topbella

Thursday, March 15, 2012

என் செய்வேன்...!

Pin on Sad dpz

எழுதாத கவிதை பல
ஏற்றி வைத்தேன் இதயத்திலே..
எழுத வைத்தவன் நீ
எட்டி நின்று என்ன வேடிக்கை?

எவரெவரோ என் வாழ்வில்
எப்படியோ வந்து போக..
எதேச்சையாய் வந்தவன் போல்
என்னுயிரில் கரைந்து விட்டாய்..

எதார்த்தமாய் இருக்கத் தான்
எவ்வளவோ முயற்சிகள்
எங்கு சுற்றியும்..
என் கண் முன்னேயே
வந்து நிற்கும்
உன் நினைவு பட்சிகள்...

ஆழ்மனதில் ஆசை ஆயிரம்
எனை ஆள்பவன் நீ தரும்
சோதனையோ கோபுரம்...

பார்க்கும் போதெல்லாம் சளைக்காமல்
பதிவு செய்த ஒலிநாடா போல்
பிறகு வேறென்ன என்கிறாய்...
என்னவென்று சொல்வேன்...

எதிர்பார்க்காதே என்றே
எத்தனையோ முறை
எச்சரித்து விட்டேன்...
என் இதயம் கூட
என் பேச்சு கேட்காமல்
எதிர்த்தே நிற்கிறது
என் செய்வேன்.....!!!


~அன்புடன் ஆனந்தி

4 comments:

'பரிவை' சே.குமார் said...

சகோதரி...

என் சொல்வேன்... ஆஹா... அருமை.

சத்ரியன் said...

சொன்னாலும் கேட்பதில்லை காதல் மனது.

மனதோடு பேசிக்கொள்வதே பேரானந்தம்.

Nandhini said...

என் செய்வேன் கவிதை மிகவும் அருமை...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@குமார்

ரொம்ப நன்றிங்க. :)


@சத்ரியன்

உண்மை தான். கருத்துக்கு நன்றி :)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)