topbella

Saturday, May 16, 2020

நீங்கா அழகே..!

நீங்கா அழகே
நிழலின் எழிலே
கலையாத கனவே
கண் தேடும் கலையே
மறைந்தோடும் மழலையே
மனம் கவர் மகோன்னதமே
குளிர்வான் நிலவே
குழந்தையின் குதூகலமே
காரிருள் கலைக்கும்
காந்தர்வ ஒளியே
நித்திரை கலைக்கும்
முத்திரை நிலவே
பத்திரமாய் நெஞ்சுள்
பதுக்கி வைத்தேன்

*~அன்புடன் ஆனந்தி 🌻*

வெறும் வார்த்தையில்..!


வெறும் வார்த்தையால் உணர்வதும்
சற்றே மௌனத்தால் மலர்வதும் பேரமைதியில் ஆனந்தம் கொள்வதும்
சொல்லாத மொழியில் நெகிழ்வதும்
வெல்லாத யுத்தத்தில் மகிழ்வதும்..
அருகாமை தந்த அணைப்பில்
பெருகி வரும் பரிதவிப்பில்
உருகிடும் மனத்திளைப்பில்
பருகிடும் உள்ளக் களிப்பில்
மருகிடும் விழிக் கோர்ப்பில்
கடக்கும் நீயில்லா வெறுமையை..!

~அன்புடன் ஆனந்தி🌻

இயற்கையின் இன்னிசை..!


இயற்கையின் இடியோசை
இசையினை மீட்டுது..

பறவையின் கீச்சொலி
பண் ஒன்றைப் பாடுது..

அணிலின் ஆரவாரம்
அன்பினைக் கொட்டுது..

நுனி நனைந்த புற்கள் இங்கே
நாணத்தைக் காட்டுது..

கருகரு மேகம் ஏனோ
கலவரமாய் நோக்குது...

கொட்டி விடவாவென்றே
குளிர் வானம் கேட்குது..!

~அன்புடன் ஆனந்தி🌻

(5/14/2020)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)