topbella

Wednesday, October 23, 2013

நிழலாய்...!


ஏகாந்த வெளியில் நிதம்
எண்ணத்தை எழுத்தாக்கி
எதார்த்தத்தை கவிதை
செய்து வைத்தேன்...

படித்தே என்னுள் அதை
பதியம் செய்து வைத்தேன்..
உரமாய் உன் அன்பை
ஊற்றியும் வைத்தேன்..

கனவுகளில் களித்தாடி
கலவரம் செய்யும் உன்னை..
கைது செய்தே என்னுள்
கட்டியும் போட்டு விட்டேன்..

உணர்வுகளில் உறைந்தவனை
உள்ளத்தில் பூட்டி வைத்தே..
உள்ளார்ந்த அன்பினாலே
உயிருக்குள் புதைத்து வைத்தேன்...

நிஜத்தில் உன்னையே என்றும்
நிழலாய் சூழ்ந்திருப்பேன்...
நித்தமும் உன் நினைவில்
நீக்கமற நிறைந்திருப்பேன்...!


...அன்புடன் ஆனந்தி 




(படம்: நன்றி கூகிள்)

5 comments:

சீமான்கனி said...

"கனவுகளில் களித்தாடி
கலவரம் செய்யும் உன்னை..
கைது செய்தே என்னுள்
கட்டியும் போட்டு விட்டேன்.."

அழகு

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை சகோதரி...
தொடர்ந்து எழுதுங்க...
வாழ்த்துக்கள்...

Vijaya Vellaichamy said...

Wonderful kaadal kavithai! like it a lot!

Yaathoramani.blogspot.com said...

அருமையான அன்பின் வெளிப்பாடு
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Anonymous said...

கவிதை அருமையாய் உள்ளது. பகிர்விற்கு நன்றி!

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)