topbella

Tuesday, March 29, 2011

பிறந்த நாள்...!


சுற்றம் நட்பின் வாழ்த்து
உன்னை மகிழ வைக்கும்
உயிர்ப்பு கொண்ட வித்து...!

உதட்டளவில் உபசரிப்பின்றி
உள்ளத்தில் வெறுப்பின்றி
ஒருவர் வாழ்த்திடினும்
உள்ளமெங்கும் மகிழ்ச்சி...!

புத்தாடை புனைய ஆசை
புதிதாக பிறக்க ஆசை
புதுப்பூவாய் மணக்க ஆசை
புத்துணர்வோடு இருக்க ஆசை...!

ஒவ்வோர் நிமிடமும்
ஒன்றாகச் சேர்த்து
ஒழுங்காய் ஏதேனும்
செய்திடவே ஆசை...!

வெறுப்பிருந்தால் மறக்க ஆசை...
விருப்பிருந்தால் உரைக்க ஆசை...
இதுவரை விட்டதெல்லாம்..
இனியேனும் எட்ட ஆசை...!

~அன்புடன் ஆனந்தி 

28 comments:

நசரேயன் said...

//வெறுப்பிருந்தால் மறக்க ஆசை...
விருப்பிருந்தால் உரைக்க ஆசை...//

ஆளுநர் உரை ?

Menaga Sathia said...

நல்ல கவிதை..

யாருக்கு பிறந்தநாள் ஆனந்தி!!

சாந்தி மாரியப்பன் said...

கவிதை நல்லாருக்கு.. ஆமா யாருக்கு பிறந்தநாள்??

Anisha Yunus said...

ஆஹா வலையுலகிற்கு ஒரு வருடம் ஆயிட்டால் பார்ட்டி கேட்டுடுவோம்னு இப்படி ரகசிய கவிதையா...ஹ்ம்ம்... நடத்துங்க நடத்துங்க.

இன்று போல் என்றும் எழுதி எழுதி, ஓட்டு போட்டு, பின்னூட்டமிட்டு அகமகிழ்ந்து வாழ்க வாழ்க ஹெ ஹெ :))

நிரூபன் said...

இதுவரை விட்டதெல்லாம்..
இனியேனும் எட்ட ஆசை...!//

பிறந்த நாளின் சிறப்பினையும், மன ஓட்டத்தையும் அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

கவிதைக்கு ஏற்றார் போல சந்தம் கொண்டு வார்த்தைகள் வந்து விழ வேண்டும் எனும் வகையில் அழகாக சொல்லாடல்களைக் கையாண்டு வார்த்தைகளைக் கோர்த்திருக்கிறீர்கள்.

Unknown said...

vaarthaigal ovvondrum arpudham.lovely

தமிழ் உதயம் said...

அழகான வாழ்த்து.

சசிகுமார் said...

கவிதை அருமை

middleclassmadhavi said...

நல்ல நல்ல ஆசை!

logu.. said...

கவிதைலாம் நல்லாதானிருக்கு..

ஆனா யாருக்கு பிறந்தநாள்னு சொல்லவே இல்லியே.

TamilRockzs said...

எங்களது அழைப்பை ஏற்று தங்கள் வருகைக்கு மிக்க நன்றி . நேரம் கிடைக்கும் போது தங்களும் நமது வலைப்பூ குழுமத்தில் பதிவிட அன்புடன் அழைக்கிறோம் , மேலும் எமது வலைப்பூவின் இளம் பதிவாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து ஊக்கபடுதவும் .

நன்றி ,
Admin

சி.பி.செந்தில்குமார் said...

ஆனந்தி எப்பவும் புரியற மாதிரி தான் எழுதுவாரு.. ஹி ஹி இன்னைக்கு சத்தியமா புரியல.. யாருக்கு பிறந்த நாள் .. ? யார் வாழ்த்தறாங்க.. ஒண்ணூம் புரியல

எம் அப்துல் காதர் said...

ஒரு வருஷம் முடிந்ததுக்கு கவிதை மட்டும் தானா? ட்ரீட் எங்கே?

தமிழ்க்காதலன் said...

அழகான கவிதை. நயமான சொற்கள். மெல்லிய உணர்வுகளில் வாழ்வின் வெளிப்பாடுகள் ஆங்காங்கே பூத்துக்கிடக்கின்றன.

வாழ்த்துகள்.

உங்களை அன்புடன் அழைக்கிறேன்...
எமது வலைப்பூவிற்கு....

தமிழ்க்காதலன் said...

அழகான கவிதை. நயமான சொற்கள். மெல்லிய உணர்வுகளில் வாழ்வின் வெளிப்பாடுகள் ஆங்காங்கே பூத்துக்கிடக்கின்றன.

வாழ்த்துகள்.

உங்களை அன்புடன் அழைக்கிறேன்...
எமது வலைப்பூவிற்கு....

இராஜராஜேஸ்வரி said...

புதுப்பூவாய் மணக்க ஆசை
புத்துணர்வோடு இருக்க ஆசை...!
வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL said...

அருமையாக பிறந்த்நாள் வாழ்த்து...கலக்கல்...

NADESAN said...

அருமை

அன்புடன்
நெல்லை பெ. நடேசன்

மோகன்ஜி said...

அழகான கவிதை.. உங்க பிறந்த நாள் தானா? வயசைக் கேட்கமாட்டோம்.. சொல்லுங்களேன் ஆனந்தி!

உணவு உலகம் said...

கவிதை அருமை, சொன்ன விதமும் அருமை.

Nandhini said...

கவிதை அருமை.... பிறந்தநாள் யாருக்கு ஆனந்தி!!சொல்லவே இல்லியே....

சித்தாரா மகேஷ். said...

கவிதை அருமை அக்கா...
"ஒவ்வோர் நிமிடமும்
ஒன்றாகச் சேர்த்து
ஒழுங்காய் ஏதேனும்
செய்திடவே ஆசை.."

என்றும் உங்கள்
சித்தாரா மகேஷ்
தேனின் மகிமை

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கவிதை அருமை ஆனந்தி....;)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்
ரெம்ப தேங்க்ஸ் :)

@r.v.saravanan
நன்றிங்க :)

@நசரேயன்
அது தெரியல.. ஆனா எனக்கு தோணியதை சொன்னேன்
நன்றி :)

@S. Menaga
யாருக்கும் இல்லங்க.. :-))
நன்றி


@அமைதிச்சாரல்
ஒருத்தருக்கும் இல்லங்க.. கருத்திற்கு நன்றி :)


@அன்னு
ஹா ஹா ஹா.. உண்மையில் எனக்கு தோணலை..
நீங்க கலக்குறீங்க பா :-) தேங்க்ஸ்


@நிரூபன்
ரசித்துச் சொன்ன உங்களின் கருத்திற்கு ரொம்ப நன்றிங்க :)


@savitha ramesh
ரொம்ப நன்றிங்க :)


@தமிழ் உதயம்
ரொம்ப நன்றிங்க :)

@சசிகுமார்
நன்றிங்க சசி :)

@middleclassmadhavi
ஹ்ம்ம்.. நன்றிங்க :)


@logu
யாருக்கும் இல்லங்க.. தோணுச்சு.. எழுதிட்டேன்
நன்றிங்க :)


@TamilRockzs
அழைப்பிற்கு நன்றி :)


@சி. பி. செந்தில்குமார்
ஹா ஹா ஹா.. அவரு இல்லங்க.. அவள்.. :)
யாருக்கும் பிறந்த நாள் இல்ல.. தோணியதை எழுதினேன்.
அவ்ளோ தாங்க.. நன்றி


@எம். அப்துல் காதர்
ஆஹா.. எனக்கே இப்போ தானே தெரியுது..
ரொம்ப நன்றிங்க :)


@தமிழ்க் காதலன்
ரொம்ப நன்றிங்க.. ரசித்து சொன்ன கருத்திற்கும் நன்றி :)


@ராஜராஜேஸ்வரி
வாழ்த்திற்கு நன்றிங்க :)

@GEETHA ACHAL
ரொம்ப நன்றிங்க :)


@NADESAN
நன்றிங்க :)

@மோகன்ஜி
ஹா ஹா ஹா.. அதெல்லாம் இல்லங்க..
சும்மா தாங்க போஸ்ட் பண்ணேன்.. :-))
நன்றி

@FOOD
கருத்திற்கு நன்றிங்க :)


@நந்தினி
ஹா ஹா ஹா.. ஏன் என் பிறந்த நாள் உங்களுக்கு தெரியாதாக்கும்..
:-))
தேங்க்ஸ் டா..


@சித்தாரா மகேஷ்
தேங்க்ஸ் சித்தாரா :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@தோழி பிரஷா

ரொம்ப தேங்க்ஸ் பா :)

cheena (சீனா) said...

அன்பின் ஆனந்தி - அருமையான பிறந்த நாள் கவிதை - கவிதையின் நாயகி / நாயகனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Mythili (மைதிலி ) said...

//இதுவரை விட்டதெல்லாம்..
இனியேனும் எட்ட ஆசை...!// விட்டதெல்லாம் எட்ட வாழ்த்துக்கள் !!!
கவிதை சூப்பர்.

குடந்தை அன்புமணி said...

கவிதை நன்று. விட்டதெல்லாம் எட்ட வாழ்த்துகள்...

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)