இன்பம் எதுவென்றேன்
இனியவள் உன்னுடன்
இயைந்து இருப்பதென்றாய்..
துன்பம் எதுவென்றேன்
நீ இவ்வாறு தூர இருந்தே
என்னை துயரத்தில்
ஆழ்த்துவதென்றாய்...
காதல் எதுவென்றேன்
உன் கண்களோடு என்
கண்கள் கலப்பதென்றாய்...
காமம் எதுவென்றேன்
உனைக் கண்டவுடன் என்
கைகளுக்குள் சிறை
வைப்பதென்றாய்...
மோகம் எதுவென்றேன்
மூச்சிலும் பேச்சிலும்
முக்காலமும் நீயே
நிறைந்திருப்பதென்றாய்..
தேடல் எதுவென்றேன்
தெரிந்தும் என்னுயிரை
உனக்குள் தேடித்
திரிவதென்றாய்...!!!
...அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)

.jpg)


