாக
அமெரிக்காவில் வாழ்ந்து
வருகிறார் . இப்போது
'எனர்ஜி
சயின்ஸ் ' நிறுவத்தில்
பணி ஆற்றிவருகிறார் .
சிறந்த பேச்சாளர் , எழுத்தாளர்
கருத்தாளர் , கட்டுரையாளர்
10 ஆண்டுகளாக 40 குழந்தை
களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும்
ஆசிரியர்
வட அமெரிக்க' தமிழ்ப்பேரவை '
( Fe T N A )
பொதிகை தமிழ்ச்சங்கம்
உலகத் தமிழ்ச் சங்கம்
பல பன்னாட்டு கவிதைப்
போட்டிகளில் வென்றவர்
கவிஞர்
மிக்சிகன்
6) இலங்கை மூத்த பெரும்
கலைஞரான பிரபல
இசைக்கலைஞர்
அவர்களின் பேத்தி
இசைக் குடும்பத்தின்
ஐந்தாம் தலைமுறை
நாட்டியப் பேரொளி
நாட்டியக் கலாசிகாமணி
இலங்கையில் பிறந்து
வளர்ந்தாலும் பின்லாந்தைக்
குடியுரிமையாகப் பெற்று
நாட்டியப்பள்ளி நடத்துபவர்
பின்லாந்தில்
#பரத_கலாமன்ற நிறுவுநர்
தமிழ்ப் பணியும் சிறப்பாக
செய்பவர் .
பலமேடைகளில் பல வெற்றி
விருதுகள் பெற்றவர்
கவிஞர்
7 ) தங்கத்தமிழை வளர்க்கின்ற
தகைமை சான்ற #ஆசிரியை !
கல்லும் உருகும் இவர்
மொழியில் , கனிவாய்க்
கற்பர் மாணவர்கள் !
புலமை கமழும் பாக்களிலே
புனைந்து மிளிரும் கவிஞர் !
பழமை மூடச் செயல்களை
பாங்காய் நீக்கும் பண்பினர் !
முப்பது ஆண்டுகள் முறையாய்
அறிவை ஒளிரும் ஆசிரியப்பணி
#திருமுறை முற்றோதல் இவரின்
இறைபணி !
கலைமாமணி , நல்லாசிரியர்
பட்டையம் பெற்றவர் .
எழுத்தாளர் , மேடைப்பேச்சாளர்
கவிஞர்
8 ) செந்தமிழர் காத்துவரும்
கலைகள் கற்றவர்
கனிவுடைய சொல் ,
கருத்துமிகு பேச்சு
பணிவுடைய தொண்டு
துயரை ஓட்டும் துணிவு
அனைத்தும் பெற்ற
அருந்தமிழ் மங்கை !
எழுத்தாளர் , பேச்சாளர்
இசைக்கலைஞர்
இலக்கியவாதி
யோகா பயிற்சியாளர்
தொழில் அதிபர்
மீண்டும் வருவேன்
தொடரும்
இவண்


 

வளரி நடுவர் பொறுப்பு-இன்பம் இதுவென்பேன்

" இன்பம் இனிய தமிழில் என்பேன்"....
வளரி பன்னாட்டுக் கவிஞர் பெருமன்றத்திற்கும், முதன்மை ஒருங்கிணைப்பாளருக்கும், தலைமை நிர்வாகி அவர்களுக்கும், நெறியாளர் அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் என் அன்பின் வணக்கம்..
**இன்பம் இதுவென்பேன்** கவிதைப்போட்டியில் பங்கு பெறும் அனைத்து கவிச் சொந்தங்களுக்கும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 🎊🎊🎊
~அன்புடன் ஆனந்தி
மிச்சிகன், வட அமெரிக்கா




 

பொதிகை 5ஆம் ஆண்டு தொடக்க விழா அழைப்பிதழ்


 

ஆத்தா நா சொல்லுறேன்..!


கூடி இருக்கும் சனங்களுக்கு
சேதி ஒன்னு சொல்லுறேன்..
கூலிக்கு வேலைக்குப் போயி
கொஞ்ச நஞ்ச காச மிச்சம் பண்ணி
குடிசை வீட்டில கஞ்சித் தண்ணி
குடிக்கிற நமக்கு
குடும்பம்தேன் எல்லாம்
குடிச்சிட்டு வர புருசங்கள
கூராப் பேசி நேராக்கப் பாருங்க
சரிப்பட்டு வரலேன்னா
சாதி சனத்துக்கு காத்துக் கிடக்காம
சாப்பாடு போடாம வெளிய தள்ளி
கதவ சாத்துங்க
வீதில கெடக்கட்டும் விட்ருங்க...
படிச்ச புள்ளைகளும் இங்க
பயந்துகிட்டு இல்லாம
பாரதியார் சொன்ன
புதுமைப் பொண்ணா
பத்திரமா உங்கள பாத்துக்கங்க..
உயிர்க்கொல்லி நோயி
ஊரவிட்டு இன்னும் போல தாயி
ஊட்டுக்குள்ள கிடந்தா
உன் கவுரவம் ஒன்னும் ஆயிடாது..
உதவிக்கு கூட ஆளு வர முடியாது
உசுரு முக்கியம் சொல்லிப்புட்டேன்
உசாரா இருந்துக்கங்க கண்ணுகளா
சூதானமா இருந்துக்கங்க
சுருக்கமா சொல்லிப்புட்டேன்..!!
~அன்புடன் ஆனந்தி


 

இல்லாத தாயை எண்ணி...!


இல்லாத தாயை எண்ணி
இதயம் நனைந்து
சொல்லாமல் சேதி சொல்லும்
சொக்கத் தங்கம்...
அம்மா....நீ
இருந்திருந்தால்
இவ்வாறே எனை
அணைத்திருப்பாயோ?!
இல்லை இருகண் மூடி
நினைத்திருப்பாயோ?!
உன் இதயச் சூட்டை
நான் அறியேன்..
என் இதய நெருப்பை
நீ அறிவாயோ?
காணாத உனையெண்ணி
கண்ணீர் வடித்த நாட்கள் பல..
கடவுளின் சாபம் என்றே சமாதானம்
செய்த நாட்கள் சில..
உலகமே வெறித்திடினும்
உன் துணையில் வென்றிருப்பேனே..
உறவுகள் கழித்திடினும்
உன் உறவில் மகிழ்ந்திருப்பேனே..
கனவுகள் கலைந்திடினும்
உன் கைகோர்த்தே நானிருப்பேனே
காலம் முடிந்திடினும்
உன் காலடியில் தவழ்ந்திருப்பேனே..!
~அன்புடன் ஆனந்தி



 

வளரி நடுவர் பொறுப்பு


இந்த அரிய வாய்ப்பினை எனக்கு வழங்கிய வளரி பன்னாட்டுக் கவிஞர் மன்றத்திற்கும், நிறுவனர் ஐயா அருணா சுந்தரராஜன் அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

பகிர்ந்தமைக்கும் நடுவர் பொறுப்பினைக் கையாண்ட அர்ப்பணிப்பு உணர்வுக்கும் நன்றியும் மகிழ்ச்சியும்!








 

படக்கவிதைப் போட்டி-சங்கத் தமிழ் இலக்கியப்பூங்கா


 

கடவுளின் மறு உருவம்


 

தமிழால் இணைவோம் - கவிதை வாசிப்பு

கவி பாடத் தந்த கனிவான வாய்ப்பிற்கு தமிழால் இணைவோம் குழுவிற்கும், சத்யா அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்




 

ஆசிரியர் தின வாழ்த்து 2020


அன்னைத் தமிழுக்கும்
அன்றாடம் வாழ்வியல்
பாடங்கள் கற்றுக்கொடுக்கும்
அனேக ஆசிரியர்களுக்கும்
இக்கட்டான இச்சூழலிலும்
இதயம் நனைக்கும் வண்ணம்
இன்சொற்களால் வழிகாட்டும்
ஆன்றோர்களுக்கும்
ஈர நெஞ்சுடன்
தமிழ் வாழப்பாடுபடும்
சான்றோர்களுக்கும்
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..!
~அன்புடன் ஆனந்தி



 

புத்தக நண்பன் - நன்றி கடிதம் - நன்றி சான்றிதழ்



 

புத்தக நண்பன் - கதை சொல்லல்


 

பெண்ணரசி..!

 


தங்க மகளை இடுப்பில் தாங்கி
தலைமேல் கடவுளை ஏந்தி
புன்னகை விலகாத பெண்ணரசி
பூரிப்பில் முழு பௌர்ணமி..!

~அன்புடன் ஆனந்தி

இசைவாய் எழிலே..!


வானை எட்டிடவே
வாஞ்சை கொண்டனை
வண்ணம் மிளிரிட
வகையாய் வாழ்ந்தனை
எண்ணக் கலவையில்
நிறைந்திட்ட சுகமே
ஏகாந்தமே எனக்கு
இசைவாய் எழிலே..
கானம் இசைத்திடு
காதல் பரப்பிடு
மோனம் கலைத்திடு
மோகம் தெளித்திடு..!

~அன்புடன் ஆனந்தி


 

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)