உறவுகளின் உன்னதம்
உருக்குலைந்து நிற்க...
கனவுகளின் எல்லைகள்
கரையுடைத்து கடக்க..
மாயைகள் சூழ்ந்த
மனதின் வலிகள்
மௌனமாய் தாக்க...
மகேசன் துணை நாடி
மங்கை நான் நிற்கிறேன்..
இருந்தும் இல்லாததும்
புரிந்தும் தெளியாததும்
அறிந்தும் அறியாதது போல்
அமைதியாய் நகர்கிறேன்...
ஆர்ப்பாட்டம் அன்பிற்கு
அவசியம் இல்லை...
அவரவர் விதிப்படி
ஆகவேண்டியது ஆகட்டும்...
உணர்விற்கு எல்லையில்லை
உரிமைக்கு எல்லை உண்டாம்...
கடமைக்கு காவல் இல்லை
புலன்களுக்கு வேலி இல்லை...!
...அன்புடன் ஆனந்தி
(படம்: நன்றி கூகிள்)


.jpg)

