topbella

Tuesday, March 29, 2011

பிறந்த நாள்...!


சுற்றம் நட்பின் வாழ்த்து
உன்னை மகிழ வைக்கும்
உயிர்ப்பு கொண்ட வித்து...!

உதட்டளவில் உபசரிப்பின்றி
உள்ளத்தில் வெறுப்பின்றி
ஒருவர் வாழ்த்திடினும்
உள்ளமெங்கும் மகிழ்ச்சி...!

புத்தாடை புனைய ஆசை
புதிதாக பிறக்க ஆசை
புதுப்பூவாய் மணக்க ஆசை
புத்துணர்வோடு இருக்க ஆசை...!

ஒவ்வோர் நிமிடமும்
ஒன்றாகச் சேர்த்து
ஒழுங்காய் ஏதேனும்
செய்திடவே ஆசை...!

வெறுப்பிருந்தால் மறக்க ஆசை...
விருப்பிருந்தால் உரைக்க ஆசை...
இதுவரை விட்டதெல்லாம்..
இனியேனும் எட்ட ஆசை...!

~அன்புடன் ஆனந்தி 

Friday, March 25, 2011

என் பெயர் வந்த காரணம்... தொடர்பதிவு...!


எல்லாரும் ஏற்கனவே வேண்டுமட்டும் எழுதி முடிச்சிட்டீங்க... இதுல நா வேற, புதுசா என்னத்த சொல்றது..... இருந்தாலும், சௌந்தர் மற்றும் அமைதிச்சாரல் என்னை மதிச்சு தொடர் பதிவு எழுத சொல்லிருக்காக..  அந்த மருவாதிக்காகத்தேன் எழுதுறேன்...! நீங்களும் கொஞ்சம் படிச்சிட்டு போங்கப்பு...! ( (@சௌந்தர்...என்ன உள்குத்துல எழுதச் சொன்னீங்களோ... யாருக்கு தெரியும்? அவ்வவ்)



          அது ஒரு அழகிய காலை வேளை.. விடிந்தும் விடியாத விடியற்காலை பொழுது..... சூரியன் எழவா? விழவா? என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்க..... பறவைகளின் மெல்லிய கீச் ஒலிகள்...... தெருக்களில் ஆட்கள் நடந்து செல்லும் அரவம்.... உறக்கத்தில் இருந்து மெதுவாய் விழித்து எழுந்தாள்..........
விரைந்து எழுந்த சூரியன்
விடியற் காலை என்றது...
குதூகலமான குயிலின் இசையில்..
கும்மிருட்டும் கூடி மறைந்தது...!                       
          ஹ்ம்ம் கும்ம்.. நல்லா கதை கேட்பீங்களே... இப்படி எல்லாம் சொல்லி ஒரு பில்ட்-அப்ப குடுக்கலாம்னு ஒரு ஆசை தான்... எனக்கே தெரியுது, இது கொஞ்சம் ஓவருன்னு.. ஹி ஹி ஹி... சாரி பார் தி டிஸ்டர்பன்ஸ்...!

          என் அம்மாவழி உறவில், அம்மா தான் பெரிய பெண் என்பதால், நான் தான் முதல் பேத்தி... நான் பிறந்த போது, கொஞ்சம் சிரமப்பட்டுத் தான் பிறந்தேனாம்... (தொப்புள் கொடி சுற்றி இருந்ததாம்) என் ஆச்சியின் (அப்பாவின் அம்மா) பெயரத் தான் எனக்கு வச்சாங்க.. அப்பொழுதெல்லாம், மாமியார் பெயர் சொல்லி அழைக்க முடியாதென்பதால், எனக்கு அழைக்கும் பெயராக ஆனந்தின்னு வச்சாங்க...!  

          ஒருவேளை நா எப்பவும் சந்தோசமா இருக்கணும்னு இந்த பேர் வச்சாங்களோ என்னவோ..! நான் முடிந்தவரை சந்தோசமா இருக்கறது, மட்டும் இல்லை, என்னை சேர்ந்தவர்களையும் சந்தோசமா இருக்க வைக்க முயற்சி பண்ணுவேன்..!

          வீட்டின் முதல் பேத்தி என்பதால்....செல்லம் ஜாஸ்தி தான்..!  ஆளுக்கு ஒரு பேர் வச்சி செல்லமா கூப்பிடுவாங்க....! (அதெல்லாம் என்னன்னு கேக்கப் பிடாது...)

          எஸ். கே. அவங்க, கல்பனாவின் பெயர் காரணம் ஒரு நாள் சொல்லப் போயி, நானும் ஆர்வத்தில் என் பெயர் காரணமும், சொல்லுங்கள் என்று கேட்டு அறிந்தேன்... அது இப்போ சமயத்துல என்னமா யூஸ் ஆகுது பாருங்க.. நன்றி எஸ்.கே.!


ஆனந்தி

பெயர் விளக்கம் - மகிழ்ச்சி, இன்பம்


இப்பெயரை உடையவர்கள் இயற்கையாகவே நட்பை விரும்புபவர்களாகவும் மற்றவர்களை சமூகரீதியாகவும் வணிகரீதியாகவும் புரிந்துகொள்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அதிகம் வீட்டை நேசிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களின் ஒரு சிறிய பலவீனம் காலதாமதம். சில சமயங்களில் தங்கள் திட்டங்களை ஏதோ ஒரு காரணத்திற்காகவோ கவனம் செலுத்த முடியாததாலோ தள்ளிப் போடுவார்கள்.


பெரும்பாலும் இதில் சொல்லியிருப்பது, எனக்கு ஒத்துப் போகும்.. அதிலும், அந்த கால தாமதம்... மேட்டர்...... (சரி சரி.. போ போ.. அதான் ஊருக்கே தெரியுமேன்னு சொல்றது கேட்டுருச்சி...) ரெம்பவே கரெக்ட்...!

எனக்கும் என் பெயர் பிடிக்கும்... எனக்கு ஆனந்தமாய் இருக்க பிடிக்கும்...! நா இருக்குற இடமும், கலகலப்பா இருக்கணும்னு தான் ஆசைப்படுவேன்..! என் அம்மா கூட சில நேரங்களில், ஒரு 10 நிமிஷம்.....ஒரு இடத்துல அமைதியா உக்காரு... உனக்கு 50 ரூபாய் தரேன்னு சொல்வாங்க... ஹி ஹி... நாங்க எப்புடி... ஒரு தரம் கூட அந்த அம்பது ரூபாய, வாங்கினது கிடையாது...!

ஸப்பாஹ்ஹ்ஹ்ஹ.... ஒரு வழியா என் கடமை முடிந்தது, நாளைக்கு நாலு பேர், தொடர் பதிவு எழுதாம விட்டுட்டேன்னு குறை சொல்லிறப் பிடாது இல்லியா...? அதுக்குத் தான்...இந்த பதிவு..!

இவ்ளோ நேரம்...... (பல்லக் கடிச்சிட்டு...) பொறுமையா... படிச்ச உங்க பேரு என்னாங்க....? முடிந்தால் சொல்லிட்டு போங்களேன்....! நன்றிகள் பல...!


~அன்புடன் ஆனந்தி 



(படம்: நன்றி கூகிள்)

Saturday, March 19, 2011

நிறுத்தி விடு....!

சுனாமியில் பாதிக்கப்பட்ட உயிர்களுக்கு சமர்ப்பணம்......


அத்தனை அழிவிற்கும் பின்
அழகாய்த் தான் உரு கொண்டேன்
அண்டை நாட்டவர் பாராட்டி
அசந்து நோக்கும் வண்ணம்
அத்தனையும் செய்து வந்தேன்...

என்ன தவறு செய்தேன் என்றே
எம்மக்களை எட்டி உதைத்தாய்
எதிர்பார்க்கா நேரம் அன்றோ
எப்படியோ போகட்டும் என்றே
எல்லை மீறி இயங்கி விட்டாய்....

நீ நிற்காது அடித்ததில்....
பெண்டு பிள்ளைகளும் அன்றோ
பேரலையில் சிக்கித் தவித்தர்..
கொன்றேனும் உன் கொள்கை பரப்ப
கொடுங்கோபம் தான் கொண்டாயோ...

பேரழிவால் பெரும் சோதனை
தத்தம் வீட்டையும் இழந்து
தன் சொந்த பந்தம் தொலைத்து...
நாட்டு மக்கள் எல்லாம்
நாதியற்று நடு ரோட்டினிலே...

அத்தனையும் போனால் கூட
ஆண்டுக்குள் பெற்றுவிடலாமே...
நீ கொண்டு போனதென்ன
நின்று திரும்பப்பெறும்...
நித்திரையா.. இல்லை நிதியா...

நின்று நிலைத்து வாழ
எண்ணிய எம் உயிர்களை
நித்திரையில் கொண்டு சென்றே
நீங்காப் பழிக்கு ஆளானாயோ...

ஆனது ஆகட்டும் என்றே...
ஆக்ரோஷ நடனம் ஆடிவிட்டாய்..
நிறுத்து உன் ஆவேசத்தை
நிம்மதியாய் வாழ விடு
நினைத்தும் பார்க்க முடியாது
இவ்வாறு இனியோர் இழப்பை...!

~அன்புடன் ஆனந்தி 

Wednesday, March 16, 2011

தக்காளி கிச்சடி / கொத்சு :


தேவையான பொருட்கள்:
தக்காளி - 4 
வெங்காயம் - 2
மல்லி இலை - சிறிது 

மசாலா (அரைக்க):
தேங்காய் - 1 துண்டு
பொட்டு கடலை - 5 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 7 / 8 (காரத்திற்கேற்ப)
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு 

தாளிக்க:
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 / 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 / 2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிட்டிகை

செய்முறை:

          முதலில் தக்காளி, வெங்காயம் இவற்றை பெரிய பெரிய துண்டுகளாய் நறுக்கி, அதை பிரஷர் குக்கரில் வேக வைத்து கொள்ளவும். (பாத்திரத்திலும் வேக வைக்கலாம்).

          தக்காளி, வெங்காயம் ஆறியதும், அதை நன்கு மசித்துக் கொள்ளவும். (தேவைப்பட்டால் மிக்சியில் ஒரு சுத்து விட்டு அரைத்துக் கொள்ளலாம்), ரொம்பவும் மையாக அரைத்து விட கூடாது.

          ஒரு பாத்திரத்தில், சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து, அதனுடன் மசித்த தக்காளி கலவை, மற்றும், அரைத்த மசாலா, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். (தண்ணீர் வேண்டுமளவு சேர்த்துக்கொள்ளலாம்).

நன்கு கொதித்ததும், மல்லி இலை போட்டு இறக்கவும்.



இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாய் இருக்கும்.


Tuesday, March 8, 2011

பெண் என்னும்....!


"மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்" என்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை... அப்படியே தவம் செய்து, இப்பிறப்பை அடைந்ததாய், பெருமையுடன் எண்ணிக் கொண்டு, இந்த "அகில உலக மகளிர் தினத்தில்"... அனைத்து மங்கையர்க்கும், எனது வாழ்த்துக்களுடன் சில வரிகள்...!

கருவில் அரும்பி
உருவம் தரித்து
பருவம் அடையுமுன்
பலபல பக்குவங்கள்...
பதறாமல் பெறுபவள்...!

அரும்பும் மலராய்
அழகாய் மணம்வீசி
அன்பின் ஆழத்தை
அனைவரிடமும் காட்டி
வலம் வருகின்ற
வண்ணத் தேர்...!

எதையும் இயன்றவரை
எடுத்துச் செய்திடும்
உறுதியான உள்ளத்துடன்
உலகை வலம் வரும்
உன்னத படைப்பு...!

அகத்தில் அன்புடனும்
புறத்தில் பண்புடனும்
பெண்மைக்கு உண்மையுடனும்
பிரமிக்கும் திறமையுடனும்
பிரகாசிக்கும் சுடர்...!

பொறுமைக்கு இலக்கணமாய்
புனிதத்திற்கு பொருத்தமாய்
அடக்கம் அறிந்தவளாய்
அகங்காரம் தொலைத்தவளாய்
அன்பிற்கு பணிபவள்...!

ஆயிரம் அலுவல் செய்தும்
அலுக்காத அன்னையுள்ளம்...
அன்பாய் ஓர் வார்த்தைக்காய்
அடை காக்கும் பெண்ணுள்ளம்...!




~அன்புடன் ஆனந்தி 




(படம்: நன்றி கூகிள் )

Friday, March 4, 2011

என் உள்ளம் ஊமையாய்...!



விடை தெரிந்தும் என்னிடம்
போகவா என்கிறாய்...
ஏன் வேண்டாமென்றால்
என்ன செய்வதாய் உத்தேசம்?

மணிக்கணக்கில் பேசினாலும்
மனமில்லை உன்னை வழியனுப்ப..
உதடு சரி என்கையில்......
என் உள்ளம் ஊமையாய்..!

என்னிடத்தில் எதைக்  கண்டு
எனை நீ விரும்பினாயோ நானறியேன்..
உன்னிடத்தில் ஒவ்வொன்றும் என்
உள்ளம் கவர்ந்தவை அன்றோ..!

புதிதாய் பார்த்தால் பழகுவதில்
தயக்கம் இயற்கை... அதென்ன...
உன்னைக் கண்ட நாள் முதல்
உன்னையே சுற்றி வரச் செய்துவிட்டாயே...!

வேறெதிலும் என் மனம்
லயிப்பது இல்லை...
வேர் கொண்ட மரமாய் 
உன் நினைவலை...!

~அன்புடன் ஆனந்தி 

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)