topbella

Friday, February 12, 2016

நித்தியமான உணர்வு...!



கண் திறந்தே கனா காணும்...
மெய் மறந்தே கவிதை பேசும்...
உயிர் கொடுத்தே உயிர் கொல்லும்..
உள்ளத்தில் ஊஞ்சல் ஆடும்.. 

எண்ணத்தில் ஏகாந்தம் எழுதும்..
எதையும் ஏற்கச் செய்யும்.. 
விழி விரித்தே விந்தை செய்யும்..
விழிகளுக்குள் மொழி பயிலும்.. 

பார்வையில் பரவசம் அடையும்..
பார்க்காவிடில் பரிதவிக்கும்... 
ஒற்றைச் சொல்லில் உலகம் மறக்கும்..
கற்றைக் குழலில் காவியம் படைக்கும்..

தினசரிகளை திணறச் செய்யும்..
திகட்டும் அன்பில் திளைக்கச் செய்யும்..
மோனத்தில் உறைந்திருக்கும்...
மோகத்தில் நிறைந்திருக்கும்...

காலத்தை சிறை பிடிக்கும்.. 
கனவுகளை கலைத்துப் போடும்..
நினைவுகளை நிலைக்கச் செய்யும்..
நித்தியமான உணர்வு காதல்..!


... அன்புடன் ஆனந்தி 



(படம்: கூகிள், நன்றி )






2 comments:

'பரிவை' சே.குமார் said...

காலத்தை சிறை பிடிக்கும்..
கனவுகளை கலைத்துப் போடும்..
நினைவுகளை நிலைக்கச் செய்யும்..
நித்தியமான உணர்வு காதல்..!

அருமையான வரிகள்.

கவிதை அருமை சகோதரி.

Nagendra Bharathi said...

அருமை

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)