topbella

Thursday, May 17, 2018

கவிதையாய் வாழ..!!!



வெண் மேகம் மீதேறி
விண்மீன்கள் தேட வேண்டும்
நல்முத்து கைசேர
முக்குளித்து மீள வேண்டும்
கற்பனைகள் கை கூட
கவிதையாய் வாழ வேண்டும்
ஒப்பனைகள் இல்லாத
உண்மையை காண வேண்டும்
தப்பேதும் செய்தாலும்
சரிசெய்ய திராணி வேண்டும்
தடையில்லா இன்பம் காண
முடிவில்லா உழைப்பு வேண்டும்
இதமாய் மனம் இருக்க
இன்னிசை நாட வேண்டும்
இயல்பாய் நாம் இருக்க
இறைபக்தி தேடல் வேண்டும்..!

~அன்புடன் ஆனந்தி

(படம்: கூகிள், நன்றி)

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)