ஆறு அறைகள் கொண்ட
அம்சமான மாளிகை....
என் அப்பா தன் அன்னையின்
பெயரில் கட்டிய அன்பு ஆலயம்...
குருவிகளாய் நால்வர் நாங்கள்
கும்மாளமிட்டு கூடி வாழ்ந்த இடம்...
இளம் பச்சை நிறத்தில்
வெளி வண்ணப் பூச்சும்
அடர் அரக்கு நிறத்தில் அதன் மேல்
அழகாய் எழுத்துக்களும்...
வெளியில் நின்று பார்த்தாலே
வெகுவாய் கவரும் தென்னை மரங்களும்
உள்ளே நுழைந்ததும்
உபசரிக்கும் அழகு ரோஜாக்களும்
நெஞ்சை அள்ளும் டிசம்பர் பூக்களும்
கூட்டமாய் கூடி நிற்கும்
குரோட்டன்ஸ் செடிகளும்...
அப்படியே உள்ளே வந்தால்
அங்குமிங்கும் கனகாம்பரமும்..
அழகழகாய் பூத்திருக்கும்
அடுக்குச் செம்பருத்திப் பூக்களும்...
பாத்திகளில் பாங்காய் சிரிக்கும்
கீரை வகைகளும்...
பக்கத்திலேயே வளர்ந்து நிற்கும்
பப்பாளி மரமும்....
கொத்து கொத்தாய் காய்த்திருக்கும்
கொய்யா மரமும்....
சிரித்தாற்போல் சித்திரமாய்
சீத்தாப்பழ மரமும்...
அணில் வந்து கடிக்காமலிருக்க
அங்கங்கே அப்பா கட்டி வைத்த
ஆவின் பால் பாலிதீன் பைகளும்...
அதை தாண்டி இப்புறம் வந்தால்
அழகான துளசி மாடமும்...
அதற்குள்ளே அம்சமாய் ஒரு
அகல் விளக்கும்...
இத்தனை தவிரவும்
இதர பல செடி, கொடிகளுடன்
இயற்கையுடன் ஒன்றி
இன்பமாய் வாழ்ந்த வீடு
எங்கள் வீடு....!!
இது அத்தனையும் எங்கள் வீட்டில் உண்டு... அதெல்லாம் இப்போ ரொம்ப மிஸ் பண்றேன்..... அம்மா, அப்பா, உடன் பிறந்தோர், சொந்த பந்தம் மட்டும் இல்லாம நம்ம வாழ்ந்த வீடும் நமது வாழ்வின் அங்கமாகவே மாறி விடுவது.... உண்மைதானே...!!
பகிர்வைப் படித்ததற்கு நன்றிகள் பல...!!
(பி. கு.: இந்த மஞ்சள் செம்பருத்தி எங்கள் வீட்டில் பூத்த மலர்....!! )
...அன்புடன் ஆனந்தி







