திரைக் காவியங்கள் – திறனாய்வு
SPECIAL SHOW: 39 -
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் “முதல் மரியாதை” - திரைப்படம் இடம்பெறுகிறது!
(1985) தமிழ்த் திரையுலகின் ஒரு காவியத் திரைப்படமாகக் கருதப்படுகிறது.
இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், நடுத்தர வயதுடைய ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இடையிலான ஆழமானநட்பையும் காதலையும் மையமாகக் கொண்டது.
நடிகர்கள்: 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் (மலைச்சாமி), ராதா (குயில்), வடிவுக்கரசி (பொன்னாத்தா), சத்யராஜ் மற்றும் பலர்.
இசை: இளையராஜா.
இப்படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் விருப்பமான ஒன்றாக உள்ளன (உதாரணம்: "பூங்காற்று திரும்புமா", "வெட்டி வேரு வாசம்").
விருதுகள்: சிறந்த பிராந்திய மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது.
பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் பாரதிராஜா ஆகியோரும் தேசிய விருதுகளைப் பெற்றனர்.
நெறியாளர்: நெல்லை அன்புடன் ஆனந்தி
ஆய்வுரை:
தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் மற்றும் பத்திரிகையாளர்,
கலைமாமணி சித்ரா லக்ஷ்மணன்
கருத்துரை – தமிழ்த்திரையிசை ஆய்வாளர்கள்:
திரு. எஸ்.கே.ராஜேந்திரகுமார்
பாடல்கள் பற்றி: கவிஞர் காவிரிமைந்தன்
பாடும் குயில்கள்:
திரு. சாம் டேனியல்,
திருமதி.கீதம் கனிமொழி
திருமதி. அன்புடன் ஆனந்தி
பாத்திரப் படைப்புகள்: திருப்பத்தூர் வாஹித்
ஒருங்கிணைப்பாளர்: நெல்லை அன்புடன் ஆனந்தி
கருவாக்கம் – உருவாக்கம்: கவிஞர் காவிரிமைந்தன்
PROGRAMME FLOW:
நெறியாளர்:
நெல்லை அன்புடன் ஆனந்தி
சிறப்பு அழைப்பாளர்: கலைமாமணி சித்ரா லஷ்மணன் அவர்கள் அறிமுகம்..
சித்ரா லட்சுமணன் என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார்.
இவர் 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு பல தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
சித்ரா லட்சுமணன் அவர்கள் தனது ஆரம்பக் காலத்தில் ஒரு திரைப்பட பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
அதன் பிறகு இயக்குநர் பாரதிராஜாவின் அழைப்பை ஏற்று அவருடன் இணைந்து பல திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
பின்னர் அவரது சகோதரர் சித்ரா ராமுவுடன் இணைந்து அவரது அனைத்து படங்களிலும் இணை தயாரிப்பாளராக பணியாற்றினார்.
அவ்வப்போது தனது சொந்த தயாரிப்பு திரைப்படங்களில் சில காட்சிகளில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றி நடித்தும் வந்தார்.
பின்னர் 1983 ஆம் ஆண்டில், காயத்ரி பிலிம்ஸ் என்ற சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி அதில் முதல் முறையாக மண் வாசனை திரைப்படத்தை தயாரித்தார்.
இப்படம் வணிக ரீதியான வெற்றிகளையும் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதையும் வென்றது.
மேலும் 1980 களில் தமிழ் படங்களுக்கான பத்திரிகை உறவு அதிகாரியாகவும் பணியாற்றினார்.
பின்னர் ஒரு நடிகராக உத்தம வில்லன் (2015) திரைப்படத்தில் நடித்தார்.
கமல்ஹாசனுடன் சூரா சம்ஹாரம் (1988), பிரபுவுடன் பெரிய தம்பி (1997) மற்றும் கார்த்திக்குடன் சின்ன ராஜா (1999) படங்களை இயக்கினார்.
ஜப்பானில் கல்யாண ராமன் (1985) திரைப்படத்தில் இவரது நகைச்சுவை வேடம் பாராட்டுகளைப் பெற்றது.
பாஸ் என்கிற பாஸ்கரன் (நேனே அப்பாயி) (2010) மற்றும் தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய திரைப்படங்களில் இவரது நகைச்சுவை போற்றப்பட்டது.
மேலும் தனது வாழ்க்கை முழுவதும் லட்சுமணன் பொறுப்பான பதவிகளையும் வகித்து அதிலும் திறம்பட செயல்பட்டு வந்துள்ளார்.
பின்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயலாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, இந்திய திரைப்பட கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் நிர்வாக குழு உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றினார்.
2011 ஆம் ஆண்டில், தமிழ் சினிமாவின் வரலாற்றை ஆவணப்படுத்தும் 80 ஆண்டு தமிழ் சினிமா என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
கலைமாமணி சித்ரா லஷ்மணன் அவர்களின் திரைக்காவியத் திறனாய்வுரை
இசையும் பாடலும்: கவிஞர் காவிரிமைந்தன்
பாடல் 1: பூங்காற்றே திரும்புமா - திரு. சாம் டேனியல்
கருத்துரை: எஸ்.கே.ராஜேந்திரகுமார்
இசையும் பாடலும்: கவிஞர் காவிரிமைந்தன்
பாடல் 2: வெட்டிவேரு வாசம் - கீதம் கனிமொழி
இசையும் பாடலும்: கவிஞர் காவிரிமைந்தன்
பாடல் 3: ராசாவே உன்னை நம்பி – நெல்லை அன்புடன் ஆனந்தி
திரைக்காவியத் திறனாய்வு நிறைவுரை - கலைமாமணி சித்ரா லஷ்மணன்
பாத்திரப் படைப்புகள்: திருப்பத்தூர் வாஹித் - 8 நிமிடங்கள்
நிறைவுரை: கவிஞர் காவிரிமைந்தன் - 2 நிமிடங்கள்


0 comments:
Post a Comment