topbella

Sunday, June 5, 2016

இதன் பேர் தான் காதலா...?!



உள்ளத்தை உருகச் செய்யும்..
உதட்டில் புன்னகை வருவிக்கும்..
ரகசியம் பேசச் சொல்லும்..
ராத்திரியில் சிரிக்க வைக்கும்..

தனித்தமர்ந்தே சிந்தனை செய்யும்..
தாவி விண்ணில் பறக்கச் செய்யும்..
துடிப்புடன் இருக்கச் செய்யும்..
தூக்கத்தையும் கெடுத்துச் செல்லும்..

உலக நடப்புகளை உதறி தள்ளும்..
உள்ளுக்குள் ஒய்யார நடை போடும்..
கனவுலகில் வாழ்க்கை நடத்தும்..
நிகழ்வுகளில் கனாக் காணும்..

மனதிற்குள் மாளிகை கட்டும்..
மாளிகையில் தன் துணை நிறுத்தும்..
மரம், அருவி, குருவியுடன் பேசித் திரியும்..
மத்தளமே இல்லாமல் வகையாய் வாசிக்கும்..

அனுசரணையாய் நடந்து கொள்ளும்..
ஆத்திரப்பட ஆழ்ந்து யோசிக்கும்..
சாத்திரம் பேசி செல்லும்..
சாதிக்க வலிமை கொடுக்கும்..

விண்மீன்களை விலைக்கு பேசும்..
விட்டு நகர்ந்தால் தர்க்கம் செய்யும்..
விவரணையாய் பேசச் சொல்லும்..
விதியையும் வெல்லச் செய்யும்..!

...அன்புடன் ஆனந்தி








About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)