topbella

Thursday, October 27, 2011

காலமே உன் காவலில்...!


கிட்டேயே இருக்கும்
கிறுக்கு பிடிக்க வைக்கும்
எதிரிலேயே இருக்கும்
எவர் தடுத்தும் நிற்காது
எதற்கும் மயங்காது...
ஏமாற்றியே சிரிக்கும்..

நெருங்கியே வரும்
நெருப்பாய் தாக்கும்..
அருகிலேயே அமர்ந்து
அணுவணுவாய் வதைக்கும்...

நெஞ்சம் நிறைத்து...
நினைவை கலைத்து...
கண்பார்வையில் கூட...
கஞ்சத் தனம் காத்து...
கழிவிரக்கம் சிறிதுமின்றி
கைது செய்தே 
காவலில் வைக்கும்...

உணர்வுகளை உருக்கி..
உள்மனதில் உறுத்தி..
உலக இயக்கம் கூட..
உருத் தெரியாமல்.. 
நிறுத்தி வைக்கும்... நீ 

எப்போது எனை நெருங்கி
தப்பாது மனம் விரும்பி
கை சேர்ப்பாய் கனவலையை..
காலமே உன் காவலில்
என் காதலே வேள்வியில்..!

...அன்புடன் ஆனந்தி 


(படம்: நன்றி கூகிள்)

10 comments:

'பரிவை' சே.குமார் said...

//காலமே உன் காவலில்
என் காதலே வேள்வியில்..!//

அருமையான கவிதை... வாழ்த்துக்கள்.

ISR Selvakumar said...

கிட்டேயே இருக்கும்
கிறுக்கு பிடிக்க வைக்கும்
எதிரிலேயே இருக்கும்
எவர் தடுத்தும் நிற்காது
எதற்கும் மயங்காது...

-அமர்க்களமான வரிகள் தங்கை!

சாந்தி மாரியப்பன் said...

//நெஞ்சம் நிறைத்து...
நினைவை கலைத்து...
கண்பார்வையில் கூட...
கஞ்சத் தனம் காத்து...
கழிவிரக்கம் சிறிதுமின்றி
கைது செய்தே
காவலில் வைக்கும்...//

ரொம்ப ரசிச்சேன்..

நம்பிக்கைபாண்டியன் said...

நெருங்கியே வரும்
நெருப்பாய் தாக்கும்..
அருகிலேயே அமர்ந்து
அணுவணுவாய் வதைக்கும்...

காதலின் தவிப்பினை சொல்லும் அழகிய வரிகள்!

Vijaya Vellaichamy said...

கவிதை அற்புதம்!

செந்தில்குமார் said...

கிட்டேயே இருக்கும்கிறுக்கு பிடிக்க வைக்கும்எதிரிலேயே இருக்கும்எவர் தடுத்தும் நிற்காது....

காலமே உன் காவலில்என் காதலே வேள்வியில்..!

சரியான வரிகள் ஆனந்தி....காவலில்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சே. குமார்
வாங்க. கருத்துக்கு நன்றி! :)


@r . selvakkumar
வாங்க அண்ணா... ரசித்து சொன்ன கருத்திற்கு நன்றி அண்ணா! :)


@அமைதிச்சாரல்
வாங்க.. ரொம்ப நன்றிங்க. ரசித்து சொன்ன கருத்திற்கு. :)


@நம்பிக்கைபாண்டியன்
வாங்க. ரசித்து இட்ட கருத்திற்கு நன்றி! :)


@விஜயா வெள்ளைச்சாமி
வாங்க விஜி. தேங்க்ஸ் மா..! :)


@Rathnavel
வாங்க.. நன்றி ஐயா..! :)


@செந்தில்குமார்
ஹ்ம்ம். வாங்க. கருத்திற்கு நன்றி! :)

Anonymous said...

உங்கள் கவிதை மிகவும் அருமையாக உள்ளது ஆனந்தி :)

விச்சு said...

அசத்தலான வரிகள். வாழ்த்துக்கள்.த.ம 4.

Surya Prakash said...

//அருகிலேயே அமர்ந்து
அணுவணுவாய் வதைக்கும்///

வரிகள் பழசை நினைவு படுத்தி விட்டன .. ம்‌ம்‌ம் அவ எங்க இருக்களோ?



எனிவே நன்றி சகோ.......

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)