topbella

Tuesday, December 6, 2011

தொலை தூரத்தில் நான்...!


தொடும் தூரம் நீ இருந்தும்
தொலை தூரத்தில் நான்..
தொடர்ந்தேனே உன்னை..
உன்னில் தொலைத்தாயே என்னை..

சுடும் காதல் என்னுள் தீ மூட்ட
சுக வீணை உன்னிமை தான் மீட்ட..
நான் படுந்துயர் நீ கண்டாய்
உனக்குள் பொய் வேலி கொண்டாய்..

கடுங்கோபம் கொண்டாலும்
கள்வா உன் கண் காதல் பேசும்
விடும் எண்ணம் எனக்கில்லை
விடை சொல்ல உனக்கு மனமில்லை..

சொல்லிசெல்ல அருகே வந்தேன்
சோதிப்பவர் போல் உன் பார்வை..
சொல்ல வந்ததும் மறந்து..
நெஞ்சம் கிள்ளியதை போல்
உணர்ந்து மெல்ல நகர்ந்தேன்..!


~அன்புடன் ஆனந்தி 




(படம்: கூகிள், நன்றி)

Tuesday, November 29, 2011

உன் கண்ணசைவில்...!


உன் கண்ணசைவில்
கண நேரத்தில் எந்தன்
உயிர் மூச்சாகி உந்தன்
காதலில் வீழச் செய்தாய்..

விதி எனக்கு எழுதிய
வேதம் இதுவா என்றே
விந்தை கொண்டேன் என்
சிந்தை வென்றேன்..

ஆதாரம் நீ என்றே
அன்பே உன்னை ஆழமாய்
அகத்தில் பூஜை செய்தே
ஆனந்தம் நான் கொண்டேன்..

யாதாயினும் இக்கணமில்லை
யாம் யாசித்தாலும் நேசித்தாலும்
யாதும் செய்ய இயலாதென்றாய்!

யோசித்தே பார்க்கிறேன்
உன்னை நிதம் நேசித்து
என்னுள் சிவமாய் பூஜித்து
புனர் ஜென்மத்திற்காய்
புதிதாய் பூத்தே காத்திருக்கிறேன்..!


~அன்புடன் ஆனந்தி




(படம்: நன்றி கூகிள்)

Friday, November 11, 2011

நெருங்கி நீ வர....!!!

அரும்பி வந்த அன்பினால்
அன்பே உன்னை
விரும்பி அழைக்கிறேன்..!


நெருங்கி நீ வர வேண்டும்
எனத் துடிக்கும் நெஞ்சம்
நிகழ்வில் என் செய்யுமென
நிச்சயமாய் நானறியேன்..!


வாய்ப்பேச்சில் என்னை
வசமிழக்கச் செய்து விட்டு
வக்கனையாய் வாதாடி
வம்பிழுத்துச் செல்வதே
உனது வாடிக்கை..!


நாட்கள் செல்ல செல்ல
நாயகன் உன் நினைவு
நாட்டியமாடும் என்னுள்ளே
நடக்கும் என்றே 
நான் நம்பிக்கையின் வாசலில்...!

...அன்புடன் ஆனந்தி 

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)