topbella

Thursday, February 1, 2018

கண்ணிமையாய்...!!


மரமாய் நானிருக்க
மழையாய் நீயிருப்பாய் வேராய் நான் இருக்க விழுதாய் நீயிருப்பாய் வான்முகிலாய் நானிருக்க வெண்ணிலவாய் நீயிருப்பாய் கரையாய் நானிருக்க அலையாய் நீயிருப்பாய் தொடு வானமாய் நானிருக்க அதில் படும் மேகமாய் நீயிருப்பாய் வானவில்லாய் நானிருக்க வண்ண மயிலாய் நீயிருப்பாய் அன்பாய் நானிருக்க அனலாய் நீ தகிப்பாய் விதையாய் நானிருக்க விருட்சமாய் நீயிருப்பாய் மலராய் நானிருக்க வண்டாய் நீயிருப்பாய் வாழ்வாய் நானிருக்க அதில் வசந்தமாய் நீயிருப்பாய் தவமாய் நானிருக்க வரமாய் நீயிருப்பாய் கண்மூடி நானிருக்க கரம் கோர்த்து நீயிருப்பாய் வெளிச்சமாய் நானிருக்க வெயிலாய் நீயிருப்பாய் கரு விழியாய் நானிருக்க கண்ணிமையாய் நீயிருப்பாய்..! ~அன்புடன் ஆனந்தி 



(படம்: கூகிள், நன்றி)

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)