topbella

Saturday, January 19, 2019

முழுதாய் என்னை..!!!



கும்பிடும் கோவிலில்
குங்குமம் வைத்தாயே
குறையேதும் இல்லாமல்
கூட வருவதாய் சொன்னாயே..

கைகோர்த்து கதை பேசி
காலமெல்லாம் வருவேனென்றாயே
கண்ணிமைக்கும் நேரத்தில்
கலைத்தும் சென்றாயே..

வார்த்தை அம்புகளால்
வாதம் செய்தாயே
தாக்கும் என்றறிந்தே
தயங்காமல் பேசினாயே..

மனம் அமைதி கொண்டதா
மௌனம் மாற்று கண்டதா
உள்ளம் உண்மை உணர்ந்ததா
உதிரம் உறைந்தே விட்டதா..

தெளிவு உன்னை கொண்டதா இல்லை 
தேடல் கை கோர்த்ததா
முடிவு செய்து கொண்டாயா இல்லை 
முழுதாய் என்னை கொன்றாயா..

முகவரியை தொலைத்தாயா இல்லை
முடிவு செய்தே தோற்றாயா
கவிதை வரைய சென்றாயா இல்லை
கதையை முடித்து வைத்தாயா..?!

~அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)

7 comments:

Unknown said...

மனதை கனமாக்கிவிட்டது! மனக்குமுறல்....அருமையான கவிதைப்பாடல்!

Unknown said...

அழகான கவிதை👌

Avargal Unmaigal said...

மனதை ஊடுருவி சென்று நெகிழ வைத்த வரிகள்....

Avargal Unmaigal said...

இது கற்பனை கவிதையா அல்லது உண்மையிலே துணையை இழந்த சோகத்தில் எழுதிய கவிதையா?அப்படி ஏதும் நிகழ்ந்திருக்காது என நம்புகிறேன்

ஆனந்தி said...

நன்றி

ஆனந்தி said...

நன்றி

ஆனந்தி said...

நன்றி

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)