topbella

Tuesday, September 15, 2020

இல்லாத தாயை எண்ணி...!


இல்லாத தாயை எண்ணி
இதயம் நனைந்து
சொல்லாமல் சேதி சொல்லும்
சொக்கத் தங்கம்...
அம்மா....நீ
இருந்திருந்தால்
இவ்வாறே எனை
அணைத்திருப்பாயோ?!
இல்லை இருகண் மூடி
நினைத்திருப்பாயோ?!
உன் இதயச் சூட்டை
நான் அறியேன்..
என் இதய நெருப்பை
நீ அறிவாயோ?
காணாத உனையெண்ணி
கண்ணீர் வடித்த நாட்கள் பல..
கடவுளின் சாபம் என்றே சமாதானம்
செய்த நாட்கள் சில..
உலகமே வெறித்திடினும்
உன் துணையில் வென்றிருப்பேனே..
உறவுகள் கழித்திடினும்
உன் உறவில் மகிழ்ந்திருப்பேனே..
கனவுகள் கலைந்திடினும்
உன் கைகோர்த்தே நானிருப்பேனே
காலம் முடிந்திடினும்
உன் காலடியில் தவழ்ந்திருப்பேனே..!
~அன்புடன் ஆனந்தி



 

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)