நடைபாதை நளினங்கள்
நமை மயக்கும்
நயங்கள்
வானுயர்ந்த மரங்கள்
இலை உதிர்ந்தும்
இதங்கள்
சலசலக்கும் நீரோடை
சங்கேதமாய் பேசும்
தருணங்கள்
சரசரவெனச் செல்லும்
சாலை கடக்கும்
மகிழ்வுந்துகள்
சங்கேதமாய் பேசியே
துள்ளி ஓடும்
அணில்கள்
விரைந்த நடைக்குத்
தடை போடும்
விண்மழைத்துளிகள்!
நெல்லை அன்புடன் ஆனந்தி


0 comments:
Post a Comment