topbella

Monday, March 28, 2016

மனிதர்கள் பலவிதம்..!


உள்ளதை விட்டு விட்டு
உரிமையை மறந்து விட்டு
எண்ணத்தின் போக்கில் 
வாழ்வோர் பலபேர்..

நல்லதே செய்த போதும்
நலம் மட்டுமே நாடிய போதும்
எள்ளளவும் இரக்கமின்றி 
தொல்லையாய் ஆவோர் சிலபேர்..

எல்லாம் அமைந்து இருந்தும் 
அதன் அருமை உணராமல்
எதையோ தேடியவண்ணம்
வாழ்க்கை கழிப்பார் சிலபேர்..

பரமனே நேரில் வந்தாலும் 
பக்குவமாய் பேசினாலும்
பதட்டமாகவே இருந்தபடி
பரிதவிப்பார் சிலபேர்..

எதுவும் நடக்கட்டும்
எனக்கென்ன வந்ததென்றே
எவர் பற்றியும் எண்ணாமல் 
அவர் வழி நடப்பார் சிலபேர்..

எல்லாமும் தன் உடமை என்றே
கல்லாவை நிரப்புதல் போன்று..
கரிசனமே இல்லாமல் 
களித்து வாழ்வார் சிலபேர்..

ஊழியம் செய்தபடி 
உரிமை இழந்த படி 
உறவுக்காய் ஏங்கியபடி 
உண்மையாய் இருப்பர் சிலபேர்..!


...அன்புடன் ஆனந்தி


( படம்: கூகிள், நன்றி )

1 comments:

ISR Selvakumar said...

நன்றாக உள்ளது தங்ஸ்

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)