topbella

Sunday, May 20, 2018

தயை செய்..!!!

நிலவில் உறங்கிடும் நேசம் நெஞ்சில் உறைந்திடும் பாசம் கனவில் தோன்றிடும் உருவம் கண்முன்னே மறைந்திட மருகும்.. கரைந்திட்ட கனவுகளில் நிறைந்திட்ட நினைவுகளில் உயிர்த்திட்ட உணர்வுகள் உயிர் தொட்ட வருடல்கள்.. மலரின் மௌனம் காத்து வண்டின் ஆர்வம் பூத்து துடிக்கும் உள்ளம் கிள்ளும் தூரல் பெய்தே வெல்லும்.. மருண்ட விழிப் பார்வையில் இருண்ட மேகப் போர்வையில் அகண்ட பிரபஞ்சம் கொஞ்சம் அன்பு செய் என்றே கெஞ்சும்.. விடியாத இரவின் நீட்சியும் முடியாத பகலின் ஆட்சியும் தயங்காது உன்னிடம் தஞ்சம் தயை செய் என்றே கெஞ்சும்..!!! ~அன்புடன் ஆனந்தி

(படம்: கூகிள், நன்றி)


1 comments:

KILLERGEE Devakottai said...

அருமை இரசித்தேன்...

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)