topbella

Thursday, July 19, 2018

கடைசி வரை...!!!


இதழ்களில் இடம் தேடு
இதயத்தின் தடம் நாடு
விழி வழி மொழி பேசு
மௌனத்தால் காதல் பேசு..
முத்தத்தால் யாகம் செய்
சத்தமின்றி யுத்தம் செய்..

குழந்தையின் மென்மையுடன்
கொஞ்சிப் பேசு..
விழித்தென்றல் மேல் உரச
மெல்ல வீசு..
உருகும் உளம் தாங்கி
உயிரால் உறையச் செய்..

கருவில் ஏந்தும் உயிராய்
கருத்தாய் காபந்து செய்..
மருகி நிற்கும் பொழுதில்
மன்றாடும் வேளையில்
மறுகணம் தயங்காது
மடியோடு சேர்த்துக் கொள்..

கண்களில் கவலை கண்டால்
கையணைத்தே தைரியம் பேசு
காரிருள் வேளையிலும்
கதிரவனின் தன்மை கொண்டு
காதலின் கரம் பிடித்தே
கடைசி வரை முன்னேறு..!!!

~அன்புடன் ஆனந்தி


படம்: நன்றி, கூகுள்


1 comments:

Ajai Sunilkar Joseph said...

அழகான கவிதை அக்கா..!

குழந்தையின் மென்மையுடன்
கொஞ்சிப் பேசு..
விழித்தென்றல் மேல் உரச
மெல்ல வீசு..
உருகும் உளம் தாங்கி
உயிரால் உறையச் செய்..

ரொம்ப பிடித்த வரிகள்...

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)