topbella

Saturday, June 21, 2025

வழிமேல் மலர் வைத்து..


வழிமேல் மலர் வைத்து
வரவேற்பு தந்தவளே..
புன்னகைக்கப் பூக்கிறாய்
பூரிப்பில் உதிர்கிறாய்..

கண்ணசைவில் விழுகிறாய்
கை தொடக் கரைகிறாய்
விரல் தீண்டிப் பார்க்கவோ
தரை தொடுகிறாய்..

விண்ணுயர்ந்த நெடு மரமாய்
விழாக்காணும் பூச்சரமாய்
மண்ணிலே புரள்கிறாய்..
மனதிற்குள் எழுகிறாய்!

என்னவளே..
எனக்காகக் பார்த்திருந்தாயா
மலர் தூவிக் காத்திருந்தாயா?!

✍️ *நெல்லை அன்புடன் ஆனந்தி*

Photos by: @nellaianbudanananthi

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)