![Travel Photographer Captures Gorgeous Flowing Gowns Against ...](https://i.pinimg.com/originals/d6/b4/31/d6b431fec45fa865105508f6647a0e3c.jpg)
கலையாத கனவுக்குள்
கவிதையாய் நீ வந்தாய்
வரைந்து வைத்த ஓவியம் போல்
வகையாய் என்னுள் இடம் கொண்டாய்..
போராட்டம் பல வரினும்
போராட்டம் பல வரினும்
ஏதேனும் இடர் வரினும்
புரிதலின் பூரிப்பில்
புதுப்பூவாய் பூக்கச் செய்வாய்..
உன் புன்னகை அழைப்பில்
என்னையே மறக்கச் செய்வாய்..
உனக்குள் அமிழ்ந்தே
உன்னுயிரில் கரையச் செய்வாய்..
இமைகளுக்குள் புகுந்தே
இரவுகள் தொலைக்கச் செய்வாய்..
இதமான உன் அன்பில்
இவ்வுலகம் மறக்கச் செய்வாய்..
இமைகளுக்குள் புகுந்தே
இரவுகள் தொலைக்கச் செய்வாய்..
இதமான உன் அன்பில்
இவ்வுலகம் மறக்கச் செய்வாய்..
உன்னை வரையறுக்க
உவமைகள் தேவையில்லை
உண்மைக் காதலுக்கு
உவமானம் தேவையில்லை...
எந்நிலையிலும் எனை நீங்கா
நின்னுயிர் ஒன்றே நிதர்சனம்...
நின்னடி சேர்வதொன்றே
என்னுயிரின் நிர்ணயம்....!!!
...அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)
4 comments:
/// உன்னை வரையறுக்க
உவமைகள் தேவையில்லை...
உண்மைக் காதலுக்கு
உவமானம் தேவையில்லை... ///
அருமை... ரசித்தேன்...
வாழ்த்துக்கள்...
உண்மைக் காதலுக்கு
உவமானம் தேவையில்லை...// superb !
வணக்கம்!
பொங்கிவரும் காதலைப் போற்றுகின்ற உன்கவியில்
தங்கித் தழைக்கும் தமிழ்!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அருமை
Post a Comment