
எண்ணற்ற வலிகள்...
முந்திக்கொண்டு நிற்கும்
முரண்பாடுகள்...
கண்ணுக்கு தெரியாத
கவலை ரேகைகள்...
எண்ணத்தில் சிக்கி நிற்கும்
எதிர்ப்பு உணர்ச்சிகள்...
உள்ளத்தில் ஒளிந்து கிடக்கும்
உன்னத உறவினை
உள்வைத்துச் சிறை பூட்டி
உணர்ந்து மட்டுமே
உயிர் சுமந்து அலைகிறேன்..
கண் சுமந்த காதல்
கருத்தில் நிறைந்த தேடல்
காரணம் சொல்ல
கண்ணீர் துளி போதும்..
ஏதும் நினைக்காமல்
எதையும் மறைக்காமல்
என்னுடனே நீ இருந்தும்..
யாதும் நன்மைக்கே என்று
யாம் வாழ்ந்து செல்வோம்...!
~அன்புடன் ஆனந்தி
\
(படம்: கூகிள், நன்றி)


