topbella

Wednesday, May 23, 2012

உயிர் சுமந்து...!

Royalty-Free photo: Hands holding red rose | PickPik

எதார்த்தங்களின் எழுச்சியில்
எண்ணற்ற வலிகள்...
முந்திக்கொண்டு நிற்கும்
முரண்பாடுகள்...

கண்ணுக்கு தெரியாத
கவலை ரேகைகள்...
எண்ணத்தில் சிக்கி நிற்கும்
எதிர்ப்பு உணர்ச்சிகள்...

உள்ளத்தில் ஒளிந்து கிடக்கும்
உன்னத உறவினை
உள்வைத்துச் சிறை பூட்டி
உணர்ந்து மட்டுமே
உயிர் சுமந்து அலைகிறேன்..

கண் சுமந்த காதல்
கருத்தில் நிறைந்த தேடல்
காரணம் சொல்ல
கண்ணீர் துளி போதும்..

ஏதும் நினைக்காமல்
எதையும் மறைக்காமல்
என்னுடனே நீ இருந்தும்..
யாதும் நன்மைக்கே என்று
யாம் வாழ்ந்து செல்வோம்...!


~அன்புடன் ஆனந்தி


\


(படம்: கூகிள், நன்றி)

8 comments:

Anonymous said...

You has a great blog. I'm very interesting to stopping here and leaves you a comment. Good work.

Lets keep writing and share your information to us.

Nb: Dont forget to leave your comment back for us.

Vijaya Vellaichamy said...

கவிதை அருமை அருமை! முதல் எட்டு வரிகள் மனதில் சம்மணம் போட்டு உக்கார்ந்துவிட்டது!

'பரிவை' சே.குமார் said...

கவிதை மிகவும் அருமை சகோதரி...
வாழ்த்துக்கள்.

MARI The Great said...

அருமை சகோ ..!

Anonymous said...

உயிரோட்டமுள்ள உணர்வுகள் சொட்டுகின்றது உன் வரிகளில்.

Nandhu said...

கவிதை அருமை!..வாழ்த்துக்கள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@darkheart2011

Thanks for the comment. :)


@விஜி
ஹ்ம்ம்.. ரொம்ப தாங்க்ஸ் விஜி. ;)



@சே. குமார்
மிக்க நன்றிங்க. :)



@வரலாற்று சுவடுகள்
மிக்க நன்றிங்க. :)



@Ameenhx
கருத்திற்கு நன்றி :)



@நந்து
தாங்க்ஸ்டா... :)

Unknown said...

super....

yaam padithu rasithu vitu selkirom...

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)