topbella

Wednesday, December 29, 2010

எனக்கு பிடித்த 2010 பாடல்கள்..! (தொடர் பதிவு)


எனக்கு பிடித்த 2010 பாடல்கள்..... தொடர் பதிவிற்கு சௌந்தர் அழைத்திருந்தாங்க.... ஒரு தரமாவது, தொடர் பதிவை... கூப்பிட்டதும் எழுதி விடணும்னு... ஒரு ஆசை.. யாரும் அதிர்ச்சி ஆக வேணாம், குறிப்பா சௌந்தர்... ஹிஹி.. நாங்களும், உடனே தொடர் பதிவு எழுதுவமாக்கும்... 

எனக்கு பிடிச்ச 10 பாடல்களை, உங்களோட பகிர்ந்து கொள்கிறேன்...!   


காதல் அணுக்கள் உடம்பில் ....எந்திரன்

  • பாடியவர்: விஜய் பிரகாஷ், ஷ்ரேயா கோஷல் 
  • இசை: A. R. ரஹ்மான் 
  • பாடலாசிரியர்: வைரமுத்து
காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை
ந்யூட்ரான் எலெக்ட்ரான் 
உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை
அய்யோ... சனா ...சனா ...ஒரே வினா



பூக்கள் பூக்கும் தருணம் ....மதராசபட்டினம்

  • பாடியவர்: ஹரிணி, ரூப் குமார், ஆண்ட்ரியா, G.V. பிரகாஷ் குமார்
  • இசை: G.V. பிரகாஷ் குமார் 

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே, பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போக வில்லையே, உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே... இது எதுவோ?



மன்னிப்பாயா .... விண்ணை தாண்டி வருவாயா

  • பாடியவர்: A.R. ரஹ்மான், ஷ்ரேயா கோஷல் 
  • இசை: A.R. ரஹ்மான் 
  • பாடலாசிரியர்: தாமரை
    கடலினில்  மீனாக  இருந்தவள்  நான் 
    உனக்கென  கரை  தாண்டி  வந்தவள்  தான்
    துடித்திருந்தேன்  தரையினிலே
    திரும்பிவிட்டேன்  என்  கடலிடமே...
    ம்ம்ம்ம்...

    ஒரு  நாள்  சிரித்தேன், மறு நாள்  வெறுத்தேன்
    உனை  நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே

    மன்னிப்பாயா ....  மன்னிப்பாயா....  மன்னிப்பாயா....



    காதல் வந்தாலே.....சிங்கம் 

    • பாடியவர்: பாபா சேகல், பிரியதர்ஷினி 

    • இசை: தேவிஸ்ரீ பிரசாத் 



    காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே
    காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே
    ஆசை வந்தாலே ஐ லவ் யூ சொன்னாலே..
    கண்ணு ரெண்டும் சுத்துதே உந்தன் முன்னாலே
    திட்டம் போட்டு பார்த்து திமிராய் பேசி
    என்னை நீ வளைச்ச .. ஓ யே.. ஓ.
    .



    என் காதல் சொல்ல நேரம் இல்லை .....பையா 

    • பாடியவர்: தன்வி, யுவன் சங்கர் ராஜா

    • இசை: யுவன் சங்கர் ராஜா


    என் காதல் சொல்ல நேரம் இல்லை
    உன் காதல் சொல்ல தேவை இல்லை
    நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
    உண்மை மறைத்தாலும் மறையாதடி...


    உன் கையில் சேர ஏங்கவில்லை
    உன் தோளில் சாய ஆசையில்லை
    நீ போன பின்பு சோகம் இல்லை
    என்று பொய் சொல்ல தெரியாதடி....





    அவள் அப்படி ஒன்றும் அழகில்லை .....அங்காடி தெரு 

    • பாடியவர்: வினீத் ஸ்ரீனிவாசன், ரஞ்சித், கோரஸ்
    • இசை: விஜய் அன்டனி 
    • பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்

    அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
    அவளுக்கு யாரும் இணை இல்லை
    அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை

    ஆனால் அது ஒரு குறை இல்லை...



    நீயும் நானும் வானும் மண்ணும் ......மைனா

    • பாடியவர்: பென்னி தயால், ஷ்ரேயா கோஷல்
    • இசை: D .இம்மான்
    • பாடலாசிரியர்: ஏக்நாத்

    நீயும் நானும் வானும் மண்ணும் 
    நெனச்சது நடக்கும் புள்ள
    வீசும் காத்தும் கூவும் குயிலும்
    நெனைச்சது கெடைக்கும் புள்ள 

    நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
    கெடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்






    கைய புடி கண்ணப் பாரு ....மைனா

    • பாடியவர்: நரேஷ் அய்யர், சாதனா சர்கம்
    • இசை: D. இமான் 
    • பாடலாசிரியர்: யுகபாரதி

    கையப்புடி  கண்ணப்பாரு உள் மூச்ச வாங்கு
    நெஞ்சோடு நீ
    கொஞ்சம் சிரி எட்டு வையி தோள் சாய்ந்து தூங்கு
    இப்போது நீ
    மெதுவா பாரு எதையாவது
    பனிபோல் நீங்கும் சுமையானது
    இனிமேலே...



    யார் இந்த பெண்தான் .....பாஸ் என்கிற பாஸ்கரன் 

    • பாடியவர்: ஹரிசரண்
    • இசை: யுவன் சங்கர் ராஜா
    • பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்

    யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே 
    இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
    என்னை பார்க்கிறாள்.... ஏதோ கேட்கிறாள்.....
    எங்கும் இருக்கிறாள் ஹோ ஹோ ஹோ..



    ஹோசனா ......விண்ணைத்தாண்டி வருவாயா 

    • பாடியவர்: விஜய் பிரகாஷ், சுசேன் டி'மெல்லோ, ப்ளேஸ்
    • இசை: A.R.ரஹ்மான் 
    • பாடலாசிரியர்: தாமரை, ப்ளேஸ் 
    என் இதயம், உடைத்தாய் நொறுங்கவே
    என் மறு இதயம், தருவேன் நீ உடைக்கவே 

    Oh Ooh Ooho ஹோசனா.. ஹோசனா.. Ohh Ohh
    அந்த நேரம் அந்தி நேரம்
    கண் பார்த்து கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே.....




    இவ்ளோ நேரம் பொறுமையா என்னுடைய பகிர்வை படித்த உங்களுக்கு.. நன்றிங்க :-))

    Wednesday, December 22, 2010

    எனக்குப் பிடித்த 10 ரஜினி படங்கள்...!! -தொடர் பதிவு

    ரஜினி நடித்த படங்களில் எனக்கு ரொம்ப பிடிச்ச படங்கள் வரிசை படுத்த சொல்லி சௌந்தர் தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்காங்க... கால தாமதத்திற்கு மன்னிக்கவும்..

    பொதுவா ரஜினி படம்னாலே ஒரு க்ரேஸ் உண்டு... எனக்கு முக்கியமா ரஜினி கிட்ட பிடிச்சது, அவரு ஸ்டைல்... அப்புறம் டீசென்ட் நடிப்பு.. நம்பி குடும்பத்தோட போயி ரஜினி படம் பாக்கலாம்... தர்மசங்கடங்கள் எதுவும் இருக்காது..! சரி ரொம்ப வளவளக்காம, லிஸ்ட் பார்ப்போமா...? இதுல எது முதல் இடம், எது பத்தாவது இடம்னு எல்லாம்  சொல்ல முடியாது.. எல்லாமே.. எனக்கு ரொம்ப பிடித்த டாப் 10 ரஜினி படங்கள் தான்..!

    தளபதி...!


    தளபதி படத்தில் மம்முட்டியுடன் ரஜினி, கலக்கி இருப்பார்.. ரெண்டு பேருமே, ஒருவரை ஒருவர் மிஞ்சிய நடிப்பு.. சூர்யா என்ற கேரக்டர்-ஆகவே மாறியிருப்பார்... அன்னையின் பாசத்தை காட்டும் இடங்களில் நமக்கு கண்ணீர் வருவதை தவிர்க்க முடியாது.. தேவாவாக வரும் மம்மூட்டி ஒவ்வொரு இடத்திலும் "என் நண்பன்டா... என் தளபதி..டா..." ன்னு சொல்ற இடமெல்லாம் அந்த வார்த்தைக்கு பொருத்தமான..... கம்பீரமான ஒரு கதாபாத்திரம் ரஜினியாக மட்டுமே இருக்க முடியும்... இந்த படத்தில் வரும் "சின்னத் தாயவள்........", "யமுனை ஆற்றிலே.........", "சுந்தரி கண்ணால் ஒரு சேதி........." சரி விடுங்க.. எல்லா பாட்டுமே ரொம்ப பிடிக்குங்க...

    எஜமான்....!

    ஆஹா... எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.. வீட்டில் அதிகம் தியேட்டர் போயி படம் பார்க்கும் வழக்கம் இல்லை.. வெகு அபூர்வமாகத்தான் செல்வதுண்டு... அப்படி நான் பார்த்த படங்களில் எஜமான் மறக்க முடியாத படம்.. நெப்போலியனுடன் மோதும் போதும், மனைவியிடம் காட்டும் அன்பின் போதும்... மக்களிடம் காட்டும் அக்கறையின் போதும், நடந்து வரும் கம்பீரத்திலும்....... ரஜினி ரஜினி தான்... கலக்கி இருப்பார்.. இதில் வரும்.. "ஆலப்போல் வேலப்போல்.....", "ஒரு நாளும் உனை மறவாத....", "நிலவே முகம் காட்டு....." பாடல்கள் சூப்பர்ர்ர்...!!

    பாட்ஷா......!

    என்னை கவர்ந்த இன்னொரு ரஜினி படம் என்றால், அது பாட்ஷா...தான்... ஸ்டைலுக்கு ரஜினி-ன்னு சொன்னா மிகையாது... அவ்ளோ செமையா இருக்கும் இதுல அவர் நடிப்பு.. தங்கைக்காக மெடிக்கல் காலேஜ் சீட் வாங்க போகும் காட்சி.. இன்னமும் கண்முன் நிற்கிறது... அந்த காட்சியில், ரஜினி.. ரூமை விட்டு வெளியில் வரும் போது.. தங்கை.. என்ன ஆச்சு அண்ணா... னு கேக்கும் போது.. உனக்கு சீட் கண்டிப்பா உண்டும்மான்னு சொல்லும் போது... எப்படி அண்ணா? என்ன சொன்னிங்க.. என்ன சொன்னிங்கன்னு..? கேக்கும் தங்கையிடம்........அசால்ட்டா.... உண்மைய சொன்னேன்....னு சொல்ற இடம்... செம செம.. அச்சோ... எனக்கு இப்போ கூட விசில் அடிக்க தோணுது...

    அண்ணாமலை...!

    ரஜினி, குஷ்பூ... சூப்பர் நடிப்பு ரெண்டு பேருமே.. லேடீஸ் ஹாஸ்டல் உள்ள ரஜினி வர சீன்ஸ் எல்லாம்... செம காமெடி.. ரஜினி, ஒரு இடத்துல "கண்ணா.... கூட்டி கழிச்சு பாரு.. எல்லாம் கரெக்ட்-ஆ இருக்கும்-னு" சொல்ற இடம்.. ரொம்ப பிடிக்கும்.. இதுலயும் நட்பின் முக்கியத்துவம் இருக்கும்... இதில வர... "கொண்டையில் தாழம்பூ.....", "அண்ணாமலை அண்ணாமல....", "ஒரு பெண் புறா....".. பாட்டெல்லாம் நல்லா இருக்கும்..


    சிவாஜி...!

    ரொம்ப நாளைக்கு பிறகு.. புது ஸ்டைல்ல வந்த ரஜினி படம்.. "ஒரு கூடை சன்லைட்..." சாங் சூப்பர்....ஹிட்.. அதுல ரஜினி கலர்... ஹ்ம்ம்ம்... சூப்பர்...! வாங்க பழகலாம்..னு படம் முழுக்க சாலமன் பாப்பையா, ராஜா வோட ரஜினி பண்ற கூத்து பாத்து பாத்து ரசிக்கலாம்.. வீட்டில் சென்சஸ் ஆபீசர் மாதிரி வந்து பண்ற கலாட்டா தான் ஹைலைட்... அதிலும், அந்த காமெடி முடிவுல... லிவிங்க்ஸ்டன் என்டர் ஆகி.. "லக லக லக லக..."ன்னு சொல்லறது ஒரே காமெடி தான்.. இதுல வர "சஹானா...." பாட்டு, படமாக்கப்பட்ட விதம் அட்டகாசமா இருக்கும்.. ரொம்ப பிடிச்ச சாங்..

    சந்திரமுகி...!

    சொல்லவே தேவை இல்ல...இந்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் பத்தி.. வடிவேலு..ரஜினி காமெடி பெஸ்ட் இந்த படத்துல.. "மாப்பு வசிட்டன்யா ஆப்பு...." ஃபேமஸ் டயலாக்...! அதே மாதிரி.. வேட்டையனா வர ரஜினி.. சொல்ற "லக லக லக லக.............." ல தியேட்டர் அதிரும்.. "ரா ரா.........சரசுக்கு ரா ரா...", "கொஞ்ச நேரம்..கொஞ்ச நேரம்...." இந்த பாட்டெல்லாம் எனக்கு ரொம்பவும் பிடிச்ச பாடல்கள்... ஜோதிகா, சந்திரமுகியா மாறுற இடமெல்லாம் நல்லா இருக்கும்..!

    படையப்பா...!

    இந்த படத்தில் சிவாஜி, ரஜினி காம்பினேஷன் கலக்கல்.. ரம்யா கிருஷ்ணன், நீலாம்பரியா... அட்டகாசமா நடிச்சிருப்பாங்க.. சிங்க நடை போட்டு.. சிகரத்தில் ஏறு.... பாடல்-ல.. சொல்ற மாதிரி.. ரஜினி சிங்கம் மாதிரி தான் நடந்து வருவார்.. இந்த படத்துல வர.. "சுத்தி சுத்தி வந்தீக...", "மின்சார கண்ணா...என் மன்னா", "வெற்றி கொடி கட்டு..." பாட்டெல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்..!
     
    Mr. பாரத்...!

    சத்யராஜ், ரஜினி காம்பினேஷன்... ரொம்ப நல்லா இருக்கும்.. இது ஒரு கிளாச்சிக் ஸ்டோரி தான்.. அம்மாவிற்கு துரோகம் பண்ணின அப்பாவை தேடி கண்டுபிடிச்சு, தாயின் சபதம் நிறைவேற்றல்..! இடையில் வர சலசலப்பெல்லாம் ரசிக்கிற மாதிரி இருக்கும்... "பச்ச மிளகா அது காரம் இல்ல....", "எந்தன் உயிரின்..", பாடல்கள் மற்றும், ரொம்ப ரொம்ப... ஹிட் ஆனா.. "என்னம்மா கண்ணு..." சாங்.. டாப்..!
     
    நான் அடிமை இல்லை...!

    எப்பவும் போல, நாயகியை ரவுடிகளிடம் இருந்து மீட்கும் ரஜினி, மீது காதல் கொண்டு, தன் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிய பிரச்சினைகள்.  தன்மானம் மிக்க கதாநாயகன், கருத்து வேறுபாட்டில் நாயகியைப் பிரிந்து, பின்னர் இருவரும் சேர்வது தான் படம்.. ஸ்ரீதேவியும், ரஜினியும்... போட்டி போட்டு சூப்பர்-ஆ நடிச்சிருப்பாங்க.. அதில் வரும் "ஒரு ஜீவன் தான்.. உன் பாடல் தான்..." ரொம்ப ரொம்ப பிடிச்ச சாங்.. அப்போ உள்ள ஸ்டைலில் சோகப் பாட்டும் இதே சாங் வரும்.
     
    எந்திரன்...!

    ரொம்ப நாள் கழிச்சு, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, வெளி வந்த படம்.. முதல் பாதி, விறு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் அட்டகாசமா இருந்தது.. இரண்டாம் பாதியில், முழுக்க முழுக்க கிராபிக்ஸ் ஆக்கிரமிப்பு.. ரஜினியின் நடிப்பை இன்னும் கொஞ்சம் பார்க்க முடியவில்லை என்று சின்ன வருத்தம்..  கிளைமாக்ஸ்-ல் கிராபிக்ஸ்.. உண்மையில் டாப்... வசியாக வரும் ரஜினியோ, அலட்டாமல் நடிப்பு என்றால், சிட்டி-யாக வரும் ரஜினி, ஒரே கலகலப்பில், வில்லன் ரோபோ-வாக வரும் ரஜினி.. நடிப்பில் கலக்கல்.. சிட்டியாக வரும் ரோபோ... "ஹூ இஸ் தட் செல்லாத்தா? " ன்னு கேக்குற இடம், செம செம...காமெடி.. அதே மாதிரி தான் வில்லன் ரோபோ-வாக வரும் ரஜினி "சோல்ஜர்ஸ் ரோடேட் யுவர் ஹெட்ஸ்...."ன்னு சொல்ற இடமும்....அதிரடி தான்..! இதில் வரும் "காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை...." சூப்பர் சாங்..

    ஸூஊஊஉ.. எப்பா சாமி ஒரு வழியா எழுதி முடிச்சிட்டேன்.. இந்த தொடர் பதிவுக்கே...இம்புட்டு நாள் எடுத்திருக்கேன்... இந்த அழகுல... தொடர் பதிவு சீக்கிரம் எழுதலன்னா, அடுத்த தொடர் பதிவுக்கு கூப்பிடுவோம்-னு மிரட்டல் வேற.. எவ்ளோ அடியைத் தான் தாங்குறது...!

    நா நார்மல் பதிவு எழுதரதுலயே ரொம்ப சுறுசுறுப்பு.. இதுல தொடர் பதிவு... ஹ்ம்ம்.. எப்படியும் சமாளிப்போம்ல...!

    ஆத்தா நா பாசாயிட்டேன்னு.........கத்தனும் போல இருக்கு.. (ஹ்ம்ம் கும்ம்....அத நாங்க சொல்லணும்..... அதானே... ஹிஹி.. .. உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குதுங்க..) சரி சரி.. பயப்புடாதீங்க.. அப்படி எல்லாம் சொல்லாம கொள்ளாம செய்ய மாட்டேன்.. ரெம்ப நன்றிங்க.. வந்து, பொறுமையா படிச்சதுக்கு...!!

    மீண்டும் உங்களை சந்திக்கும் வரை.. உங்களிடம் இருந்து விடை பெறுவது ஆனந்தி....!


    Friday, December 17, 2010

    எங்கள் வீடு....!!



    ஆறு அறைகள் கொண்ட
    அம்சமான மாளிகை....
    என் அப்பா தன் அன்னையின்
    பெயரில் கட்டிய அன்பு ஆலயம்...

    குருவிகளாய் நால்வர் நாங்கள் 
    கும்மாளமிட்டு கூடி வாழ்ந்த இடம்...
    இளம் பச்சை நிறத்தில்
    வெளி வண்ணப் பூச்சும்
    அடர் அரக்கு நிறத்தில் அதன்   மேல்
    அழகாய் எழுத்துக்களும்...

    வெளியில் நின்று பார்த்தாலே
    வெகுவாய் கவரும் தென்னை மரங்களும்
    உள்ளே நுழைந்ததும்
    உபசரிக்கும் அழகு ரோஜாக்களும்
    நெஞ்சை அள்ளும் டிசம்பர் பூக்களும்
    கூட்டமாய் கூடி நிற்கும்
    குரோட்டன்ஸ் செடிகளும்...

    அப்படியே உள்ளே வந்தால்
    அங்குமிங்கும் கனகாம்பரமும்..
    அழகழகாய் பூத்திருக்கும்
    அடுக்குச் செம்பருத்திப் பூக்களும்...

    பாத்திகளில் பாங்காய் சிரிக்கும்
    கீரை வகைகளும்...
    பக்கத்திலேயே வளர்ந்து நிற்கும்
    பப்பாளி  மரமும்....

    கொத்து கொத்தாய் காய்த்திருக்கும்
    கொய்யா மரமும்....
    சிரித்தாற்போல் சித்திரமாய்
    சீத்தாப்பழ மரமும்...

    அணில் வந்து கடிக்காமலிருக்க
    அங்கங்கே அப்பா கட்டி வைத்த
    ஆவின் பால் பாலிதீன் பைகளும்...

    அதை தாண்டி இப்புறம் வந்தால்
    அழகான துளசி மாடமும்...
    அதற்குள்ளே அம்சமாய் ஒரு
    அகல் விளக்கும்...

    இத்தனை தவிரவும்
    இதர  பல செடி, கொடிகளுடன்
    இயற்கையுடன் ஒன்றி
    இன்பமாய் வாழ்ந்த வீடு
    எங்கள் வீடு....!!


    இது அத்தனையும் எங்கள் வீட்டில் உண்டு... அதெல்லாம் இப்போ ரொம்ப மிஸ் பண்றேன்..... அம்மா, அப்பா, உடன் பிறந்தோர், சொந்த பந்தம் மட்டும் இல்லாம நம்ம வாழ்ந்த வீடும் நமது வாழ்வின் அங்கமாகவே மாறி விடுவது.... உண்மைதானே...!!


    பகிர்வைப் படித்ததற்கு நன்றிகள் பல...!!


    (பி. கு.:  இந்த மஞ்சள் செம்பருத்தி எங்கள் வீட்டில் பூத்த மலர்....!! )

    ...அன்புடன் ஆனந்தி

    Wednesday, December 8, 2010

    காரக் குழம்பு....!!


    தேவையான பொருட்கள்:

    வெங்காயம் - பெரிது 1              
    தக்காளி - பெரிது 1
    பூண்டு - 5 பல்
    மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
    மல்லிப்பொடி - 2 டீஸ்பூன் 
    காய் - கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய் எது பிடித்தமோ அந்த காய்..
    புளி - சின்ன எலுமிச்சை அளவு (ஊற வைத்து சாறு எடுக்கவும்)


    தாளிக்க:

    கடுகு - 1 / 4 ஸ்பூன்
    வெந்தயம் - ஒரு சிட்டிகை
    சீரகம் - 1 / 4 ஸ்பூன்
    கறிவேப்பிலை - கொஞ்சம்

    அரைக்க:

    தக்காளி - 1 பெரிது
    சீரகம் -  1 / 4 ஸ்பூன்
    தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
    (இவை எல்லாமும் சிறிது தண்ணீர் விட்டு, நன்கு மசிய அரைத்துக் கொள்ளவும்)

    செய்முறை:
            
    ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

    அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய காயைப் போட்டு, சிறிது நேரம் வதக்கி பின்  நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் பொடி, மல்லிப்பொடி சேர்த்து, வதக்கி, கரைத்து வைத்திருக்கும் புளி சாரைச் சேர்க்கவும்.

    குழம்பிற்கு தேவையான அளவு உப்பு, தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.. பொடி வாசனை போனதும், அரைத்து வைத்துள்ள மசாலா (தக்காளி, சீரகம், தேங்காய் கலவை) சேர்த்து நன்கு கொதிக்க விட்டு எண்ணெய் தெளிய ஆரம்பிக்கவும் இறக்கவும்.

    இதை சூடான சாதத்தில் விட்டு, அப்பளம் சேர்த்து சாப்பிடலாம்...!!

    வந்தது தான் வந்தீங்க... ஒரு வாய் சாப்பிட்டு போங்க...! :-))





    (காரம், புளிப்பு அவரவர் தேவைக்கு ஏற்ப கூட்டி குறைத்துக் கொள்ளலாம்....)

           









    About Me

    My photo
    I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)