topbella

Tuesday, March 8, 2011

பெண் என்னும்....!


"மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்" என்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை... அப்படியே தவம் செய்து, இப்பிறப்பை அடைந்ததாய், பெருமையுடன் எண்ணிக் கொண்டு, இந்த "அகில உலக மகளிர் தினத்தில்"... அனைத்து மங்கையர்க்கும், எனது வாழ்த்துக்களுடன் சில வரிகள்...!

கருவில் அரும்பி
உருவம் தரித்து
பருவம் அடையுமுன்
பலபல பக்குவங்கள்...
பதறாமல் பெறுபவள்...!

அரும்பும் மலராய்
அழகாய் மணம்வீசி
அன்பின் ஆழத்தை
அனைவரிடமும் காட்டி
வலம் வருகின்ற
வண்ணத் தேர்...!

எதையும் இயன்றவரை
எடுத்துச் செய்திடும்
உறுதியான உள்ளத்துடன்
உலகை வலம் வரும்
உன்னத படைப்பு...!

அகத்தில் அன்புடனும்
புறத்தில் பண்புடனும்
பெண்மைக்கு உண்மையுடனும்
பிரமிக்கும் திறமையுடனும்
பிரகாசிக்கும் சுடர்...!

பொறுமைக்கு இலக்கணமாய்
புனிதத்திற்கு பொருத்தமாய்
அடக்கம் அறிந்தவளாய்
அகங்காரம் தொலைத்தவளாய்
அன்பிற்கு பணிபவள்...!

ஆயிரம் அலுவல் செய்தும்
அலுக்காத அன்னையுள்ளம்...
அன்பாய் ஓர் வார்த்தைக்காய்
அடை காக்கும் பெண்ணுள்ளம்...!




~அன்புடன் ஆனந்தி 




(படம்: நன்றி கூகிள் )

48 comments:

டக்கால்டி said...

மகளிர் தின வாழ்த்துகள்

Anonymous said...

மங்கையர் தின வாழ்த்துக்கள் ஆனந்தி

டக்கால்டி said...

மகளிர் தின வாழ்த்துகள்

சாந்தி மாரியப்பன் said...

//ஆயிரம் அலுவல் செய்தும்அலுக்காத அன்னையுள்ளம்...அன்பாய் ஓர் வார்த்தைக்காய்அடை காக்கும் பெண்ணுள்ளம்...!//

கவிதை நல்லாருக்கு ஆனந்தி..

சௌந்தர் said...

கவியரசி ஆனந்திக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கவிதை சூப்பர் ஆனந்தி.
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

தமிழ் உதயம் said...

பெண்கள் தின வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

தங்கள் கவிதையை அழகிய உருவாக கண்டாலதன்
இறுதிப்பத்திதான் அதன் உயிர் எனச் சொல்லலாம்
அருமையான படைப்பு தொடர வாழ்த்துக்கள்

jayakumar said...

nice...greetings for women's day

Anonymous said...

மகளிர் தின வாழ்த்துக்கள் ஆனந்தி! :)

Anonymous said...

பாரதியைத் தவிர வேறு பாவலர்களைப் படிக்காதிருக்கும்போது, அனைத்தையும் பாரதியார் சொன்னதாகத்தான் போடும்னிலை வரும்.

‘மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”

என்பது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதியது.

r.v.saravanan said...

மங்கையர் தின வாழ்த்துக்கள் ஆனந்தி

VELU.G said...

பெண்கள் தின வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

>>>
ஆயிரம் அலுவல் செய்தும்
அலுக்காத அன்னையுள்ளம்...
அன்பாய் ஓர் வார்த்தைக்காய்
அடை காக்கும் பெண்ணுள்ளம்...!

டைரில குறிச்சு வெச்சுக்கிட்டேன்.. கலக்கல் லைன்ஸ் ஆனந்தி

middleclassmadhavi said...

மகளிர் தின வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

சூப்பர்ர் கவிதை..மகளிர் தின வாழ்த்துக்கள்!!

ஆயிஷா said...

கவிதை நல்லாருக்கு ஆனந்தி.

உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

tamilbirdszz said...

நல்லா இருக்கிறது உங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்

Unknown said...

hiiii anbudan ananthi...

மகளிர் தின வாழ்த்துகள் to u too..

kavithai arumai epavum pol.

congrats.

சீமான்கனி said...

//அரும்பும் மலராய்
அழகாய் மணம்வீசி
அன்பின் ஆழத்தை
அனைவரிடமும் காட்டி
வலம் வருகின்ற
வண்ணத் தேர்...!//

அருமை...

மங்கையர் தின வாழ்த்துக்கள் ஆனந்தி...

Akila said...

happy womens day dear.... nice kavithai...

Starjan (ஸ்டார்ஜன்) said...

மங்கையர் தின வாழ்த்துக்கள் ஆனந்தி.

Unknown said...

வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Too good Ananthi... மகளிர் தின வாழ்த்துகள்...:))

மோகன்ஜி said...

அழகன் கவிதை.மங்கையர் தின வாழ்த்துக்கள் ஆனந்தி

ஹேமா said...

பெருமை கொள்வோம் தோழி.அன்புக்கு மட்டும் அடங்குவோம் !

மாணவன் said...

கவிதை சூப்பர்...

மகளிர் தின நல்வாழ்த்துக்கள் :)

Sanjay said...

ஆயிரம் அலுவல் செய்தும்
அலுக்காத அன்னையுள்ளம்...
அன்பாய் ஓர் வார்த்தைக்காய்
அடை காக்கும் பெண்ணுள்ளம்...!//

அழகோ அழகு...!!! ;-)

'பரிவை' சே.குமார் said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு சகோதரி.

உங்களுக்கும் உங்கள் தோழியருக்கும், உறவுகளுக்கும் மகளிர்தின வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு சகோதரி.
உங்களுக்கும் உங்கள் தோழியருக்கும், உறவுகளுக்கும் மகளிர்தின வாழ்த்துக்கள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@டக்கால்டி
வாழ்த்திற்கு நன்றி :)


@இந்திரா
வாழ்த்திற்கு நன்றிங்க :)


@அமைதிச் சாரல்
ரொம்ப நன்றிங்க :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சௌந்தர்
ஏன் ஏன்?? நா கேட்டேனா?? எதுக்கு இந்த வம்பு உங்களுக்கு?
வாழ்த்திற்கு நன்றி :)


@தோழி பிரஷா
ரொம்ப தேங்க்ஸ்பா.. வாழ்த்திற்கு நன்றிங்க :)


@தமிழ் உதயம்
வாழ்த்திற்கு நன்றிங்க :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Ramani
கருத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றிங்க :)


@jayakumar
Thanks for the wishes :)


@Balaji saravana
நன்றி பாலாஜி :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Jo Amalan Rayen Fernando
மன்னிக்கவும்.. பாரதியின் மீது உள்ள, அளவு கடந்த பற்றினால் அனைத்தும் பாரதி எழுதியதாகவே தோன்றி விடுகிறது.

மாற்றி விட்டேன்.. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி..

@r. v. saravanan
வாழ்த்திற்கு நன்றிங்க :)


@VELU. G
வாழ்த்திற்கு நன்றிங்க :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சி. பி. செந்தில்குமார்
ரொம்ப நன்றிங்க :)


@middleclassmadhavi
வாழ்த்திற்கு நன்றிங்க :)


@S. Menaga
தேங்க்ஸ் பா.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஆயிஷா
ரொம்ப நன்றிங்க... வாழ்த்திற்கும் நன்றி :)


@tamilbirdszz
நன்றிங்க.. வாழ்த்திற்கும் நன்றி :)


@poorna
thanks Kala ;-)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சீமான்கனி
தேங்க்ஸ்.. வாழ்த்திற்கும் நன்றிங்க :)


@Akila
Thanks pa.. same to you :)


@Starjan (ஸ்டார்ஜன்)
வாழ்த்திற்கு நன்றிங்க.. நலமா? :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@பாரத் பாரதி
வாழ்த்திற்கு நன்றிங்க :)


@அப்பாவி தங்கமணி
தேங்க்ஸ் பா... வாழ்த்திற்கும் நன்றி :)


@மோகன்ஜி
ரொம்ப நன்றிங்க :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஹேமா
வாங்க ஹேமா.. சரியா சொன்னிங்க.. நன்றிங்க :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@மாணவன்
ரொம்ப நன்றிங்க :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Sanjay
வாங்க லேட் எப்பெக்ட்... ரெம்ப நன்றியோ நன்றிங்க :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சே. குமார்
வாழ்த்திற்கு ரொம்ப நன்றிங்க :)

ஜெய்லானி said...

மகளிர் தின வாழ்த்துகள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஜெய்லானி
வாழ்த்துக்கு நன்றி :)

TamilTechToday said...

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

Nandhini said...

பெண்கள் தின கவிதை சூப்பர்...

///ஆயிரம் அலுவல் செய்தும்அலுக்காத அன்னையுள்ளம்////

அருமை...

சமுத்ரா said...

belated மகளிர் தின வாழ்த்துகள்!

Anonymous said...

நல்லா எழுதி இருக்கீங்க

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)