topbella

Tuesday, September 13, 2011

நேற்று பேசியவை...!

Thoughtful young woman with pink flower - Nohat

அர்த்த ராத்திரியில்
அவன் நினைவில்...
அருகில் வந்த தூக்கமும்
அப்படியே ஓடி விட...

நேற்று பேசியவை
நிரந்தரமாய் நெஞ்சினில்..
நிமிஷம் கூட விடாமல்
நிறுத்தாமல் பேசினாயே...

நிச்சயம் தெரியும் உனக்கு
நீயின்றி நானில்லை என்றே..
பேசும் வார்த்தைகள்
பேதம் இன்றி வந்து விழ....

காற்றின் அசைவில் என்
கருங்கூந்தல் கண் மறைக்க
பேச்சு மூச்சு இன்றி
பேதை நான் விழிக்க...

என்ன?? புரிந்ததா என்றே
எனை நோக்கி நீ கேட்க...
எல்லாம் புரிந்தது என்றே
என்னிதழ் பதில் சொல்ல..

ஏற இறங்க எனைப் பார்த்து
ஏனிப்படி படுத்துகிறாய் என்றாய்
எப்படி உன்னிடம் சொல்வேன்
என்னுயிர் பறித்தது நீயே என்று..!

...அன்புடன் ஆனந்தி 



(படம்: நன்றி கூகிள்)



15 comments:

சதீஷ் மாஸ் said...

செம டச்சிங்... காதல் கவிதையா சோக கவிதையா என தெரியா வண்ணம் எழுதி இருப்பது அருமை...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்... அதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரிலங்க ஆனந்தி
... :)

சாந்தி மாரியப்பன் said...

அசத்தலுங்கோ :-))

Philosophy Prabhakaran said...

அருமை... (யப்பா இந்தமாதிரி பின்னூட்டம் போட்டு எவ்வளவு நாள் ஆச்சு...)

மாய உலகம் said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

சத்ரியன் said...

ம்!

மாய உலகம் said...

கலக்கல் காதல் கவிதை

சௌந்தர் said...

அர்த்த ராத்திரியில்
அவன் நினைவில்...
அருகில் வந்த தூக்கமும்
அப்படியே ஓடி விட...//

அம்புட்டு கொடுரமா வா இருந்துச்சு...

நேற்று பேசியவை
நிரந்தரமாய் நெஞ்சினில்..
நிமிஷம் கூட விடாமல்
நிறுத்தாமல் பேசினாயே...///

அது எப்படின்னு சொல்றது F.M. ரேடியோ மாதிரியா...???


ஏற இறங்க எனைப் பார்த்து
ஏனிப்படி படுத்துகிறாய் என்றாய்
எப்படி உன்னிடம் சொல்வேன்
என்னுயிர் பறித்தது நீயே என்று..!///

அய்யோயோ கொலை கேஸா..??

சௌந்தர் said...

எப்படி தான் எழுதுவீங்களோ கலக்குறீங்க.. போங்க

மகேந்திரன் said...

கவிதை மனதை தொடுகிறது.....
நன்று.

ஆயிஷா said...

ஆனந்தி நலமா ?

கவிதை அருமை.

பித்தனின் வாக்கு said...

ada kavithaikku comment podalamunnu partha enneyei kathirikai kulampu ilukkuthu. padame super.

nalla sapittom ananthi. thanks.

அர்த்த ராத்திரியில்
அவன் நினைவில்...
அருகில் வந்த தூக்கமும்
அப்படியே ஓடி விட...//

enthirththu poi sakthi tea stall tea sappidanum.

ஏற இறங்க எனைப் பார்த்து
ஏனிப்படி படுத்துகிறாய் என்றாய்
எப்படி உன்னிடம் சொல்வேன்
என்னுயிர் பறித்தது நீயே என்று..!///

appa setha sudhakarukku innum uyier varaqvillai enru yarukkum theriyathu.

EEnn anathi palasai ninaikka vaikkinren.

Venkat said...

I come across your website today. It is nice. I have read the post " Appavai Patri " . It is real and expressed the feeling of a daughter.

Best wishes to the blog.

Venkat

Visit my blog www.hellovenki.blogspot.com when u have time

Paru said...

கவிதை அருமை. இதை தொடர்ந்து பகுதி 2 வருமா? நேயர் விருப்பம்
முயர்ச்சி செய்யுங்கள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சதீஷ் மாஸ்
ஹ்ம்ம்.. உங்க கருத்துக்கும், வருகைக்கும் நன்றிங்க!



@அப்பாவி தங்கமணி
ஹ்ம்ம்.. ரொம்ப நன்றிங்க :)



@அமைதிச்சாரல்
ஹா ஹா.. ரொம்ப நன்றிங்க :)





@Philosophy Prabhakaran
ஹா ஹா.. ரொம்ப நன்றிங்க! :)



@மாய உலகம்
என்னை அறிமுகப் படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள்!



@சத்ரியன்
ஹ்ம்ம்.. கருத்துக்கு நன்றிங்க!



@மாய உலகம்
கருத்துக்கு ரொம்ப நன்றிங்க! :)



@சௌந்தர்
ஹா ஹா.. ஏன்.. அவரு என்ன காஞ்சனாவா?? :)

ரொம்ப தான்... ஓவர்-ஆ போச்சு.. FM ரேடியோ-வா...!!! கிரர்ர்ர்ர்!

ஹா ஹா ஹா.. ROFL ... ஆமா ஓடிருங்க..! :)))

நன்றி சௌந்தர்!





@சௌந்தர்
ஹ்ம்ம்.. ரொம்ப நன்றி! :)



@மகேந்திரன்
வருகைக்கும், கருத்திற்கும் நன்றிங்க!



@ஆயிஷா
வாங்க.. நலம்.. நீங்க எப்படி இருக்கீங்க?

கருத்துக்கு நன்றிங்க! :)



@பித்தனின் வாக்கு
ஹா ஹா... நன்றிங்க!

ஹா ஹா ஹா.. டீ கடைக்கா?? :))

மலரும் நினைவுகள் வர வச்சிட்டேனா?

கருத்துக்கு ரொம்ப நன்றிங்க!



@வெங்கட்
Thanks for your comment! I checked your blog too! Liked the thoughts you shared! Thanks & best wishes to you!



@Paaru
ஹா ஹா.. ரொம்ப தேங்க்ஸ் பாரு!

பார்ட் - 2 வா?? ஓகே.. ட்ரை பண்றேன்! :))

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)