topbella

Saturday, September 14, 2013

எதுவென்றேன்...!


இன்பம் எதுவென்றேன்
இனியவள் உன்னுடன்
இயைந்து இருப்பதென்றாய்..

துன்பம் எதுவென்றேன்
நீ இவ்வாறு தூர இருந்தே
என்னை துயரத்தில்
ஆழ்த்துவதென்றாய்...

காதல் எதுவென்றேன்
உன் கண்களோடு என்
கண்கள் கலப்பதென்றாய்...

காமம் எதுவென்றேன்
உனைக் கண்டவுடன் என்
கைகளுக்குள் சிறை
வைப்பதென்றாய்...

மோகம் எதுவென்றேன்
மூச்சிலும் பேச்சிலும்
முக்காலமும் நீயே
நிறைந்திருப்பதென்றாய்..

தேடல் எதுவென்றேன்
தெரிந்தும் என்னுயிரை
உனக்குள் தேடித்
திரிவதென்றாய்...!!!

...அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள், நன்றி)

9 comments:

logu.. said...

நல்லாருக்கு..!

அம்பாளடியாள் said...

மறைக்க முடியாத உண்மை .சிறப்பான கவிதை வரிகளில் கண்டு மகிழ்ந்தேன் .வாழ்த்துக்கள் தோழி .

Anonymous said...

இனிமையான காதல் கவிதை
திருவிளையாடல் கேள்வி-பதில் பாணியில் !

Vijaya Vellaichamy said...

மனதுக்கு இதமாக உள்ளது உங்கள் கவிதை! அருமை!

Yaathoramani.blogspot.com said...

காதல் மனம் சொல்லும்
அருமையான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

தேடல் எதுவென்றேன்
தெரிந்தும் என்னுயிரை
உனக்குள் தேடித்
திரிவதென்றாய்...!!!

அழகான தேடல் ..!

'பரிவை' சே.குமார் said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு...

Unknown said...

௧விதை ரொம்ப நல்லா இ௫க்கு

ஜெய்லானி said...

அழகான கவிதை , ( கவிதையில் கண்னதாசன் சாயல் தெரிகிறது சூப்பர் :-) )

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)