topbella

Tuesday, April 27, 2010

முகம்..!

கவிதை ஒண்ணு எழுதலாம்னு நினைச்சேங்க.. சரி எழுதறது தான் எழுதறோம்.. அதையே என் தோழி ஒருவர் அழைப்பிற்கிணங்க  "கவிதை முகத்தில்" போடலாம்னு... எழுதி போட்டாச்சு..

அப்படி என்ன தான் எழுதினேன்னு நீங்க பார்க்க வேண்டாமா??

வளர்ந்து வரும் "கவிதை முகத்தில்", சென்ற வாரம், கொடுக்கப்பட்ட தலைப்பு "முகம்"... அதையே முதல் வார்த்தையாய் கொண்டு கவிதை எழுத வேண்டும்..!!


அத்தலைப்பில் நான் சமர்ப்பித்த கவிதை.. இங்கே உங்களுக்காக...!!  
 

உன் எண்ணத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி..
உன் கோபத்தை காட்டினால் குரூரனாவாய்..
எல்லாவற்றுக்கும் சிரித்தாய் என்றால்
ஏமாளி ஆகி போவாய்...
எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் இருந்தால்
எமட்டன் ஆவாய்..
எரிச்சலைக் காட்டினால்
எதிரி ஆகிப் போவாய்..
எதிர்மறை உணர்ச்சி காட்டினால்..
எள்ளலுக்கு ஆளாகி போவாய்.. சரி பிறகு
எப்படித்தான் என் முகத்தை வைத்திருப்பது?
எழிலாக ஒரு சிரிப்பு..
ஒயிலாக ஒரு நகைப்பு..
சாந்தமாய் ஒரு பார்வை..
சக்தி தருவதாய் ஒரு முறுவல்..
சங்கேதமாய் ஒரு சேதி..
சாஸ்வதமாய் ஒரு புன்னகை..
இத்தனையும் உன் முகத்தில்
இயல்பாய் வருமென்றால் உன்னை போல்
இவ்வுலகில் அதிர்ஷ்டஷாலி யாருளரோ??
...அன்புடன் ஆனந்தி 

61 comments:

எல் கே said...

//
எதிர்மறை உணர்ச்சி காட்டினால்..
எள்ளலுக்கு ஆளாகி போவாய்.. //
உண்மை.

ஆமாம் இது வசன கவிதையா???
//இத்தனையும் உன் முகத்தில்
இயல்பாய் வருமென்றால் உன்னை போல்
இவ்வுலகில் அதிர்ஷ்டஷாலி யாருளரோ//

கண்டிப்பா அதிர்ஷ்டஷாலிதான்

மதுரை சரவணன் said...

என் முகம் மறந்தேன்
உன் கவி முகம் கண்டு.
நீ சொல்வது போல்
உலகில் எத்தனை எத்தனை
முகங்கள் ...!
தயவு செய்து...
உன் சொந்த முகம்
மாற்றிக் கொள்ளாதே...
உன் சுயத்தை இழந்து விடாதே!

அன்புடன் மலிக்கா said...

மிக அருமையாக இருக்கு ஆனந்தி வாழ்த்துக்கள்..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சரவணன்
//என் முகம் மறந்தேன்
உன் கவி முகம் கண்டு.
நீ சொல்வது போல்
உலகில் எத்தனை எத்தனை
முகங்கள் ...!
தயவு செய்து...
உன் சொந்த முகம்
மாற்றிக் கொள்ளாதே...
உன் சுயத்தை இழந்து விடாதே!//

உங்கள் பதில் கவிதை.. அருமை..
வருகைக்கும் நன்றி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@LK
//ஆமாம் இது வசன கவிதையா??//

அதெல்லாம் தெரியாதுங்க..

நன்றி..

நாடோடி said...

க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌...... எழுதி க‌ல‌க்குங்க‌...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@அன்புடன் மலிக்கா
//மிக அருமையாக இருக்கு ஆனந்தி வாழ்த்துக்கள்.. //

வாழ்த்துக்கு ரொம்ப நன்றி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@நாடோடி
//க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌...... எழுதி க‌ல‌க்குங்க‌... //

ரொம்ப நன்றி.. :)

dheva said...

என்னங்க... ஆனந்தி.... அந்த பக்கம் சித்ராவோட கவிதை.. முகம் பற்றி.. ! இந்த பக்கம் நீங்க...

//எழிலாக ஒரு சிரிப்பு..
ஒயிலாக ஒரு நகைப்பு..
சாந்தமாய் ஒரு பார்வை..
சக்தி தருவதாய் ஒரு முறுவல்..
சங்கேதமாய் ஒரு சேதி..
சாஸ்வதமாய் ஒரு புன்னகை..
//

ரொம்ப இயல்பா இருத்தலே... அழாகன முகம்...அதுவே....சத்யமான அகம்! நல்லா இருக்கு ஆனந்தி....தொடருந்து நிறைய கவிதைகள் எழுதுங்கள்!

Chitra said...

கவிதையில் எதார்த்தமாக விஷயங்களை சொல்லி இருக்கீங்க. பாராட்டுக்கள்!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@தேவா
//என்னங்க... ஆனந்தி.... அந்த பக்கம் சித்ராவோட கவிதை.. முகம் பற்றி.. ! இந்த பக்கம் நீங்க... //

நான், சித்ரா மற்றும் சில நண்பர்கள் "முகம்" என்னும் தலைப்பில் எழுதினோம்..
ஒரே நேரத்தில் போஸ்ட் பண்ணா நல்லா இருக்குமேன்னு ஒரு ஐடியா.. அதான்..!

// ரொம்ப இயல்பா இருத்தலே... அழாகன முகம்... அதுவே....சத்யமான அகம்! நல்லா இருக்கு ஆனந்தி....தொடருந்து நிறைய கவிதைகள் எழுதுங்கள்! //

ரொம்ப நன்றி தேவா.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சித்ரா
// கவிதையில் எதார்த்தமாக விஷயங்களை சொல்லி இருக்கீங்க. பாராட்டுக்கள்! //

தேங்க்ஸ் சித்ரா.. :)

Jaleela Kamal said...

முகம் பற்றிய கவிதை மிக அருமை.

வாழ்த்துக்கள்.

S Maharajan said...

//சாஸ்வதமாய் ஒரு புன்னகை//

ஆஹா!இன் முகைத்தேன்

கண்ணா.. said...

கவிதை நல்லாத்தான் இருக்கு...ஆனா நீங்களும் புரியுற மாதிரியே எழுதி மூஞ்சி புத்தகத்துல போட்டீங்களே....

கவிதைக்கு பேஸிக் குவாலிபிகஷேனே... யாருக்கும் புரியக்கூடாததுதான்....

சைவகொத்துப்பரோட்டா said...

அடேங்கப்பா!!! இந்த முகமும் நல்லா இருக்கே,
வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

பேஷ்....பேஷ்... சும்மா கலக்கிட்டேள் போங்கோ...

ஜில்தண்ணி said...

பக்கா பக்கா
"முகம்"
பிச்சிபுட்டீங்க போங்க

செந்தில்குமார் said...

எழிலாக ஒரு சிரிப்பு..
ஒயிலாக ஒரு நகைப்பு..
சாந்தமாய் ஒரு பார்வை..
சக்தி தருவதாய் ஒரு முறுவல்..
சங்கேதமாய் ஒரு சேதி..
சாஸ்வதமாய் ஒரு புன்னகை..

அருமை ஆனந்தி

முகம் சுழிக்கால்
ஒரு பொன்
முறுவல் வரிகளில்......

நேசமித்ரன் said...

வாழ்த்துக்கள்..

Priya said...

மிகவும் அருமையா இருக்கு உங்க கவிதை, ஆனந்தி!

Menaga Sathia said...

கவிதை அருமையாக இருக்கு!!

Anonymous said...

எழிலாக ஒரு சிரிப்பு..
ஒயிலாக ஒரு நகைப்பு..
சாந்தமாய் ஒரு பார்வை..
சக்தி தருவதாய் ஒரு முறுவல்..
சங்கேதமாய் ஒரு சேதி..
சாஸ்வதமாய் ஒரு புன்னகை..

நீங்க சொன்னது சரிதான், ஹ்ம்ம்...
ரொம்ப nalla irukkunga.....

lekha said...

wow,kavidhai arumaiyaaga irukku..so,ippo enakku mugathai eppadi vaikka vaendum endru therinchu pochu..thx..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Jaleela
//முகம் பற்றிய கவிதை மிக அருமை.
வாழ்த்துக்கள் //

ரொம்ப நன்றி.. ஜலீலா..

@S Maharajan
//ஆஹா!இன் முகைத்தேன் //

ரொம்ப நன்றி..

@கண்ணா..
//கவிதை நல்லாத்தான் இருக்கு...ஆனா நீங்களும் புரியுற மாதிரியே எழுதி மூஞ்சி புத்தகத்துல போட்டீங்களே....
கவிதைக்கு பேஸிக் குவாலிபிகஷேனே... யாருக்கும் புரியக்கூடாததுதான்.... //

இப்ப நீங்க என்ன சொல்ல வரீங்க?.. அத சொல்லுங்க முதல்ல..
ரொம்ப நன்றி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சைவகொத்துப்பரோட்டா
//அடேங்கப்பா!!! இந்த முகமும் நல்லா இருக்கே,
வாழ்த்துக்கள்//

ரொம்ப நன்றி.. :)

@ஜெய்லானி
//பேஷ்....பேஷ்... சும்மா கலக்கிட்டேள் போங்கோ... //

ரொம்ப நன்றிங்கோ.. :)

prince said...

/எழிலாக ஒரு சிரிப்பு..
ஒயிலாக ஒரு நகைப்பு..
சாந்தமாய் ஒரு பார்வை..
சக்தி தருவதாய் ஒரு முறுவல்..
சங்கேதமாய் ஒரு சேதி..
சாஸ்வதமாய் ஒரு புன்னகை../
முயற்சி பண்றேன் ...நல்லாஇருக்கு கவிதை

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ ஜில்தண்ணி
//பக்கா பக்கா... "முகம்"
பிச்சிபுட்டீங்க போங்க //

ரொம்ப நன்றி.. :)

@ செந்தில்குமார்

//அருமை ஆனந்தி

முகம் சுழிக்கால்
ஒரு பொன்
முறுவல் வரிகளில்......//

ரொம்ப நன்றி :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ நேசமித்ரன்
// வாழ்த்துக்கள்.. //

ரொம்ப நன்றி..

@ Priya
//மிகவும் அருமையா இருக்கு உங்க கவிதை, ஆனந்தி!//

ரொம்ப நன்றி பிரியா.. :)

@ Mrs.Menagasathia
//கவிதை அருமையாக இருக்கு!!//

ரொம்ப நன்றிங்க.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ FIRE FLY
//நீங்க சொன்னது சரிதான், ஹ்ம்ம்...
ரொம்ப nalla irukkunga..... //

ரொம்ப நன்றி..

@ chandralekha
//wow,kavidhai arumaiyaaga irukku..so,ippo enakku mugathai eppadi vaikka vaendum endru therinchu pochu..thx..//

ஹ்ம்ம் ஹ்ம்ம்.. ஓகே ஓகே..
ரொம்ப தேங்க்ஸ் லேகா :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@பிரின்ஸ்
// முயற்சி பண்றேன் ...நல்லாஇருக்கு கவிதை //

ரொம்ப நன்றி.

Mythili (மைதிலி ) said...

"எழிலாக ஒரு சிரிப்பு..
ஒயிலாக ஒரு நகைப்பு..
சாந்தமாய் ஒரு பார்வை..
சக்தி தருவதாய் ஒரு முறுவல்..
சங்கேதமாய் ஒரு சேதி..
சாஸ்வதமாய் ஒரு புன்னகை.."
இத்தனையும் உன்னுடைய முகத்தில் பார்த்தேன்..

Anonymous said...

am the first

am the first

apdinu chollamnu partha

lk vanthu vadiya thokitupoitanga.

it s okk..

mm valakkkam pola..

mugam..

mudan muriya

padthudan kavithaigal..

ennai viyanga vaikkindrana..

nandri
valga valamudan
complan surya

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@மைதிலி
//"எழிலாக ஒரு சிரிப்பு..
ஒயிலாக ஒரு நகைப்பு..
சாந்தமாய் ஒரு பார்வை..
சக்தி தருவதாய் ஒரு முறுவல்..
சங்கேதமாய் ஒரு சேதி..
சாஸ்வதமாய் ஒரு புன்னகை.."
இத்தனையும் உன்னுடைய முகத்தில் பார்த்தேன்..//

என்னப்பா இது.. இப்படி டச் பண்ணிட்டீங்க..
ரொம்ப தேங்க்ஸ் :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ Complan Surya
//am the first
am the first
apdinu chollamnu partha
lk vanthu vadiya thokitupoitanga.
it s okk..
mm valakkkam pola..
mugam.. mudan muriya
padthudan kavithaigal..
ennai viyanga vaikkindrana.. //

என்னோட முந்தின கவிதைகள் எதுவும் நீங்க பார்க்கல போலிருக்கு.. :)
அவைகளும் படங்களுடன் தான் உள்ளது.. நேரமிருந்தால் பாருங்க.. ரொம்ப நன்றி.

Sanjay said...

//எழிலாக ஒரு சிரிப்பு..
ஒயிலாக ஒரு நகைப்பு..
சாந்தமாய் ஒரு பார்வை..
சக்தி தருவதாய் ஒரு முறுவல்..
சங்கேதமாய் ஒரு சேதி..
சாஸ்வதமாய் ஒரு புன்னகை..//

APPLAUSE!!!!! BEAUTIFUL!!!! : )

//சாஸ்வதமாய் ஒரு புன்னகை.//

Thats the Icing on the Cake ;-)

தமிழ் உதயம் said...

முகம் பலரகம். ஒவ்வொன்ரும் ஒரு ரகம்.

Thenammai Lakshmanan said...

சாந்தமாக ஒரு பார்வை சக்தி தருவதக ஒரு முறுவல்... இது ரெண்டும் அருமை ஆனந்தி

ஜெயந்த் கிருஷ்ணா said...

எழிலாக ஒரு சிரிப்பு..
ஒயிலாக ஒரு நகைப்பு..
சாந்தமாய் ஒரு பார்வை..
சக்தி தருவதாய் ஒரு முறுவல்..
சங்கேதமாய் ஒரு சேதி..
சாஸ்வதமாய் ஒரு புன்னகை..
இத்தனையும் உன் முகத்தில்

என் முகம் பார்த்து
நீ சிரித்தால் என்னை
அண்ணனாக நினைத்து ......

சத்தியமா வருங்க.,

ஸ்ரீராம். said...

சிரித்த முகமும் கண்டு...!

ரசிகன்! said...

எழிலாக ஒரு சிரிப்பு..
ஒயிலாக ஒரு நகைப்பு..
சாந்தமாய் ஒரு பார்வை..
சக்தி தருவதாய் ஒரு முறுவல்..
சங்கேதமாய் ஒரு சேதி..
சாஸ்வதமாய் ஒரு புன்னகை..///


இது அட்டகாசம்!!!
அழகான சொற்பிரயோகம்!!!

pattchaithamizhan said...

Thaangal kooriya antha mugam en mugam thaan enbathai inneratthil sollikkolla aasaippadugiraen...:-D

pattchaithamizhan said...

Supppppperr...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்

//APPLAUSE!!!!! BEAUTIFUL!!!! : )

ஹ்ம்ம்ம்.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. :)
( நீங்க கிளாப் பண்ணது.. எனக்கு இங்க வர கேட்டிருச்சு.. ;) )

//சாஸ்வதமாய் ஒரு புன்னகை.//
Thats the Icing on the Cake ;-)//

Sooo sweet... cake gnabaga paduththiteengalae...
sari vandhathu thaan vantheenga oru cake eduthuttu vara koodathaa?? :) :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@தமிழ் உதயம்

//முகம் பலரகம். ஒவ்வொன்ரும் ஒரு ரகம்//


கரெக்ட்.. ரொம்ப நன்றி.. :)

@thenammailakshmanan
//சாந்தமாக ஒரு பார்வை
சக்தி தருவதக ஒரு முறுவல்...

இது ரெண்டும் அருமை ஆனந்தி //

ரொம்ப நன்றி தேனக்கா.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@வெறும்பய
//எழிலாக ஒரு சிரிப்பு..
ஒயிலாக ஒரு நகைப்பு..
சாந்தமாய் ஒரு பார்வை..
சக்தி தருவதாய் ஒரு முறுவல்..
சங்கேதமாய் ஒரு சேதி..
சாஸ்வதமாய் ஒரு புன்னகை..
இத்தனையும் உன் முகத்தில்

என் முகம் பார்த்து
நீ சிரித்தால் என்னை
அண்ணனாக நினைத்து ......
சத்தியமா வருங்க//

உங்க கமெண்ட்-க்கு ரொம்ப நன்றிங்க.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஸ்ரீராம்.
//சிரித்த முகமும் கண்டு...! //

ரொம்ப நன்றி.. ஸ்ரீராம். :)

@ரசிகன்!

//இது அட்டகாசம்!!!
அழகான சொற்பிரயோகம்!!! //

ரொம்ப நன்றி ரசிகன் :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ Thamizh Senthil
//Thaangal kooriya antha mugam en mugam thaan enbathai inneratthil sollikkolla aasaippadugiraen...:-D //

.....சரிங்க.. நீங்க சொன்ன சரி தான்.. (அந்த தம்ப்ஸ் அப் ஸ்மைலி எங்க காணோம்... :O )

// Thamizh Senthil said...
Supppppperr...//

.......ரொம்ப நன்றி செந்தில் :-)

'பரிவை' சே.குமார் said...

மிக அருமையாக இருக்கு ஆனந்தி வாழ்த்துக்கள்..

பித்தனின் வாக்கு said...

good ananthi, keep it up

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சே.குமார்
//மிக அருமையாக இருக்கு ஆனந்தி வாழ்த்துக்கள்.. //

ரொம்ப நன்றி குமார் :)

@பித்தனின் வாக்கு
//good ananthi, keep it up //

ரொம்ப நன்றி.. :)

அண்ணாமலை..!! said...

தலைப்புக்குக் கவிதை எழுதுறது உண்மையிலேயே கொஞ்சம் சிரமம்தாங்கோ...!!
நல்லாவே எழுதியிருக்கீங்க..!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@அண்ணாமலை..!!
//தலைப்புக்குக் கவிதை எழுதுறது உண்மையிலேயே கொஞ்சம் சிரமம்தாங்கோ...!!
நல்லாவே எழுதியிருக்கீங்க..! //

ரொம்ப நன்றிங்க.. :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கலக்கல் ஆனந்தி. வார்த்தை ஜாலம் தெறிக்குதே வார்த்தைல... வாழ்த்துக்கள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ அப்பாவி தங்கமணி
//கலக்கல் ஆனந்தி. வார்த்தை ஜாலம் தெறிக்குதே வார்த்தைல... வாழ்த்துக்கள்//

உங்க கமெண்ட்-க்கு ரொம்ப நன்றி.. :)

தமிழ் அமுதன் said...

///எழிலாக ஒரு சிரிப்பு..
ஒயிலாக ஒரு நகைப்பு..
சாந்தமாய் ஒரு பார்வை..
சக்தி தருவதாய் ஒரு முறுவல்..
சங்கேதமாய் ஒரு சேதி..
சாஸ்வதமாய் ஒரு புன்னகை..///

முடியுமா ..? அப்படி ..முடிந்தால் அவர் மட்டும் அல்ல அவர் உடன் இருப்பவர்களும் அதிர்ஷ்டசாலிகள் தான்...!

அன்புத்தோழன் said...

//எழிலாக ஒரு சிரிப்பு..
ஒயிலாக ஒரு நகைப்பு..
சாந்தமாய் ஒரு பார்வை..
சக்தி தருவதாய் ஒரு முறுவல்..
சங்கேதமாய் ஒரு சேதி..
சாஸ்வதமாய் ஒரு புன்னகை..//

Epponga yen foto paatheenga....
sollave illa... ;-) ha ha

Chummaa... Kavidha nallaaruku....

மெல்லினமே மெல்லினமே said...

antha mathiri maugam ulla ponnu
kedacha evvalavu nalla irukkum?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஜீவன்(தமிழ் அமுதன் )
//முடியுமா ..? அப்படி ..முடிந்தால் அவர் மட்டும் அல்ல அவர் உடன் இருப்பவர்களும் அதிர்ஷ்டசாலிகள் தான்...! //

நினைத்தால் முடியும்.. :)
நீங்க சொல்றது கரெக்ட் தான்.. வருகைக்கு நன்றி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ அன்புத்தோழன்
//Epponga yen foto paatheenga....
sollave illa... ;-) ha ha

Chummaa... Kavidha nallaaruku....//

ஹ்ம்ம்.. இப்ப தெரிஞ்சிகிட்டேன்.... :)
வருகைக்கும் கமெண்ட்-கும் நன்றி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ மெல்லினமே மெல்லினமே

//antha mathiri maugam ulla ponnu
kedacha evvalavu nalla irukkum?//

ஹ்ம்ம்.. நல்லா இருக்கும்.. நன்றி.. :)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)