topbella

Monday, January 15, 2018

சலனமில்லா சகாப்தம்...!!!

மூடிய இமைகளில் சத்தமின்றி முத்தமிடும்... முழு நிலவாய் முன் தோன்றி முகமன் இன்றி கைப்பற்றும்.. எத்தனையோ பேர் இருப்பினும் தன்னுயிர் தடம் பார்த்து தடையின்றி நடை போடும்.. நிஜங்களை நினைத்து வாழும் நிகழ்தலில் நெஞ்சம் ஏங்கும் கொஞ்சும் சிரிப்பில் குழந்தையை மிஞ்சும் வெகுண்டு எழும் நேரத்தில் எரிமலையாய் சிதறும்.. அன்பினை அமுதாய் ஊட்டும் அவ்வப்போது நம்மை வீழ்த்தும் எளிதில் எதையும் ஒத்துக்கொள்ளாது எதிரில் நின்று பித்துக்கொள்ள செய்யும் ஆத்திரம் கண் மறைப்பின் அன்பினால் கண் திறக்கும் தொடுவானமாய் நீண்டு செல்லும் நீங்காமல் நெஞ்சில் வீசும்.. வானவில்லின் வண்ணம் காட்டும் வகை வகையாய் எண்ணம் மீட்டும் நினைவுகளால் நெகிழச் செய்யும் நேரில் கண்டால் மௌனமாகும் கண்டதை எண்ணி கலங்கி நிற்கும் கைகளுக்குள் குழந்தையாய் கண் மூடிக் கிடக்கும்.. பிடிவாதமாக சண்டையிடும் பிடித்து வைத்து பிரியம் பேசும் சலனமில்லா சகாப்தம் காணும் சப்தமும் அடக்கி ஆளும்..!!! ...அன்புடன் ஆனந்தி

4 comments:

Vidhya Srinivasan said...

Very beautiful written! மனதை உருக வைத்த வரிகள். Keep writing.
Sreevidya.

Unknown said...

Very beautiful ! Keep writing. உருக வைத்த வரிகள்.

Unknown said...

உருக வைத்த வரிகள். Very beautifully written,keep writing

Nagendra Bharathi said...

அருமை

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)