topbella

Tuesday, August 30, 2016

வரத்திற்கு அர்த்தம்...!!!



விடிதலுக்கு விளக்கம் கேட்பின்
அவன் விழிகளைச் சொல்வேன்...
அந்தி முடிதலுக்கு அர்த்தம் கேட்பின் 
அவன் மடி சாய்தல் என்பேன்..

தாய்மையின் அடையாளம் கேட்பின் 
அவன் அன்பை சொல்வேன்.. 
வரத்திற்கு அர்த்தம் கேட்பின்
அவனோடான வாழ்வைச் சொல்வேன்..

கவிதைக்கு அர்த்தம் கேட்பின் 
அவன் வாய்மொழியை சொல்வேன்..
கற்பிற்கு விளக்கம் கேட்பின்
அவன் காதலைச் சொல்வேன்... 

இனிமைக்கு விளக்கம் கேட்பின்
அவன் இதயம் என்பேன்...
துணிவுக்கு விளக்கம் கேட்பின் 
அவன் தோள்கள் என்பேன்..

பணிவுக்கு விளக்கம் கேட்பின் 
அவன் பண்பை சொல்வேன்.. 
நேர்மைக்கு விளக்கம் கேட்பின் 
அவன் நேசம் என்பேன்..

இனியும் எண்ணற்ற விளக்கங்கள்..
ஆயிரமாயிரம் அர்த்தங்கள்...
வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து
வாக்கியம் விடாமல் அடுக்கி வைக்கிறேன்..!


...அன்புடன் ஆனந்தி




( படம்: கூகிள், நன்றி)

3 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
கவிதைக்கு அர்த்தம்கேட்பின்
இந்தக் கவிதையைச் சொல்வேன்
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Unknown said...

Arumai! Neenda naatkkalukkuppin ..... Inimaiyaana kavithai!

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை....
வாழ்த்துக்கள் சகோதரி.

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)