topbella

Wednesday, September 22, 2010

நமக்குள் நாம்...!!

உனக்குள் நான் என்றாய்...
எனக்குள் நீ என்றாய்...
நமக்குள் நாம் ஆவது எப்போது??

ஓர் நாள் பேச்சில்...
ஓராயிரம் வார்த்தைகள் நான் பேச..
ஓர் நொடிப் பார்வையில்
எனை ஊமையாக்கி விட்டாயே...!!

பார்த்துக் கொண்டிருந்தாலே..
பரவசம் ஆகிறதே....
பட்டெனத் தொட்டு விட்டு
பரிதவிக்க விட்டு
வேடிக்கை பார்க்கிறாய்..!!

எதிர்பார்க்கா நேரத்தில்
என்னருகில் நீ வந்து...
எதேச்சையாய் வருவது போல்
எனையணைத்து நீ சென்றாய்...!!

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி
எனை ஏங்கச் செய்வதில் தான்
எத்தனை சுகம் உனக்கு..!

...அன்புடன் ஆனந்தி

64 comments:

Sanjay said...

//பட்டெனத் தொட்டு விட்டு
பரிதவிக்க விட்டு
வேடிக்கை பார்க்கிறாய்..!!//

கவித.... கவித....

//எதிர்பார்க்கா நேரத்தில்
என்னருகில் நீ வந்து...
எதேச்சையாய் வருவது போல்


காதல்... காதல்.....

//எதிர்பார்ப்பை ஏற்படுத்தி
எனை ஏங்கச் செய்வதில் தான்
எத்தனை சுகம் உனக்கு..!!//

ச்சே ச்சே இவனுக்கு இதே வேலையா போச்சு.... :D :D

சௌந்தர் said...

உனக்குள் நான் என்றாய்...
எனக்குள் நீ என்றாய்...
நமக்குள் நாம் ஆவது எப்போது?//

எப்போது என்று சீக்கிரம் சொலுங்க பாஸ்

என்னது நானு யாரா? said...

ஆஹா! ஆஹா! கவிதை கவிதை! சூப்பரு ஆனந்தி! எளிமையா, அருமையா புரிகிற மாதிரி எழுதி போட்டீங்க! வாழ்த்துக்கள்!

சைவகொத்துப்பரோட்டா said...

அசத்தலாய் இருக்கு!!

சௌந்தர் said...

ஓர் நாள் பேச்சில்...
ஓராயிரம் வார்த்தைகள் நான் பேச..
ஓர் நொடிப் பார்வையில்
எனை ஊமையாக்கி விட்டாயே...!!///

அப்படி ஒரு பார்வையா

பரிதவிக்க விட்டு
வேடிக்கை பார்க்கிறாய்..////

ஏன் இப்படி வேடிக்கை பார்கிறார்

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி
எனை ஏங்கச் செய்வதில் தான்
எத்தனை சுகம் உனக்கு..!!////

உங்களை ஏங்கச் செய்து விட்டாரா அட டா இப்படி தான் இருக்கணும்

அண்ணாமலை..!! said...

வார்த்தைகள் தன்னால வந்து அழகா தன்னையே செதுக்கிக்கிது போங்க..!
அருமை!

RVS said...

உனக்குள் நானே உருகும் தேனே... கவிதை நல்லா இருக்கு ஆனந்தி...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அன்பரசன் said...

கவி அருமை சகோ.

Akila said...

kaavithai miga arumai....

http://akilaskitchen.blogspot.com

Regards,
Akila.

ஜெய்லானி said...

//உனக்குள் நான் என்றாய்...
எனக்குள் நீ என்றாய்...
நமக்குள் நாம் ஆவது எப்போது?? //


ஐயரதான் கேக்கனும் ... :-))

நாடோடி said...

காத‌ல் க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌..

ISR Selvakumar said...

ஓர் நொடியா? ஒரு நொடியா?
(விபரமரிந்தவர்கள் சொல்லலாம்)
எதுவாக இருந்தாலும், ரொமாண்டிக்கான நேரத்தில் இலக்கணம் பிசகினால் அழகுதான்.

'பரிவை' சே.குமார் said...

கவிதையில் காதல்...

காதல் கவிதை

அருமையா இருக்குங்க.

அன்புடன் பிரசன்னா said...

அழகிய காதல் கவிதை. அளவுக்கதிகமான காதல் வரிகள்...

Nandhini said...

கவித....அருமை போங்க..!

Unknown said...

காதல் கவிதை அருமை

Mahi said...

அழகான கவிதைங்க ஆனந்தி!

Priya said...

ம்ம்.. காதல் ரசனைக்குரியது.... உங்களின் இந்த கவிதையைப் போலவே!

ஸ்ரீராம். said...

நல்ல கவிதை...பாதியிலேயே நின்று போன மாதிரி ஒரு உணர்வு..

இம்சைஅரசன் பாபு.. said...

அருமையான காதல் கவிதை ..

Unknown said...

M....

HM....

VERY NICE...

:)))

S Maharajan said...

//எதிர்பார்க்கா நேரத்தில்
என்னருகில் நீ வந்து...
எதேச்சையாய் வருவது போல்
எனையணைத்து நீ சென்றாய்...!!

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி
எனை ஏங்கச் செய்வதில் தான்
எத்தனை சுகம் உனக்கு..!!//

ரசித்த வரிகள்
கவிதை மிகவும் அருமை

ஜிஎஸ்ஆர் said...

\\எதிர்பார்ப்பை ஏற்படுத்தி
எனை ஏங்கச் செய்வதில் தான்
எத்தனை சுகம் உனக்கு..!!\\

காத்துககிடப்பதும் ஒரு சுகம்தானே

ஆட்டையாம்பட்டி அம்பி said...

சூப்பர்!

என்றும் எப்போதும் அன்புடன்,
ஆட்டையாம்பட்டி அம்பட்டன் அல்லது அமெரிக்கா அம்பட்டன்!

dheva said...

//எதிர்பார்க்கா நேரத்தில்
என்னருகில் நீ வந்து...
எதேச்சையாய் வருவது போல்
எனையணைத்து நீ சென்றாய்...!!//

நீங்க எதிர்பார்க்காம இருந்திருக்கீங்க... ஆனா அவர் எதேச்சையா வர்ற மாதிரி ரொம்ப நேரம் வெயிட் பண்ணி உங்களுக்கு தெரியாம வந்த மாதிரி வந்த்திருக்கிறார்....கவிதையின் உயிருப்புக்கான வரிகள்.....!

//ஓர் நாள் பேச்சில்...
ஓராயிரம் வார்த்தைகள் நான் பேச..
ஓர் நொடிப் பார்வையில்
எனை ஊமையாக்கி விட்டாயே...!!//

எனக்கு என்னமோ கவிதை இந்த இடத்தில் ஆரம்பிக்கிற மாதிரி தோணுது...!


Poems are feel right.... so.. ur pomes too passing the same...!

Anonymous said...

//உனக்குள் நான் என்றாய்...
எனக்குள் நீ என்றாய்...
நமக்குள் நாம் ஆவது எப்போது??//

ஆனதால் தானே இந்த கவிதையின் பிரசவம்...

Anonymous said...

//பார்த்துக் கொண்டிருந்தாலே..
பரவசம் ஆகிறதே....
பட்டெனத் தொட்டு விட்டு
பரிதவிக்க விட்டு
வேடிக்கை பார்க்கிறாய்..!!//

உணர்வு அழகு..உணர்ந்தால் இன்னும் அழகு..

Anonymous said...

//எதிர்பார்க்கா நேரத்தில்
என்னருகில் நீ வந்து...
எதேச்சையாய் வருவது போல்
எனையணைத்து நீ சென்றாய்...!!//

அடடே எக்கச்சக்கமா நடந்திருக்கு.. நான் கிளம்பறேன் எனக்கும் இப்படி ஒன்னு எழுதனும் போல இருக்கு ஆனந்தி..முதல் வருகை... ரொம்ப பிடிச்சிருக்கு கவிதை

சசிகுமார் said...

//உனக்குள் நான் என்றாய்...
எனக்குள் நீ என்றாய்...
நமக்குள் நாம் ஆவது எப்போது??//

அதுக்கு வேற ஆள பாரு

ஹேமா said...

ஆனந்தி...குழந்தைநிலாவுக்குள் அன்பின் வருகைக்கு நன்றி சகோதரி.அழகான காதல் கவிதை.இனி நமக்குள் நாமாய் கைகோர்ப்போம்.

மாணவன் said...

அசத்தல் கவிதை...
அருமையான வரிகள்...
அழகான படம்...
பொருத்தமான தலைப்பு...
மொத்தத்தில் சூப்பர்ப்...
அழகாய் பூக்குதே.... சுகமாய் தாக்குதே...
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி....
நன்றி

Anonymous said...

//பரிதவிக்க விட்டு
வேடிக்கை பார்க்கிறாய்..!!//

நம்மள தவிக்க விட்டு வேடிக்கை பார்ப்பதே அவங்களுக்கு பொழப்பா போச்சு :)
இன்னொரு தவிப்ப பாக்க கொஞ்சம் இங்க வாங்க ஆனந்தி..
http://balajisaravana.blogspot.com/2010/09/blog-post_22.html

நட்புடன் ஜமால் said...

கடைசி பத்தி செம செம

r.v.saravanan said...

காதல் கவிதை அருமை

vanathy said...

super & well written!

thiyaa said...

அழகிய சொற்கள்
கோர்த்துக் கட்டிய
கவிதை மாலை
அழகோ அழகு

Anonymous said...

உங்கள் தமிழ் ஊற்றுக்கு ரொம்ப நன்றி ...

Anonymous said...

உங்கள் தமிழ் ஊற்றுக்கு ரொம்ப நன்றி ...
http://www.raghuvarman.co.cc

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்
அடடா.. என்ன ஒரு ரைமிங்.... அருமை..அருமை...!!
ஹா ஹா.. அதானே.. உங்கள கேக்க சொன்ன நீங்க கேக்குறீங்க இல்ல.. :-))
தேங்க்ஸ் சஞ்சய்.. :-))

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சௌந்தர்
ஹா ஹா... சொல்லுவாங்க சொல்லுவாங்க... :-))
நன்றி..


@என்னது நானு யாரா?
ஆஹா... வாங்க வாங்க..
ரொம்ப சந்தோசங்க..!!
நன்றி.. :-)



@சைவக்கொத்துப்பரோட்டா
வாங்க.. ரொம்ப நன்றிங்க. :-)


@சௌந்தர்
ஆமா அப்படித்தான்....மாலைக்கண் எல்லாம் ஒன்னும் இல்லை..
யாருக்கு தெரியும்.. தெரிஞ்ச சொல்ல மாட்டமா??
கரெக்ட்.. இதுக்கு சப்போர்ட்-கு ஒரு ஆள் வேற.. விளங்கிரும்.. :-)))
நன்றி சௌந்தர்

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@அண்ணாமலை
அடடா.. நீங்க ரசித்து படிச்சதற்கு நன்றிங்க.. :-)



@RVS
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)



@அன்பரசன்
வாங்க.. ரொம்ப நன்றிங்க. :-)



@Akila
ரொம்ப நன்றிங்க.. :-)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ஜெய்லானி
ஹா ஹா ஹா...
செம தூள் போங்க..
நல்ல ஐடியா தான்.. நன்றி :-)


@நாடோடி
வாங்க.. ரொம்ப நன்றிங்க. :-)


@r . selvakumar
வாங்க அண்ணா....
ஹ்ம்ம் காதல் அகராதியில் இலக்கணம் பார்ப்பதில்லை..
அழகா சொல்லிட்டீங்க.. நன்றி :-))


@சே. குமார்
ஹ்ம்ம்ம்.. வாங்க .. ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.. :-)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@அன்புடன் பிரசன்னா
ஹ்ம்ம்ம்.. ரொம்ப நன்றிங்க.. :-))


@Nandhini
எங்கப்பா போறது.. அப்போ அடுத்த கவிதை வேணாமா??
ரொம்ப நன்றிங்க.. :-)


@சினேகிதி
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. :-)


@swetha
நன்றி ஸ்வேதா :-)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Mahi
வாங்க மகி.. ரொம்ப நன்றிங்க.. :-)


@Priya
வாங்க ப்ரியா
ஹ்ம்ம்ம்.. சரியா சொன்னிங்க..
ரொம்ப நன்றிங்க.. :-))


@ஸ்ரீராம்
வாங்க.. ஹ்ம்ம்.. (பீலிங்க்ஸ்) நிறைய இருக்கு...
இன்னும் தொடர்வேன்.. :-))
நன்றி..


@இம்சைஅரசன் பாபு
வாங்க... ரொம்ப நன்றிங்க.. :-)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@siva
வாங்க.. ஹ்ம்ம் ம்ம் ம்....
ரொம்ப நன்றி.. :-)



@S . Maharajan
வாங்க.. ரசித்து படித்ததற்கு நன்றிங்க.. :-))




@ஜிஎஸ்ஆர்
வாங்க.. ஆமாங்க.. கரெக்ட் தான்..
நன்றி :-))



@ஆட்டையாம்பட்டி அம்பி
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)



@dheva
வாங்க.... ஹ்ம்ம்ம் எஸ்.. கரெக்ட்.. அதே அதே.. :-)

yes you absolutely right.. it is a feeling..! thanks :-))

வேங்கை said...

இம்சை - அதாங்க காதலா ?

ரொம்ப ரசிக்கும்படியா இருக்குங்க

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@தமிழரசி

வாங்க தமிழரசி....
ஹ்ம்ம்.. ஹா ஹா.. அப்படியும் இருக்கலாம்.. :-)
ரொம்ப சரியா சொன்னிங்க..
ஹா ஹா.. எழுதுங்க எழுதுங்க..
முதல் வருகைக்கு மிக்க நன்றிங்க..





@@சசிகுமார்

ஹா ஹா.. என்னங்க ஆச்சு உங்களுக்கு??
யாரு இப்ப என்ன சொன்னாங்க..
நன்றி சசி..





@@ஹேமா
வாங்க ஹேமா.. ரொம்ப சந்தோசம்
எஸ், வருகைக்கு நன்றிங்க..





@@மாணவன்

ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்... நீங்க ரசித்து போட்ட கமெண்ட்-கு ரொம்ப சந்தோசம்..:-))
நன்றிங்க..





@@Balaji Saravana

ஹா ஹா.. அதானே..! கண்டிப்பா வரேங்க..
நன்றி பாலாஜி :-)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@நட்புடன் ஜமால்

வாங்க.. ரொம்ப நன்றிங்க :-))





@@vanathy

வாங்க.. வாணி.. தேங்க்ஸ் மா :-))




@@தியாவின் பேனா

வாங்க.. ஹ்ம்ம்ம்.. ரசித்து இட்ட கருத்திற்கு ரொம்ப நன்றிங்க.. :-))




@@கிராமத்தான்

வாங்க.. உங்க வருகைக்கும், கருத்திற்கும் நன்றிங்க... :-)




@@வேங்கை

ஹா ஹா ஹா....
வாங்க.. இருக்கலாம்...
ரசித்து இட்ட கருத்திற்கு ரொம்ப நன்றிங்க.. :-))

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_21.html

செல்வா said...

//ஓர் நாள் பேச்சில்...
ஓராயிரம் வார்த்தைகள் நான் பேச..
ஓர் நொடிப் பார்வையில்
எனை ஊமையாக்கி விட்டாயே...!!//

எதுக்கு அவ்ளோ பேசுறீங்க , தொண தொணன்னு பேசிக்கிட்டே இருந்த என்ன பண்ணுறது ..?

செல்வா said...

//எதிர்பார்ப்பை ஏற்படுத்தி
எனை ஏங்கச் செய்வதில் தான்
எத்தனை சுகம் உனக்கு..!!//

கவிதை நல்லா இருக்குங்க ..!!

மோகன்ஜி said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு ஆனந்தி..

அன்புடன் மலிக்கா said...

//எதிர்பார்க்கா நேரத்தில்
என்னருகில் நீ வந்து...
எதேச்சையாய் வருவது போல்//

அருமை ஆனந்தி..நல்லாயிருக்கீங்களா..

Ramesh said...

அருமையான கவிதை ஆனந்தி...வாழ்த்துக்கள்

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@ஜெய்லானி

வலைச்சரத்தில் என்னை அறிமுகப் படுத்தியதற்கு நன்றிங்க.. :-))
வாரம் முழுவதும், ஒரு கலக்கு கலக்கிட்டீங்க.. வாழ்த்துக்கள்.
நன்றி





@@ ப.செல்வக்குமார்

ஹா ஹா ஹா... ஏங்க இவ்ளோ கோவம்..
சரி பேசல.. விடுங்க..
ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி..
வருகைக்கு நன்றி.. :)






@@மோகன்ஜி

வாங்க. ரொம்ப நன்றிங்க :-))






@@அன்புடன் மலிக்கா

வாங்க வாங்க.. ரொம்ப நன்றிங்க..
எஸ், நான் நல்ல இருக்கேன்.. :-))






@@பிரியமுடன் ரமேஷ்

வாங்க ரமேஷ். ரொம்ப நன்றிங்க.. :-))

நெல்லை விவேகநந்தா said...

மனசுக்குள் காதல் இருந்தால்தான் கவிதை வரும் என்று சொல்வார்கள்.நீங்களும் கவிதைகளில் அசத்துகிறீர்கள். அப்படியென்றால் காதல்...?

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@நெல்லை விவேகநந்தா

வாங்க.. ரொம்ப நன்றிங்க..
காதல் என் உயிரில் கலந்ததால் தான்..இன்னும்
கவிதை துளிர்த்துக்கொண்டு இருக்கிறது....!! :-))

Asiya Omar said...

அருமையான கவிதை.பின்னூட்டமும் சூப்பர்.

aavee said...

ரொம்ப அருமையாக இருந்தது !!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

simply superb

Anonymous said...

மிகவும் அருமை

Thanglish Payan said...

Superb kaviathai.

Penoda thavippai pengalal mattume
unara mudiyum veli padutha mudiyum..

Velipadithringa anadhi....great

Thanglish Payan said...

Pengalin unarchi pengalal mattume veli padutha mudiyum..

Veli paduthiringa superb...

logu.. said...

hayyo...

kavitha..kavitha..

romba nallarukku..

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)