topbella

Monday, January 28, 2019

மௌனம் பேசும்..!


கண் விரித்தே நோக்கும் கவிதை
புன்சிரிப்பில் பூக்க வைக்கும் புனிதம்
கண நேரத்தில் கலங்க வைத்து
கை சொடுக்கும் நேரத்தில்
சிரிக்கச் செய்யும் சில்மிஷம்
எதுவும் இல்லையென்றால்
ஏன் என்று கேட்கும்
ஏதேனும் சொல்ல வந்தால்
எதற்கு என்று கேட்கும்
முன் அமர்ந்து முகம் நோக்கும்
முகம் சோர்ந்தால் மனம் வாடும்
கனவில் கவிதை சொல்லும்
நினைவில் மௌனம் பேசும்
வெட்டவெளியில் சிரிக்க வைக்கும்
பொட்டல் காட்டை ரசிக்க வைக்கும்..!

 ~அன்புடன் ஆனந்தி

1 comments:

Nanjil Siva said...

மிக அருமையான சிந்தனை .. தொடருங்கள்!!!

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)