topbella

Wednesday, July 3, 2013

விதைத்த விதைகள்...!


விதைத்த விதைகள்
வீண் போவதில்லை 
விளையும் துன்பம் எதுவும் 
விதியின் வினைப்பயன் 
மட்டுமே இல்லை..

கடந்து போகும் நேரம் எதுவும் 
கைக்கு எட்டுவது இல்லை 
கலைந்து போன உறவுகள் எளிதில் 
கை கூடுவதும் இல்லை..

மறைத்து வைத்த துன்பம் எல்லாம் 
மனதில் நிற்பதும் இல்லை 
மனதில் நின்ற எதுவும் 
மறைந்து போவதும் இல்லை..

வார்த்தைகள் தவறி விட்டால் 
வாழ்க்கையில் இன்பம் இல்லை 
வாய் பேசாது இருப்பதாலேயே 
வக்கற்றவன் ஆகி விடுவதுமில்லை..

தேடி வந்த சொந்தங்கள் 
தேக்கி வைத்த குமுறல்கள் 
தேளாய் கொட்டியும் 
நீ தேக்கி வைத்த 
பாசம் மறைவதில்லை..!

...அன்புடன் ஆனந்தி


(படம்: நன்றி கூகிள்)

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சொன்னது அனைத்தும் உண்மை... (அனுபவத்தில்...!)

வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு வலையில் உங்கள் கவிதை.

அருமை.
வாழ்த்துக்கள் சகோதரி.

sathishsangkavi.blogspot.com said...

// மறைத்து வைத்த துன்பம் எல்லாம்
மனதில் நிற்பதும் இல்லை
மனதில் நின்ற எதுவும்
மறைந்து போவதும் இல்லை.. //

உண்மைதாங்க...

sathishsangkavi.blogspot.com said...

// தேடி வந்த சொந்தங்கள்
தேக்கி வைத்த குமுறல்கள்
தேளாய் கொட்டியும்
நீ தேக்கி வைத்த
பாசம் மறைவதில்லை..! //

அழகான உண்மையான வரிகள்..

Nandhini said...

உங்கள் கவிதை அருமை...வாழ்த்துக்கள்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@திண்டுக்கல் தனபாலன்

கருத்துக்கு மிக்க நன்றி.

@சே. குமார்

ஆம்.. கருத்துக்கு மிக்க நன்றி.

@சங்கவி

ஹ்ம்ம்.. கருத்துக்கு நன்றி.


@நந்தினி

கருத்துக்கு நன்றி நந்து.



About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)