topbella

Friday, April 29, 2011

நிலா...!


கொஞ்சு தமிழையும் 
பிஞ்சுக் குழந்தையையும் 
வஞ்சி அழகையும் 
மிஞ்சும் வண்ணம்
வகையாய் வாரிக்கொண்ட 
வட்ட வெண்ணிலவே...!

வெட்ட வெளி வானத்தில்
வெகுளியாய் உன் உலா..
நட்சத்திரக் கூட்டத்தில்
நாயகியே நீ தானோ...!

உள்ளக் கிடங்கில்
முழு நிலவாய் நீ தோன்றி
முத்தமிட்ட குழந்தையைப் போல்
மொத்தமாய் தோன்றி விட்டு
சத்தமின்றி மறைவதும் ஏனோ?

நங்கை முகம் மலர்ந்தால்
அவள் முழு நிலவாய்...
அவள் கன்னம் சிவந்து
தலை கவிழ்ந்தாலோ
தணிக்கும் பௌர்ணமியாய்...!

நீ தேய்ந்து மறைந்த வேளையில்
உனைத் தேடத் துடிக்கும் மனது
வசீகரமாய் நீ வளரும் போது
வந்தே உனைச் சேரச் சொல்லும்...!

குற்றாலச் சாரல் போல்
குளிர் நிலவில் கொண்டவனுடன்
குதூகலமாய் பேசுகையில்
குறையாத அன்புடனே
பறை சாற்றும் காதல் அங்கே...!

...அன்புடன் ஆனந்தி 

Thursday, April 21, 2011

உன் சிரிப்பில்..!

Free photo Happy Smile Woman Back Shoulder Lady People - Max Pixel


உன் சிரிப்பில் என்
சிந்தனை இழந்தேன்..
உன் பார்வையில் என்
நிம்மதி இழந்தேன்...

இதயத்தை வருடி
இன்பத்தை அளித்து
என் இறுதி வரை
துணை வரத்தான்
உறுதியுடன் இருந்தாயே...

உத்தரவு நீ தந்தால்...
உன்னை இமைக்குள் காத்து
இக்கணமே இவ்விடமே
என் உயிர் நீப்பேனே...

ஓயாத உன் நினைவு
என்னை உயிர்வரை எச்சரிக்க
உருகாத உன்னுள்ளம்
ஊமையாய் ஆனதென்ன?


...அன்புடன் ஆனந்தி

Wednesday, April 13, 2011

வாழ்க்கைச்சக்கரம்...!


எத்தனை விஷயங்கள்
எண்ணிலடங்கா ஆசைகள்
எதுவும் செய்ய முடியா
எதிர்க்கும் சக்தியற்ற
ஏகாந்த மனோநிலை...!

அத்தனைக்கும் ஆசைப்படு என்றே
பித்தன் ஒருவன் சொன்னான்
சரி எத்தனைக்கு ஆசைப்பட்டால்
ஏதாவது ஒன்று கிடைக்கும்....?

இத்தனைக்கும் இயல்பாய்
இருக்கவென்றே இயன்றவரை
முயன்ற போதும்  
இசையாத மனதினை 
என்ன சொல்லி 
இசையச்செய்ய....?

சமயத்தில் கடந்த காலத்தில்
நிகழ்ந்த நிகழ்வுகள் எல்லாம்
நிகழும் காலத்திலோ
நிலைத்து நிற்பது இல்லை...!

நிகழ்காலத்தில் நடந்த எல்லாம்
எதிர்காலத்தில் தொடர்வதில்லை...
அப்படித் தொடரா நேரமோ 
அங்கே தொடரும் பெருங்கவலை...!

ஓர் நாளில் ஓராயிரம் மாற்றங்கள்
அமைதியான ஓடையாய்
ஆர்ப்பாட்டம் இல்லா அருவியாய்
கலங்களில்லா நீர்த்தேக்கமாய்
கற்பனையில் தான் வாழ முடியுமோ...?

~அன்புடன் ஆனந்தி 





About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)