topbella

Monday, August 2, 2010

தொடர் பதிவு... கவிதை...!!!

என்னை தொடர் பதிவிற்கு அழைத்த "அப்பாவி தங்கமணி" அவர்களுக்கு நன்றி.. (ஆனா தொடர் பதிவின்ற பேர்ல... ஆப்பு வச்ச மாதிரியே ஒரு  பீலிங்... )


தங்க்ஸ்.. குடுத்த தலைப்பு.. "ஒசாமா பின் லேடன்.."

(என்னா ஒரு வில்லத்தனம்....!!  நல்லாத் தான போயிட்டு இருந்தது... ஏன் ஏன்... இந்த கொல வெறி...?? சரி.. சரி..சமாளிப்போம்.. இந்த சலசலப்புக்கு எல்லாம் நாங்க பயந்திருவோமாக்கும் )


ரு நல்ல விசயமும் இல்லை சொல்வதற்கு...
சாதித்து வாங்கிய  பட்டமிருக்கு இவருக்கு (வில்லன்)....
மாப்பிள்ளை ரேஞ்சுக்கு விளம்பரமிருக்கு....
 
பின்னாடி ஆட்டோ அனுப்ப ஆள் ரெடியா இருக்கு...

லேட் பண்ணாம கவிதை சொல்லிட்டேன்...
டண்டணக்கா டணக்கு நக்கா...


(ஸப்பாஹ்ஹ்ஹ்ஹ.. யாராவது இனி என்னை தொடர் பதிவுக்கு கூப்பிடுவாங்க..?? ஹ்ம்ம் ஹூம்....!)

இதுக்கு நெஜமாவே உங்க ஸ்பெஷல் இட்லி பத்தியே ஒரு கவிதை எழுதியிருக்கலாம்..

தங்கமணியின் இட்லி....


தக்காளிச் சட்னியுடன்
தவறாமல் உண்ண வேண்டியது
தங்கமணியின் இட்லிகள்..

இட்லிக்குப் பேர் போனவர்
இவர் இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர்..

தொடர் பதிவென்ற பெயரில்..
தொடர்கின்ற இவர் குறும்பு...
தொத்து வியாதி போல் தொடரட்டும் இனியிருந்து..

இவர் புகழ் பாடினால்
இலவசம் இருபது இட்லியாம்...
இல்லை இல்லை நான் பாடவில்லை..
இத்தோடு விட்டுவிடுங்கள் என்னை..!


இத்தனை பதிவர் இருக்க
இவர் பதிவை தொடர எனக்கழைப்பு...
இவர் இம்சைக்கும் ஒரு அளவில்லை..!

நன்றி பல உங்களுக்கு..
நான் கிளம்புகிறேன் என் வீட்டுக்கு..!!

மைன்ட் வாய்ஸ் கேட்ருச்சே.. கேட்ருச்சே...
(மவளே இனியும் எதாவது பேசின.. வீட்டுக்கு நாங்களே பார்சல் பண்ணுவோம்ல...)

(பின்ர போ ஆனந்தி..   அப்பாடி.. ஒரு வழியா தங்க்ஸ் இட்லிய வச்சே.. எஸ்கேப் ஆய்ட்டோம்ல.. எப்புடிஈஈ....??? )

நோ வயலன்ஸ்.. ப்ளீஸ்.. எல்லா தொடர்புகளுக்கும் தொடர் பதிவு எழுத சொன்ன தங்கமணியை காண்டக்ட் செய்யவும்.  உங்க வருகைக்கு நன்றி :-)

88 comments:

Sanjay said...

ஹா ஹா ஹா ஹீ ஹீ ஹீ..இவங்க ரொம்ப அப்பாவியா இருப்பாங்க போல இருக்கே.....:D :D :D

இனிமே பதிவு எழுத சொல்லி கேப்ப கேப்ப கேப்பநு கேக்குற மாத்ரி பண்ணிட்டீங்களே.... :D :D

SUPERB SENSE OF HUMOUR....ENJOYED!!!

அடுத்த முறை குஷ்பூ இட்லி பற்றி கவிதை எழுதவும்.....:D :D :D

ஜெய்லானி said...

ஆ...மொத்தம் எத்தனை இட்லீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ....


இட்லிக்கு கவிதை எழுதிய ஆனந்தி வாழ்க...வாழ்க.....


(ஓசாமா தப்பிச்சார் இட்லி மாட்டிகிச்சு )

ஜெய்லானி said...

ஆ...மொத்தம் எத்தனை இட்லீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ....


இட்லிக்கு கவிதை எழுதிய ஆனந்தி வாழ்க...வாழ்க.....


(ஓசாமா தப்பிச்சார் இட்லி மாட்டிகிச்சு )

தமிழ் உதயம் said...

இட்லி வைச்சு கவிதை எழுதின முதல் ஆள் நீங்க தான்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அட்ரஸ் தெரியாம உள்ற வந்துட்டேன்
போல்ருக்கு.
சாரி, நான் கவிதை படிக்க வரல,
உண்மையிலேயே தெரியாமத்தான்
வந்துட்டேன், என்னைய உட்றுங்க,
நான் ஓஓஓஓஓ...டிடுறேன்....

பனித்துளி சங்கர் said...

ஆஹா !
இந்த கவிதையை மட்டும் பின்லேடன் பார்த்தாரு உங்களை அவரின் அரசவை புலவராக நியமித்துவிடுவார் போங்க !

kavisiva said...

ஹா ஹா நல்ல கவிதை!

ஆனா இட்லியை பார்த்தா தங்கமணி இட்லி மாதிரி தெரியலியே! தங்ஸ் இட்லியை ப்ளேட்டில் வச்சாலே ப்ளேட் உடைஞ்சு போயிடுமே! அப்புறம் எப்படி இவ்வளவு அழகா ஃபோட்டோ எடுக்க முடியும் :-)

Unknown said...

ஆனந்தி பின்லேடன் வேடத்தில் Mr.Bean அல்லது தங்கமணியா?
இட்லி சூப்பர்..

Chitra said...

ஒசாமா, தங்கமணி, ஆனந்தி, கவிதை படித்த நாங்கள்....... இதில் யார் யார் இட்லி ஆனார்கள் ....யார் யார் சட்னி ஆனார்கள் என்று சொல்லுங்கப்பா......

Aparna Sriram said...

இட்லி கவிதை சூப்பர் அப்பு சூப்பர் !
ஒசாமா பின் லாடன்க்கு, சாரி சாரி, கவிதைக்கு ஒரு ஓஓஓஓஹ் போடுங்க !

'பரிவை' சே.குமார் said...

இட்லி கவிதை சூப்பர்..!

'THOSAI' கவிதை எப்போ?

Mythili (மைதிலி ) said...

@ சித்ரா.. இட்லியாவும் சட்னியாவும் ஆகப்போற்து நம்ம ஆனந்தி தான்... இவுக பனங்காட்டு நரியாம்.. ஒசாமா பின் லாடனுக்கே தலை பின்னுவாங்களாம். அல்கைதாலருந்து சில தீவிரவாதிகள் மிச்சிகன்ல இறங்கி இருப்பத்தாக் நியூஸ் பார்த்தேன்.. இப்போ தான் எனக்கு புரிஞ்ஜுது எதுக்குன்னு.. நான் எஸ்கேப்பு... இனி இந்தபக்கம் தல வச்சு படுக்கமாட்டேன்ப்பா.

Menaga Sathia said...

இட்லி கவிதை சூப்பர்ர் ஆன்ந்தி..சிரிச்சு மாளல...

Unknown said...

நல்ல சமாளிப்பிகேசன். ஹா ஹா ஹா

Karthick Chidambaram said...

//தக்காளிச் சட்னியுடன்
தவறாமல் உண்ண வேண்டியது
தங்கமணியின் இட்லிகள்..//

விளம்பரம் அருமை. எந்த நாடுகளில் எல்லாம் கிடைக்கும் ?
முகவர்கள் அணுகலாமா ?

சாந்தி மாரியப்பன் said...

ஏங்க ஒசாமாவுக்கு தங்கமணி ப்ராண்ட் இட்லியை கொடுத்தீங்க.. இப்போ பாருங்க எப்டி முழிக்கிறாருன்னு :-))))

Anonymous said...

itharkkup peyar kavithayaa?? eksi

Anonymous said...

இட்லி கவிதை செம்ம கலக்கல் ஆனந்தி ...ஒசாமா பத்தியும் நல்ல எழுதி சம்மாளிசே பா ..வாழ்த்துக்கள்

ஜில்தண்ணி said...

என்னமா கவித எழுதுறீங்க :)

பின் லேடன் கவிதைக்கு பீன் போட்டோவ போட்டதுக்கே சரியாப்போச்சு போங்க

இட்லயும் செம டேஸ்டு தாங்கோ :)

ஜில்தண்ணி said...

என்னமா கவித எழுதுறீங்க :)

பின் லேடன் கவிதைக்கு பீன் போட்டோவ போட்டதுக்கே சரியாப்போச்சு போங்க

இட்லியும் செம டேஸ்டு தாங்கோ :)

சௌந்தர் said...

(ஸப்பாஹ்ஹ்ஹ்ஹ.. யாராவது இனி என்னை தொடர் பதிவுக்கு கூப்பிடுவாங்க..?? ஹ்ம்ம் ஹூம்....!///

ஹா ஹா ஹா நான் கூப்பிடுவேன்...

மங்குனி அமைச்சர் said...

எச்சூச்மி , பின் லேடன் மன்றும் இட்லியை புகழ்ந்து பாடியதால் இன்று முதல் நீங்கள் "பின்ட்லி" ஆனந்தி என்று எல்லோராலும் அன்போடு அலைக்கபடுவாய்

மங்குனி அமைச்சர் said...

"பின்ட்லி" ஆனந்தி
வாழ்க
"பின்ட்லி" ஆனந்தி
வாழ்க ,வாழ்க
"பின்ட்லி" ஆனந்தி
வாழ்க ,வாழ்க,வாழ்க

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நகைசுவையா இருக்குது..

ரிஷபன்Meena said...

தீவிரவாதிகளின் அட்டுழியத்த்தை இனியும் இந்திய அரசு பொறுத்துக் கொண்டு இருக்காது தக்க பதிலடி கொடுப்போம் என்று அப்ப அப்ப நம்ம அரசாங்கம் முழித்துக் கொண்டு குரல் கொடுத்துவிட்டு தூங்குமே.

அது போல கணக்கு வழக்கில்லாமல் எடைய கூட்டி விட்டதால், திடீரென உடல் மேல் கரிசனம் வந்து கடந்த ஒருவராமா salad மட்டும் சாப்பிட்டுக் கொண்டு டயட்டில் இருந்தேன். இட்லி படத்தையும் சட்னியையும் பார்த்ததும்
விரதத்தை தொடர முடியுமா தெரியலை.

சசிகுமார் said...

வழக்கம் போல நல்லாயிருக்கு , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

தக்குடு said...

//இவர் புகழ் பாடினால்
இலவசம் இருபது இட்லியாம்...// seththaan antha aalu...;))

நாடோடி said...

இட்லிக்கு க‌விதை எழுதின‌ நீங்க‌!!!!! ஏன் தோசை, ச‌ப்பாத்தி, ப‌ரோட்டாவுக்கு எழுத‌ கூடாது...ஹி..ஹி... சீக்கிற‌‌ம் அடையும் எழுதிருங்க‌..

Thenammai Lakshmanan said...

பின் லேடனை விட இட்லியில் பின்னீட்டீங்க ஆனந்தி..

வால்பையன் said...

பின்லேடன் கவிதை சூப்பரு

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்
//ஹா ஹா ஹா ஹீ ஹீ ஹீ..இவங்க ரொம்ப அப்பாவியா இருப்பாங்க போல இருக்கே.....:D :D :D ///

........ஹா ஹா... பின் லேடன் பத்தி நா என்னத்த சொல்றது... :D :D

///இனிமே பதிவு எழுத சொல்லி கேப்ப கேப்ப கேப்பநு கேக்குற மாத்ரி பண்ணிட்டீங்களே.... :D :D ///

.......ஹி ஹி.. பப்ளிக்-ல இப்படியா போட்டு குடுக்கறது...

/// SUPERB SENSE OF HUMOUR....ENJOYED!!! ///

......ஹ்ம்ம்ம்... தேங்க்ஸ்.. :D :D

////அடுத்த முறை குஷ்பூ இட்லி பற்றி கவிதை எழுதவும்.....:D :D :D ///

...........ஹா ஹா.. உங்க வேண்டுகோள்... சீக்கிரம் நிறைவேற்றிடலாம்... :D :D

r.v.saravanan said...

இந்த சலசலப்புக்கு எல்லாம் நாங்க பயந்திருவோமாக்கும் )

அதானே

கவிதை இட்லி
ஹா ஹா

Starjan (ஸ்டார்ஜன்) said...

பின்லேடனுக்கே கவிதையா.. யம்மாடி எவ்வளோ டெரரா இருக்கு..

இட்லிக்கு சட்னிதான் தெரியும்.. அட கவிதை.. ரொம்ப நல்லாருக்கு ஆனந்தி.

Nandhini said...

என்ன ஆனந்தி நீங்க... பின்லேடன் புகழ கூட இருந்து பார்த்த மாதிரி எழுதிவச்சிருகீங்க. எத்தன நாளா பின்லேடன் கூட கூட்டு. சூப்பர் போங்க.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ஜெய்லானி

//ஆ...மொத்தம் எத்தனை இட்லீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ....
இட்லிக்கு கவிதை எழுதிய ஆனந்தி வாழ்க...வாழ்க.....
(ஓசாமா தப்பிச்சார் இட்லி மாட்டிகிச்சு ) ///

ஹா ஹா.. என்ன என்ன.. ஆச்சு??
கோஷம் போட்ட உங்களுக்கு, தங்க்ஸ் இட்லி 20 பரிசு... :D :D
(இப்போ ஒசாமா தப்பிச்சார்... நீங்க மாட்னீங்க...)
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@தமிழ் உதயம்
////இட்லி வைச்சு கவிதை எழுதின முதல் ஆள் நீங்க தான்.///

ஹா ஹா.. நீங்க வேறங்க..
ஒசாமா பத்தி என்னத்த எழுதறது..??
எழுத சொன்ன, தங்க்ஸ் இட்லியாவது பேமஸ் ஆகட்டும்னு தான்.. :-)
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@NIZAMUDEEN
/// அட்ரஸ் தெரியாம உள்ற வந்துட்டேன் போல்ருக்கு.
சாரி, நான் கவிதை படிக்க வரல,
உண்மையிலேயே தெரியாமத்தான் வந்துட்டேன், என்னைய உட்றுங்க,
நான் ஓஓஓஓஓ...டிடுறேன்....///

ஹா ஹா... அப்படியெல்லாம் விட்ருவமா உங்கள... :D :D
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
//// ஆஹா !
இந்த கவிதையை மட்டும் பின்லேடன் பார்த்தாரு உங்களை அவரின் அரசவை புலவராக நியமித்துவிடுவார் போங்க ! ///

ஹா ஹா ஹா... இவ்ளோ மொக்கையையும் பாத்துட்டு.. அரசவை பக்கம் விடுவாரா என்ன???
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி :-)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@kavisiva
/// ஹா ஹா நல்ல கவிதை!

ஆனா இட்லியை பார்த்தா தங்கமணி இட்லி மாதிரி தெரியலியே! தங்ஸ் இட்லியை ப்ளேட்டில் வச்சாலே ப்ளேட் உடைஞ்சு போயிடுமே! அப்புறம் எப்படி இவ்வளவு அழகா ஃபோட்டோ எடுக்க முடியும் :-)///

ஹா ஹா.... ச ச..என்ன இப்புடி சொல்லிபுட்டீக...
தங்கமணி இட்லிக்கு இவ்ளோ விளம்பரம் panraen.. therialayaa?
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.. kavi.. :-)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//(ஆனா தொடர் பதிவின்ற பேர்ல... ஆப்பு வச்ச மாதிரியே ஒரு பீலிங்... )//

ரகசியம் எல்லாம் ரகசியமாத்தான் இருக்கோணும்... இப்படி பப்ளிக்கா சொல்லலாமோ.... ஹி ஹி ஹி

ஆஹா... ஒசாமா பற்றி கவி பாடிய ஓசானா மங்கையே... நீ வாழ்க... (ஹி ஹி ஹி...என்கிட்டயேவா...)

//இதுக்கு நெஜமாவே உங்க ஸ்பெஷல் இட்லி பத்தியே ஒரு கவிதை எழுதியிருக்கலாம்..//

இது வரைக்கும் நல்லாத்தானே போயிட்டு இருந்தது... ஏன் இந்த கொல வெறி.... ?

//தங்கமணியின் இட்லி....//

ஐ... என்னோட இட்லி இவ்ளோ அழகா இருக்கா... நன்றிங்கோ.... ஹி ஹி ஹி

ஆஹா ஆஹா... அப்படியே ஆனந்த கண்ணீர் வர வெச்சுடீங்க ஆனந்தி... என்னோட இட்லிக்கு brand ambassador FIAT மாருதி எல்லாம் நீங்க தான்... அதுக்கு பிரதிபலனா டெய்லி உங்களுக்கு ஒரு dozen இட்லி சப்ளை செய்யப்படும்.... ஹி ஹி ஹி... (இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க... ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//kavisiva said...ஆனா இட்லியை பார்த்தா தங்கமணி இட்லி மாதிரி தெரியலியே! தங்ஸ் இட்லியை ப்ளேட்டில் வச்சாலே ப்ளேட் உடைஞ்சு போயிடுமே! அப்புறம் எப்படி இவ்வளவு அழகா ஃபோட்டோ எடுக்க முடியும் :-)/

வெயிட் அம்மணி வெயிட்... அடுத்த தொடர் பதிவுக்கு நீங்க தான் பலி....

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@கே.ஆர்.பி.செந்தில்
////ஆனந்தி பின்லேடன் வேடத்தில் Mr.Bean அல்லது தங்கமணியா?
இட்லி சூப்பர்..///

ஹா ஹா ஹா... உங்களுக்கு எப்படி தோணுது?? :-)))
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சித்ரா
///ஒசாமா, தங்கமணி, ஆனந்தி, கவிதை படித்த நாங்கள்....... இதில் யார் யார் இட்லி ஆனார்கள் ....யார் யார் சட்னி ஆனார்கள் என்று சொல்லுங்கப்பா......////

ஹா ஹா.. இன்னும் சரியாக முடிவு செய்யப்படவில்லை... என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்..
ரொம்ப தேங்க்ஸ் சித்ரா.. :-)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Aparna Sriram
///இட்லி கவிதை சூப்பர் அப்பு சூப்பர் !
ஒசாமா பின் லாடன்க்கு, சாரி சாரி, கவிதைக்கு ஒரு ஓஓஓஓஹ் போடுங்க !///

ஹா ஹா.. மிக்க நன்றிங்கோ கோஷம் போட்டதுக்கு... :D :D
பரிசா.. இட்லிகள் பார்சலில் வரும்... ;-)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//Karthick சிதம்பரம் said...//தக்காளிச் சட்னியுடன்
தவறாமல் உண்ண வேண்டியது
தங்கமணியின் இட்லிகள்..//
விளம்பரம் அருமை. எந்த நாடுகளில் எல்லாம் கிடைக்கும் ?
முகவர்கள் அணுகலாமா //


கார்த்தி நீங்க இவ்ளோ நல்லவர்னு நான் நெனக்கல.... தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி "அப்பாவி தங்கமணி, அப்பாவி நகர், அப்பாவி உலகம்.... "

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சே.குமார்
///இட்லி கவிதை சூப்பர்..!

'THOSAI' கவிதை எப்போ?//

ஹா ஹா....நீங்க வேறங்க..
வேணும்னா என்ன தோசை கவிதை தொடர் பதிவுக்கு கூப்பிடுங்க... வரேன்..
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி குமார்.. :-)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்)
////@ சித்ரா.. இட்லியாவும் சட்னியாவும் ஆகப்போற்து நம்ம ஆனந்தி தான்... இவுக பனங்காட்டு நரியாம்.. ஒசாமா பின் லாடனுக்கே தலை பின்னுவாங்களாம். அல்கைதாலருந்து சில தீவிரவாதிகள் மிச்சிகன்ல இறங்கி இருப்பத்தாக் நியூஸ் பார்த்தேன்.. இப்போ தான் எனக்கு புரிஞ்ஜுது எதுக்குன்னு.. நான் எஸ்கேப்பு... இனி இந்தபக்கம் தல வச்சு படுக்கமாட்டேன்ப்பா.///

அவ்வவ்வ்வ்வ்.. நா எப்படா.. தல பின்ரேன்னு சொன்னேன்...

நல்ல ஒரு தோழி நீங்க... இப்படி தான், எஸ்கேப் ஆகணும்...

இந்தா வரேன்.. என்னோட மெயின் பிரான்ச் கொச்சின்ல தான்னு சொல்லியிருக்கேன்...:D :D :D

ரொம்ப தேங்க்ஸ் மைதி..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Mrs.மேனகசதியா
///இட்லி கவிதை சூப்பர்ர் ஆன்ந்தி..சிரிச்சு மாளல...///

ஹி ஹி.. வாங்க வாங்க.. ரொம்ப தேங்க்ஸ் மேனகா.. :-)))

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@கலாநேசன்
////நல்ல சமாளிப்பிகேசன். ஹா ஹா ஹா ///

ஹி ஹி.. அதானே பிளான்... ரொம்ப நன்றிங்க :-))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அமைதிச்சாரல் said...
ஏங்க ஒசாமாவுக்கு தங்கமணி ப்ராண்ட் இட்லியை கொடுத்தீங்க.. இப்போ பாருங்க எப்டி முழிக்கிறாருன்னு :-))))//


சாரல் அக்கோவ்... உங்க வீட்டுக்கு வெளிய போய் ஒரு நிமிஷம் பாருங்க.... இட்லி லோட் லாரி நிக்குது,... (மாட்டிகிடீன்களா...)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Karthick Chidambaram
///விளம்பரம் அருமை. எந்த நாடுகளில் எல்லாம் கிடைக்கும் ?
முகவர்கள் அணுகலாமா ?///

ஹா ஹா.. ஆமா ஆமா.. மெயின் பிரான்ச் கனடா, அமெரிக்கா-ல இருக்குங்க..
ரொம்ப நன்றி உங்க வருகைக்கு.. :-)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@அமைதிச்சாரல்
////ஏங்க ஒசாமாவுக்கு தங்கமணி ப்ராண்ட் இட்லியை கொடுத்தீங்க.. இப்போ பாருங்க எப்டி முழிக்கிறாருன்னு :-)))) ///

ஹா ஹா.. வாங்க வாங்க..
விளம்பரத்துக்காக.. டீசெண்டா.. 4 இட்லி திங்காம ஒரு தட்டு இட்லியும் தின்ன வேற எப்படி முழிப்பாரு..!! :D :D :D

உங்க வருகைக்கு நன்றி... :-)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சந்த்யா
/// இட்லி கவிதை செம்ம கலக்கல் ஆனந்தி ...ஒசாமா பத்தியும் நல்ல எழுதி சம்மாளிசே பா ..வாழ்த்துக்கள்///

ஹா ஹா.. ரொம்ப தேங்க்ஸ் பா...
எப்படியோ எஸ்கேப் ஆய்ட்டேன்.... ;-))))
உங்க வருகைக்கு நன்றி..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ஜில்தண்ணி - யோகேஷ்
////என்னமா கவித எழுதுறீங்க :)

பின் லேடன் கவிதைக்கு பீன் போட்டோவ போட்டதுக்கே சரியாப்போச்சு போங்க

இட்லயும் செம டேஸ்டு தாங்கோ :) ////

ஹா ஹா..
பாருங்க உங்களுக்கு தெரியுது...
ரொம்ப நன்றி யோகேஷ்.. :-)))

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சௌந்தர்

////(ஸப்பாஹ்ஹ்ஹ்ஹ.. யாராவது இனி என்னை தொடர் பதிவுக்கு கூப்பிடுவாங்க..?? ஹ்ம்ம் ஹூம்....!///
ஹா ஹா ஹா நான் கூப்பிடுவேன்... ////

அவ்வ்வ்வ்... ஏன் ஏன்.. சௌந்தர்... நீங்களுமா...??
எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.. :-)))

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@மங்குனி அமைசர்
////எச்சூச்மி , பின் லேடன் மன்றும் இட்லியை புகழ்ந்து பாடியதால் இன்று முதல் நீங்கள் "பின்ட்லி" ஆனந்தி என்று எல்லோராலும் அன்போடு அலைக்கபடுவாய் /////

ஹா ஹா ஹா...
சூப்பர் பேரு போங்க...
ரெம்ப நன்றிங்கோ.... :-)))

///"பின்ட்லி" ஆனந்தி
வாழ்க
"பின்ட்லி" ஆனந்தி
வாழ்க ,வாழ்க
"பின்ட்லி" ஆனந்தி
வாழ்க ,வாழ்க,வாழ்க///

ஹ்ம்ம் ம்கும்... .. இது வேறயா.. ரொம்ப சுத்தம்...

தர்ம அடி வாங்கி குடுக்காம போறதில்ல போல இருக்கு..

நடத்தும் உமது, நாடகத்தை..!! (இப்படி தான் கோஷம் போட்டு.. மாட்டி விடனும்.. நல்லா இருங்க..)

வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.. :-))

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சாருஸ்ரீராஜ்
/// ரொம்ப நகைசுவையா இருக்குது..///

உங்க வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.. :-)

ஸ்ரீராம். said...

ஒ௦ஸாமா இட்லி சூப்பருங்க...

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ரிஷபன்Meena
////தீவிரவாதிகளின் அட்டுழியத்த்தை இனியும் இந்திய அரசு பொறுத்துக் கொண்டு இருக்காது தக்க பதிலடி கொடுப்போம் என்று அப்ப அப்ப நம்ம அரசாங்கம் முழித்துக் கொண்டு குரல் கொடுத்துவிட்டு தூங்குமே.///

ஹா ஹா ஹா... :D :D :D

////அது போல கணக்கு வழக்கில்லாமல் எடைய கூட்டி விட்டதால், திடீரென உடல் மேல் கரிசனம் வந்து கடந்த ஒருவராமா salad மட்டும் சாப்பிட்டுக் கொண்டு டயட்டில் இருந்தேன். இட்லி படத்தையும் சட்னியையும் பார்த்ததும்
விரதத்தை தொடர முடியுமா தெரியலை.////

இந்த தட்டில் உள்ள மூணே மூணு இட்லி மட்டும் சாப்பிடுங்க...
உங்க டயட் ஒன்னும் ஆகாது.. :D :D :D
உங்க வருகைக்கு நன்றி.. :-))

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சசிகுமார்
///வழக்கம் போல நல்லாயிருக்கு , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ////

உங்க வருகைக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க சசி... :-))

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@தக்குடுபாண்டி
//இவர் புகழ் பாடினால்
இலவசம் இருபது இட்லியாம்...//

seththaan antha aalu...;)) ////

ஹா ஹா.. ஏன் ஏன்..??

அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது..
எல்லா சைடு எப்பெக்ட்டுக்கும் கம்பெனி பொறுப்பு..
வருகைக்கு நன்றி.. :-)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@நாடோடி
///இட்லிக்கு க‌விதை எழுதின‌ நீங்க‌!!!!! ஏன் தோசை, ச‌ப்பாத்தி, ப‌ரோட்டாவுக்கு எழுத‌ கூடாது...ஹி..ஹி... சீக்கிற‌‌ம் அடையும் எழுதிருங்க‌..////

ஹா ஹா.. எழுதிரலாம்.. அதுக்கு யாரும், தொடர்பதிவுக்கு அழைக்கனுமே..?? :D :D :D

எப்புடி வசதி???
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.. :-)

Gayathri said...

அடடா கண்ணதாசன் வைரமுத்துவெல்லாம் காலிதான் போல..இட்ல்யும் ஒசாமாவும் சேர்த்து போட்டு ஒரு கலக்கு கலக்கி கலக்கல் பதிவா தந்துடீங்க....எப்படி இப்படி
அன்புடன் ஆனந்தி பதிலா கலக்கல் ஆனந்தின்னு மாத்திடுங்க சூப்பரா இருக்கு

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@தேனம்மைலக்ஷ்மணன்
/// பின் லேடனை விட இட்லியில் பின்னீட்டீங்க ஆனந்தி.. ///

ஹி ஹி ஹி... ரொம்ப நன்றி அக்கா... :-))

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@வால்பையன்
////பின்லேடன் கவிதை சூப்பரு///

உங்க வருகைக்கு ரொம்ப நன்றிங்க.. :-)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@r.v.சரவணன்
///இந்த சலசலப்புக்கு எல்லாம் நாங்க பயந்திருவோமாக்கும் )

அதானே

கவிதை இட்லி
ஹா ஹா ///

ஹா ஹா.. உங்க வருகைக்கு நன்றிங்க.. :-)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Starjan ( ஸ்டார்ஜன் )
///பின்லேடனுக்கே கவிதையா.. யம்மாடி எவ்வளோ டெரரா இருக்கு..
இட்லிக்கு சட்னிதான் தெரியும்.. அட கவிதை.. ரொம்ப நல்லாருக்கு ஆனந்தி.////

இது டெரரா?? ஐஈ... பயந்துட்டீங்களா..!! வெற்றி..!
உங்க வருகைக்கு ரொம்ப நன்றிங்க.. :-)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@நந்தினி
///என்ன ஆனந்தி நீங்க... பின்லேடன் புகழ கூட இருந்து பார்த்த மாதிரி எழுதிவச்சிருகீங்க. எத்தன நாளா பின்லேடன் கூட கூட்டு. சூப்பர் போங்க///

அடடா... கூட்டும், இல்ல குழம்பும் இல்லிங்கோ..
வெறும் இட்லி தான்... :D :D :D
வருகைக்கு நன்றி..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@அப்பாவி தங்கமணி
/// ரகசியம் எல்லாம் ரகசியமாத்தான் இருக்கோணும்... இப்படி பப்ளிக்கா சொல்லலாமோ.... ஹி ஹி ஹி///

சரிங்க.. நீங்க சொன்னா சரி தான்.. :D :D

///ஆஹா... ஒசாமா பற்றி கவி பாடிய ஓசானா மங்கையே... நீ வாழ்க... (ஹி ஹி ஹி...என்கிட்டயேவா...) ///

நன்றி... நன்றி... என்னமா பாராட்டுராங்கப்பா....( ஹிஹி...இதுல ஒன்னும் உள்குத்து இல்லியே...)
உங்ககிட்ட தான் விளையாட முடியும்.... என்னங்க நா சொல்றது??

/// இது வரைக்கும் நல்லாத்தானே போயிட்டு இருந்தது... ஏன் இந்த கொல வெறி.... ?///
ஹா ஹா... எல்லாம் உங்க மேல ஒரு பாசம் தாங்கோ... :D :D :D

/// ஐ... என்னோட இட்லி இவ்ளோ அழகா இருக்கா... நன்றிங்கோ.... ஹி ஹி ஹி ///
அழகா இருந்தா அழகாத் தானேங்க தெரியும்... :D :D

////ஆஹா ஆஹா... அப்படியே ஆனந்த கண்ணீர் வர வெச்சுடீங்க ஆனந்தி...

இட்ஸ் ஒகே... இட்ஸ் ஓகே.. கண்ணத் துடச்சிக்கொங்க...நமக்குள்ள என்னங்க..!!

//////என்னோட இட்லிக்கு brand ambassador FIAT மாருதி எல்லாம் நீங்க தான்... அதுக்கு பிரதிபலனா டெய்லி உங்களுக்கு ஒரு dozen இட்லி சப்ளை செய்யப்படும்.... ஹி ஹி ஹி... (இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க... ஹா ஹா ஹா)///

ஆஹா.... ரொம்ப நன்றிங்கோ... கமிஷன் எல்லாம் கரெக்ட்-ஆ குடுத்துர்றேன்.. (இட்லி மட்டும் வேணாம்....ப்ளீஸ்)
சும்மா தான்ம்பா கிண்டல் பண்ணேன்..
உங்க வருகைக்கும், கருத்துக்கும்... அன்புக்கும் ரொம்ப நன்றி.. :-))

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ஸ்ரீராம்
///ஒ௦ஸாமா இட்லி சூப்பருங்க...///

ரொம்ப நன்றிங்க ஸ்ரீராம்.. :-))

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@காயத்ரி
///அடடா கண்ணதாசன் வைரமுத்துவெல்லாம் காலிதான் போல..இட்ல்யும் ஒசாமாவும் சேர்த்து போட்டு ஒரு கலக்கு கலக்கி கலக்கல் பதிவா தந்துடீங்க....எப்படி இப்படி
அன்புடன் ஆனந்தி பதிலா கலக்கல் ஆனந்தின்னு மாத்திடுங்க சூப்பரா இருக்கு ///

ஹா ஹா.. ரொம்ப தேங்க்ஸ்-பா.. (போங்க நீங்க சும்மா கிண்டல் பண்ணிக்கிட்டு)
வருகைக்கு ரொம்ப நன்றி காயத்ரி..

உங்க தொடர் பதிவுக்கு ரெடி ஆய்ட்டு இருக்கேன்.. :D :D :D

R.Gopi said...

அட.....

இட்லிக்கு தொட்டுக்கொள்ள “பின் லேடன்”!!??

ஆஹா...ஆஹா... நீங்க எழுதினது தான் கவிதை.... இட்லி கவிதை எழுதிய உங்களுக்கு நூறு இட்லிகள் பார்செல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்....

அசத்தல் ஆனந்தி.....

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@R.கோபி
////அட.....
இட்லிக்கு தொட்டுக்கொள்ள “பின் லேடன்”!!?? ///

.........சாரி தப்பான காம்பிநேஷன்..... பின் லாடனை போய், தொட்டு கொள்ள வச்சா....
அப்புறம் நம்மள சட்னி ஆக்கிர மாட்டாரா...???? :D :D

///////ஆஹா...ஆஹா... நீங்க எழுதினது தான் கவிதை.... இட்லி கவிதை எழுதிய உங்களுக்கு நூறு இட்லிகள் பார்செல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்....

அசத்தல் ஆனந்தி.....///

ஹா ஹா.. என்ன பரிசு வேண்டுமானாலும் ஓகே....
ஆனால்... நூறு இட்லியா???? ஏன் ஏன்.. கோபி இந்த கோவம்..??

உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.. :-))

Priya said...

ஹா ஹா ஹா... முடியல:)இட்லிக்கு கவிதையா..... சூப்பர்!

இந்த தொடர்பதிவை இட்லிக்கு கவிதை எல்லாம் எழுதி அசத்திட்டீங்க.இப்போ நான் அழைச்சிருக்கிற தொடர்பதிவுக்கு நல்ல பிள்ளையா சமத்தா எழுதணும் ஓகே?

http://enmanadhilirundhu.blogspot.com/2010/08/blog-post.html

எம் அப்துல் காதர் said...

ஓட்டுப் போட்டுட்டேன்,, இருங்க கமண்ட்ஸ படிச்சிட்டு வர்றேனே!!

Anonymous said...

Hai ananthi madam iam christy. how r u ? negga seriousa soldregga, but engaluku siripathana irukuthu, arasialla ithellam sagajam thana enna gill thanni correct thana

Anonymous said...

adadada pinnetegga,pogga sorry avichutegga, correct gill thanni

Unknown said...

ஹா ஹா
இட்லிக்கு - கவிதை ஆனந்தி வாழ்க...வாழ்க..... ஹா ஹீ ஹீ ஹீ...

Unknown said...

கவிதை" ஆனந்தி
வாழ்க
கவிதை" ஆனந்தி
வாழ்க ,வாழ்க
கவிதை" ஆனந்தி

eppudi..

Unknown said...

ஆஹா ஆஹா... அப்படியே ஆனந்த கண்ணீர் வர வெச்சுடீங்க ஆனந்தி... என்னோட இட்லிக்கு brand ambassador FIAT மாருதி எல்லாம் நீங்க தான்... அதுக்கு பிரதிபலனா டெய்லி உங்களுக்கு ஒரு dozen இட்லி சப்ளை செய்யப்படும்.... ஹி ஹி ஹி... (இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க... ஹா ஹா ஹா)
----hilo appavi athai ennaku anupunga nanga oru straike panalamnu erukom..okva

Unknown said...

sirichu sirichu

vairu ellam valiku..

anathi..akkanu kopidlama..

nalla eruku..kavithaigal..

mind voice.

antha picuture..

appram unga humarsense..

so nice

rasithu vasithenga..

varta..
schoolku late aitu..
tata..
byebye

எம் அப்துல் காதர் said...

சிரிச்சி சிரிச்சி எனக்கு வயிறு வேற பசிக்கிது. என்ன செய்றது.
நான் தான் லேட்டோ?? (லேட்டாவும் வந்துட்டு)

அம்புட்டு பேரும் சாப்டுட்டு போயிருப்பாங்களே, மிச்சம் மீதி இருக்கா!!

ஜெய்லானி போட்டு வச்ச சுடு தண்ணியாவது மிச்ச மிருக்கான்னு பார்ப்போம்!! (அடுத்த தடவ முதல் பந்திக்கி வந்துடனும்பா) ஹி ஹி

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Priya
//// ஹா ஹா ஹா... முடியல:)இட்லிக்கு கவிதையா..... சூப்பர்! ///

எப்படியோ சமாளிச்சேன்.. ப்ரியா.. :-)

////இந்த தொடர்பதிவை இட்லிக்கு கவிதை எல்லாம் எழுதி அசத்திட்டீங்க.இப்போ நான் அழைச்சிருக்கிற தொடர்பதிவுக்கு நல்ல பிள்ளையா சமத்தா எழுதணும் ஓகே?

http://enmanadhilirundhu.blogspot.com/2010/08/blog-post.html ///

உங்க அழைப்பிற்கு நன்றி, சீக்கிரம் எழுத முயற்சி பண்றேன்..
வருகைக்கு நன்றி..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@எம் அப்துல் காதர்
///ஓட்டுப் போட்டுட்டேன்,, இருங்க கமண்ட்ஸ படிச்சிட்டு வர்றேனே!! ///

ஓகே ஓகே.. மெதுவா வாங்க.. ஒன்னும் அவசரம் இல்ல..
உங்க வருகைக்கு நன்றி

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@christy
///Hai ananthi madam iam christy. how r u ? negga seriousa soldregga, but engaluku siripathana irukuthu, arasialla ithellam sagajam thana enna gill thanni correct thana ////

ஹா ஹா.. தேங்க்ஸ்..

///adadada pinnetegga,pogga sorry avichutegga, correct gill thanni ///

ஹா ஹா.. ரொம்ப நன்றி உங்க வருகைக்கு..!

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சிவா
///ஹா ஹா
இட்லிக்கு - கவிதை ஆனந்தி வாழ்க...வாழ்க..... ஹா ஹீ ஹீ ஹீ... ////

ரெம்ப நன்றி.. கோஷம் போட்டதுக்கு..!

// கவிதை" ஆனந்தி
வாழ்க
கவிதை" ஆனந்தி
வாழ்க ,வாழ்க
கவிதை" ஆனந்தி

eppudi.. ///
ஹ்ம்ம்.. நல்லா இருக்கு.. உங்க வருகைக்கு நன்றி..

///ஆஹா ஆஹா... அப்படியே ஆனந்த கண்ணீர் வர வெச்சுடீங்க ஆனந்தி... என்னோட இட்லிக்கு brand ambassador FIAT மாருதி எல்லாம் நீங்க தான்... அதுக்கு பிரதிபலனா டெய்லி உங்களுக்கு ஒரு dozen இட்லி சப்ளை செய்யப்படும்.... ஹி ஹி ஹி... (இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க... ஹா ஹா ஹா)
----hilo appavi athai ennaku anupunga nanga oru straike panalamnu erukom..okva ///

oh ... நீங்க அப்பாவி கிட்ட பேசிட்டு இருக்கிங்களா.. ஓகே ஓகே..

///sirichu sirichu
vairu ellam valiku..
anathi..akkanu kopidlama..
nalla eruku..kavithaigal..
mind voice.
antha picuture..
appram unga humarsense..
so nice
rasithu vasithenga..
varta..
schoolku late aitu..
tata..
byebye ////

உங்க படிப்புக்கு இடையிலும்... வந்து தவறாமல் கருத்து சொன்னதற்கு ரொம்ப நன்றி..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@எம் அப்துல் காதர்
///சிரிச்சி சிரிச்சி எனக்கு வயிறு வேற பசிக்கிது. என்ன செய்றது.
நான் தான் லேட்டோ?? (லேட்டாவும் வந்துட்டு)

அம்புட்டு பேரும் சாப்டுட்டு போயிருப்பாங்களே, மிச்சம் மீதி இருக்கா!!

ஜெய்லானி போட்டு வச்ச சுடு தண்ணியாவது மிச்ச மிருக்கான்னு பார்ப்போம்!! (அடுத்த தடவ முதல் பந்திக்கி வந்துடனும்பா) ஹி ஹி ////

ஹா ஹா.. வாங்க இப்ப தான் கமெண்ட் எல்லாம் படிச்சு முடிச்சீங்களா..??

லேட் எல்லாம் ஒன்னும் இல்ல..

உங்க வருகைக்கு ரொம்ப நன்றி

செந்தில்குமார் said...

கலக்கிட்டிங்க ஆனந்தி

இட்லி சட்னி அப்படி இப்படின்னு எல்லாரையிம் சாப்பிட வச்சிட்டிங்க...

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)