topbella

Thursday, January 10, 2013

என்னுயிரில் சித்திரமாய்...!


எத்தனை யுகங்களாய் 
உனக்காய் காத்திருந்தேன் 
எல்லையில்லா கனவுகளில் 
எதிர்பார்த்தே பூத்திருந்தேன்...

உணர்ந்த நிமிடத்தில் 
உறைந்த தருணத்தில் 
உருவமற்ற நிலையில் 
உள்ளுக்குள் சிலிர்த்திருந்தேன்...

மென்மையான பெண்மைக்குள் 
மெல்லிசையாய் நீ வந்தாய் 
மெருகூட்டும் கலைஞனைப் போல் 
மீட்டியே எனை வென்றாய்....

புதிருக்குள் அடங்காத
புயல் காற்று நீயன்றோ...
என் கண்களுக்குள் 
கவிதை சொல்லும் 
கண்மணியும் நீயன்றோ...

எழுதாத வரிகளெல்லாம் 
என்னுள்ளே பத்திரமாய் 
எழுதி வைத்தேன் உன்னுருவை 
என்னுயிரில் சித்திரமாய்...!


~அன்புடன் ஆனந்தி



(படம்: நன்றி கூகிள்)


4 comments:

சித்தாரா மகேஷ். said...

//மென்மையான பெண்மைக்குள்
மெல்லிசையாய் நீ வந்தாய்
மெருகூட்டும் கலைஞனைப் போல்
மீட்டியே எனை வென்றாய்....//
காதல் அன்பில் திளைப்பதும் ஓர் சுகம்தான்.எல்லார்க்கும் அது வாய்ப்பதில்லை.உங்கள் கவி மூலம் அந்த இனிமையை உணர்கிறேன்.நன்றி அக்கா.

Prabu M said...

//மெருகூட்டும் கலைஞனைப் போல்
மீட்டியே எனை வென்றாய்....//

அற்புதமான வரிகள்!

உஷா அன்பரசு said...

மென்மையான உணர்வுகளை சொல்லி அருமை!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சித்தாரா மகேஷ்
கருத்திற்கு மிக்க நன்றி.


@Prabu M
மிக்க நன்றி.



@உஷா அன்பரசு
மிக்க நன்றி.

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)