topbella

Monday, January 28, 2019

கடைசி காலத்தில்..!!


வாசலில் காத்து நின்றே
வரும் வழி பார்த்திருப்பாள்
உண்ண சமைத்து வைத்தே
அருகிருந்தே உபசரிப்பாள்..
உடுக்க துவைத்து தந்து
உறங்க விரித்து தந்து
எண்ணம் கலைந்தாலும்
என்ன ஏதென்றே பதறி போவாள்..
கணக்கெதுவும் கேளாமல்
கைகளில் பணம் தருவாள்
மனக்கசப்பில் பேசினாலும்
மகவு தானே என்றிருப்பாள்..
கண்களுக்குள் அடை காத்து
கருத்தாய் பராமரித்து
காலமெல்லாம் துணை நின்றவளுக்கு
கடைசி காலத்தில்..
கஞ்சி ஊற்றுவதை
பெரும் சேவையாய்
பேசித்திரியும்
பிள்ளைகள் உலகமிது..!

~அன்புடன் ஆனந்தி

(படம்: கூகிள், நன்றி)

1 comments:

Nanjil Siva said...

அருமை .. நிதர்சன உண்மையை கவிதையாய் வடித்திருக்கிறீர்கள் நன்றி!!!

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)