topbella

Tuesday, July 9, 2013

மனதின் வலிகள்...!


உறவுகளின் உன்னதம்
உருக்குலைந்து நிற்க...
கனவுகளின் எல்லைகள் 
கரையுடைத்து கடக்க..

மாயைகள் சூழ்ந்த 
மனதின் வலிகள் 
மௌனமாய் தாக்க...
மகேசன் துணை நாடி 
மங்கை நான் நிற்கிறேன்..

இருந்தும் இல்லாததும் 
புரிந்தும் தெளியாததும் 
அறிந்தும் அறியாதது போல் 
அமைதியாய் நகர்கிறேன்...

ஆர்ப்பாட்டம் அன்பிற்கு 
அவசியம் இல்லை...
அவரவர் விதிப்படி 
ஆகவேண்டியது ஆகட்டும்...

உணர்விற்கு எல்லையில்லை 
உரிமைக்கு எல்லை உண்டாம்...
கடமைக்கு காவல் இல்லை
புலன்களுக்கு வேலி இல்லை...!

...அன்புடன் ஆனந்தி

(படம்: நன்றி கூகிள்)

Monday, July 8, 2013

பாலக் பன்னீர்...!


தேவையான பொருட்கள்:

பன்னீர் - 1 கப்
கீரை - 3 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
மிளகாய் வத்தல் பொடி - 1 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி - சிறிது
பால் (அல்லது) க்ரீம் - சிறிதளவு

செய்முறை:

  • பன்னீரை சின்ன சின்ன துண்டுகளாக்கி, எண்ணையில் பொரித்து தனியே வைக்கவும்.
  • கீரையை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவைத்து, மிக்சியில் அரைத்து கொள்ளவும். (ரொம்பவும் மையாய் அரைக்க வேண்டியதில்லை)
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், சீரகம் போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். (சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரம் வதங்கி விடும்)
  • வெங்காயம் நன்கு வதங்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளியும் நன்கு வெந்ததும்.. அதில் மிளகாய்ப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இதில் அரைத்து வைத்த கீரையை சேர்த்து, அதில் தேவைக்கேற்ப உப்பும் சேர்க்கவும்.
  • நன்கு கொதித்ததும், பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து, அத்துடன் சிறிது பால் அல்லது க்ரீம் சேர்த்து இறக்கவும்.
...அன்புடன் ஆனந்தி 

Wednesday, July 3, 2013

விதைத்த விதைகள்...!


விதைத்த விதைகள்
வீண் போவதில்லை 
விளையும் துன்பம் எதுவும் 
விதியின் வினைப்பயன் 
மட்டுமே இல்லை..

கடந்து போகும் நேரம் எதுவும் 
கைக்கு எட்டுவது இல்லை 
கலைந்து போன உறவுகள் எளிதில் 
கை கூடுவதும் இல்லை..

மறைத்து வைத்த துன்பம் எல்லாம் 
மனதில் நிற்பதும் இல்லை 
மனதில் நின்ற எதுவும் 
மறைந்து போவதும் இல்லை..

வார்த்தைகள் தவறி விட்டால் 
வாழ்க்கையில் இன்பம் இல்லை 
வாய் பேசாது இருப்பதாலேயே 
வக்கற்றவன் ஆகி விடுவதுமில்லை..

தேடி வந்த சொந்தங்கள் 
தேக்கி வைத்த குமுறல்கள் 
தேளாய் கொட்டியும் 
நீ தேக்கி வைத்த 
பாசம் மறைவதில்லை..!

...அன்புடன் ஆனந்தி


(படம்: நன்றி கூகிள்)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)