topbella

Wednesday, October 18, 2017

சர்வமும் நீ...!


நினைத்தும் பார்க்கவில்லை
உன் நெஞ்சில் நான்
நீங்காமல் நிறைவேன் என்று
கடந்து வந்த பாதையை
காத்திருந்த வேளையை
கைகோர்த்து நடந்த நொடிகளை
காலம் கரை சேர்த்த கதையை
எண்ணி மகிழ்கிறேன்
உனை எண்ணி கரைகிறேன்
நெருஞ்சி முள்ளாய்
நிறைத்த பாரம்
நீ நெருங்கிய நொடி
உடனே தீரும்..
பார்வையில் படரும் பாசம்
பால் நிலவாய் நெஞ்சில் வீசும்..
மின்வெட்டு பார்வையில்
மென்பட்டாய் இளகும் நெஞ்சம்
உன் கண் காணா நேரம்
கவிதை நூறு பேசும்..
மிச்சம் வைத்த வார்த்தைகளை
அச்சம் இன்றி தந்தவனே
சத்தம் இன்றி சொல்கிறேன்
என் சர்வமும் நீ என்று..!!!

~அன்புடன் ஆனந்தி


நன்றி: கூகிள் (படம்)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)