topbella

Tuesday, July 6, 2010

தூது போகாதே...!!



துள்ளித் திரிந்த என்னை...
தூதாய் அனுப்பினாய் பெண்ணே...
தூது சென்ற பாவம்...
எனைச் சேர்ந்த நெஞ்சோ தூரம்...

தூரம் சென்ற உறவை எண்ணி..
என்னிரு கண்ணிலும் ஈரம்..
ஓரமாய் ஒதுக்க நினைத்தும் கூட
மனம் பாரமாய் வலிப்பதும் ஏனோ..?

சரி.. விடு..
யாருக்கில்லை இந்த பாரம்..
காலம் சென்றால் கவலை போகும்....!

நண்பர்களாகவே இருந்தாலும், யாருக்காகவும் தூது செல்வதற்கு முன், பல முறை யோசித்துச் செய்ய வேண்டும்..! இது நான் கற்ற பாடம்..!

உதவி செய்வதாய் உன் நினைப்பு.. அது
உனக்கு நீயே வைத்துக்கொள்ளும் ஆப்பு..!!

...அன்புடன் ஆனந்தி

72 comments:

Sanjay said...

யாருக்கில்லை இந்த பாரம்..
காலம் சென்றால் கவலை போகும்....!!

அதானே....இதுவும் கடந்து போகும்!!! : )


//உதவி செய்வதாய் உன் நினைப்பு.. அது
உனக்கு நீயே வைத்துக்கொள்ளும் ஆப்பு..!! )//

ஹா ஹா ஹா.....அனுபவம் அப்படியே வார்த்தையா வந்து விழுது....:D :D
யாருப்பா அந்த தூது அனுப்பின நல்லவங்க??? :P :D :D

Unknown said...

அது சரி யாருக்கு யார் தூது போனது..?

ISR Selvakumar said...

தூது செல்வது பல சமயம் சுய ஆப்புத் திட்டம் என்று வர்ணிக்கப்படும்.

ப்ரியமுடன் வசந்த் said...

தூது போனதுக்கே இப்டின்னா தூது அனுப்புனவங்க என்னமா பொலம்புறாங்களோ?

நாடோடி said...

க‌ண்ணீர் துளிக‌ளை தான் ஆப்பாக‌ சொல்லுகிறீக‌ள் என்று நினைக்கிறேன்..

Chitra said...

தூது செல்வது பல சமயம் சுய ஆப்புத் திட்டம் என்று வர்ணிக்கப்படும்.

..... அரசியல் திட்டமா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

ஜெய்லானி said...

//காலம் சென்றால் கவலை போகும்....!!//

கண்டிப்பா போகனும் .பழைய படி துள்ளி குதிக்கனும்

Chitra said...

அன்புடன் ஆனந்தி, எந்த காதலுக்கு தூது போனீர்கள் - அன்புடன் தான் - என்ன ஆச்சு? கவலையா? ஆப்பா? என்ன பாரமோ?

ஜெய்லானி said...

டீச்சர் ..டீச்சர்...இந்த பையன் என்னை கடிக்கிரான் டீச்சர்..!!

S Maharajan said...

( உதவி செய்வதாய் உன் நினைப்பு.. அது
உனக்கு நீயே வைத்துக்கொள்ளும் ஆப்பு..!! )

super appu (ஆப்பு)

Nandhini said...

////////////உதவி செய்வதாய் உன் நினைப்பு.. அது
உனக்கு நீயே வைத்துக்கொள்ளும் ஆப்பு..!!/////////////
சூப்பர் அப்பு சூப்பர்....ஹ ஹ ஹ ஹ
அதனால்தானே நம் முன்னோர்கள் "பாத்திரம் அறிந்து பிச்சை இடு" என்று கூறியுள்ளனர். காலங்கள் மாறினால் காயமும் மாறுமே.....

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்
////யாருக்கில்லை இந்த பாரம்..
காலம் சென்றால் கவலை போகும்....!!

அதானே....இதுவும் கடந்து போகும்!!! : ) ///

ஹ்ம்ம்.. கடந்து போயிட்டு இருக்கு... கொஞ்சம் கொஞ்சமா.. :) :)

///உதவி செய்வதாய் உன் நினைப்பு.. அது
உனக்கு நீயே வைத்துக்கொள்ளும் ஆப்பு..!! )//

ஹா ஹா ஹா.....அனுபவம் அப்படியே வார்த்தையா வந்து விழுது....:D :D
யாருப்பா அந்த தூது அனுப்பின நல்லவங்க??? :P :D :D ////

ஹ்ம்ம்..ஹ்ம்ம்.. எஸ் எஸ்..
யு ஆர் அப்சலூட்லி ரைட்.. :-))

ஹா ஹா.. அதெல்லாம் கம்பெனி ரகசியமாக்கும்... கேக்க பிடாது.. :P :P

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@கே.ஆர்.பி.செந்தில்


/// அது சரி யாருக்கு யார் தூது போனது..?////

ஹிஹி.. அதெல்லாம் ஒரு ப்ரெண்டுக்காக நா போனேன்.. :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@r.செல்வக்குமார்

/// தூது செல்வது பல சமயம் சுய ஆப்புத் திட்டம் என்று வர்ணிக்கப்படும். ///

ஹா ஹா.. சரியா சொன்னிங்க அண்ணா..
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ப்ரியமுடன் வசந்த்
/// தூது போனதுக்கே இப்டின்னா தூது அனுப்புனவங்க என்னமா பொலம்புறாங்களோ? ///

ஹா ஹா... அதுவும் சரி தான்.. :)
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வசந்த்..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@நாடோடி
/// க‌ண்ணீர் துளிக‌ளை தான் ஆப்பாக‌ சொல்லுகிறீக‌ள் என்று நினைக்கிறேன்.. ///

ஹ்ம்ம்.. சரியாக சொன்னிங்க.. இப்ப சரி ஆச்சு.. :)
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சித்ரா

///தூது செல்வது பல சமயம் சுய ஆப்புத் திட்டம் என்று வர்ணிக்கப்படும்.
..... அரசியல் திட்டமா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... ///

ஹா ஹா.. அது அண்ணனைத் தான் கேக்கணும் சித்ரா.. :D

/// அன்புடன் ஆனந்தி, எந்த காதலுக்கு தூது போனீர்கள் - அன்புடன் தான் - என்ன ஆச்சு? கவலையா? ஆப்பா? என்ன பாரமோ?///

ஹா ஹா.. காதலுக்கு இல்லை.. ஜஸ்ட் ப்ரெண்ட்ஷிப்.. காக ஒரு தூது.. அவ்ளோ தான்.. :)
தேங்க்ஸ் சித்ரா..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஜெய்லானி
//காலம் சென்றால் கவலை போகும்....!!//
கண்டிப்பா போகனும் .பழைய படி துள்ளி குதிக்கனும் ///

ஹ்ம்ம் ஹ்ம்ம். கண்டிப்பாக.. :)

///டீச்சர் ..டீச்சர்...இந்த பையன் என்னை கடிக்கிரான் டீச்சர்..!!///

ஹ்ம்ம்.. கடிச்சா.. தள்ளி உக்காருங்க.. :P :P
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@அப்பாவி தங்கமணி
/// சூப்பர்///

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@S மகாராஜன்
//// ( உதவி செய்வதாய் உன் நினைப்பு.. அது
உனக்கு நீயே வைத்துக்கொள்ளும் ஆப்பு..!! )

super appu (ஆப்பு) ///

ஹ்ம்ம்.. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@நந்தினி
///// சூப்பர் அப்பு சூப்பர்....ஹ ஹ ஹ ஹ
அதனால்தானே நம் முன்னோர்கள் "பாத்திரம் அறிந்து பிச்சை இடு" என்று கூறியுள்ளனர். காலங்கள் மாறினால் காயமும் மாறுமே..... ///

எஸ் எஸ்.. ரொம்ப கரெக்டா சொன்னிங்க..
தேங்க்ஸ் நந்தினி.. :)

Unknown said...

சூப்பர் ஆனந்தி

கவிதை மிகவும் அருமை.

தூது அனுப்பிய பெண்ணிடம் இந்த கவிதையை அனுப்புங்கோ.... .....

Unknown said...

@ ஆனந்தி..

இனி தூது போவீங்க ...
இனி தூது போவீங்க....

சௌந்தர் said...

கவிதையைவிட இந்த திருக்குறள் நல்ல இருக்கே

உதவி செய்வதாய் உன் நினைப்பு.. அது
உனக்கு நீயே வைத்துக்கொள்ளும் ஆப்பு..!!

சாந்தி மாரியப்பன் said...

//யாருக்கில்லை இந்த பாரம்..
காலம் சென்றால் கவலை போகும்....!!//

அதானே.. கவலையை விடுங்க :-))

r.v.saravanan said...

யாருக்கில்லை இந்த பாரம்..
காலம் சென்றால் கவலை போகும்

சரி தான்

உதவி செய்வதாய் உன் நினைப்பு.. அது
உனக்கு நீயே வைத்துக்கொள்ளும் ஆப்பு..!!

ஒரு வாசகம் சொன்னாலும் சூப்பரா சொன்னீங்க

Riyas said...

//சரி.. விடு..
யாருக்கில்லை இந்த பாரம்..
காலம் சென்றால் கவலை போகும்....!!//

சரிதானுங்க..

சசிகுமார் said...

//தூது போனதுக்கே இப்டின்னா தூது அனுப்புனவங்க என்னமா பொலம்புறாங்களோ//

ரிப்பீட்டேய்

Unknown said...

கவிதையில் உங்கள் வலி தெரிகிறது. இதுவும் கடந்து போகும் கவலைப் படாதீர்கள்

அன்புடன் நான் said...

அப்ப இது பட்டுணர்ந்த கவிதைன்னு சொல்லுங்க...?

//உதவி செய்வதாய் உன் நினைப்பு.. அது
உனக்கு நீயே வைத்துக்கொள்ளும் ஆப்பு..!! //

மிக சரி.

பாராட்டுக்கள்.

Thenammai Lakshmanan said...

உண்மையான வலியின் வெளிப்பாடு ஆனந்தி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@பூர்ணா
///சூப்பர் ஆனந்தி
கவிதை மிகவும் அருமை.
தூது அனுப்பிய பெண்ணிடம் இந்த கவிதையை அனுப்புங்கோ.... ..... ////

ஹா ஹா.. ஓகே ஓகே.. :-)))

///@ ஆனந்தி..

இனி தூது போவீங்க ...
இனி தூது போவீங்க.... ///

இல்லையே.. போக மாட்டனே... ஒரு பாடம் போறாதா?? :D :த
தேங்க்ஸ் பூர்ணா

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சௌந்தர்
///கவிதையைவிட இந்த திருக்குறள் நல்ல இருக்கே

உதவி செய்வதாய் உன் நினைப்பு.. அது
உனக்கு நீயே வைத்துக்கொள்ளும் ஆப்பு..!!///

ஹா ஹா.. நன்றி சௌந்தர்.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@அமைதிச்சாரல்
//யாருக்கில்லை இந்த பாரம்..
காலம் சென்றால் கவலை போகும்....!!//

அதானே.. கவலையை விடுங்க :-)) ///

ஹ்ம்ம்.. ரொம்ப நன்றிங்க.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ r.v.சரவணன்
////யாருக்கில்லை இந்த பாரம்..
காலம் சென்றால் கவலை போகும்

சரி தான்

உதவி செய்வதாய் உன் நினைப்பு.. அது
உனக்கு நீயே வைத்துக்கொள்ளும் ஆப்பு..!!

ஒரு வாசகம் சொன்னாலும் சூப்பரா சொன்னீங்க ///

:D :D :D
ரொம்ப நன்றிங்க.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ரியாஸ்
///சரி.. விடு..
யாருக்கில்லை இந்த பாரம்..
காலம் சென்றால் கவலை போகும்....!!//

சரிதானுங்க.. ///

ஹ்ம்ம் ரொம்ப நன்றிங்க :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சசிகுமார் said...

//தூது போனதுக்கே இப்டின்னா தூது அனுப்புனவங்க என்னமா பொலம்புறாங்களோ//

ரிப்பீட்டேய் ////

ரொம்ப நன்றி சசிகுமார்.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@வெங்கட்
/// கவிதையில் உங்கள் வலி தெரிகிறது. இதுவும் கடந்து போகும் கவலைப் படாதீர்கள் ///

ஹ்ம்ம்.. ரொம்ப நன்றிங்க.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சி. கருணாகரசு
////அப்ப இது பட்டுணர்ந்த கவிதைன்னு சொல்லுங்க...?

//உதவி செய்வதாய் உன் நினைப்பு.. அது
உனக்கு நீயே வைத்துக்கொள்ளும் ஆப்பு..!! //

மிக சரி.

பாராட்டுக்கள். ////

ஆமாங்க.. வாழ்க்கைப்பாடம்.. :)
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@தேனம்மைலக்ஷ்மணன்
////உண்மையான வலியின் வெளிப்பாடு ஆனந்தி..////

ஹ்ம்ம்.. ஆமா அக்கா..
ரொம்ப நன்றி :)

'பரிவை' சே.குமார் said...

உண்மையான வலி.

prince said...

அஹா!! இதெல்லாம் எப்போ நடந்தது ....சொல்லவே இல்ல

vanathy said...

ஆனந்தி, கவிதை நல்லா இருக்கு. நல்ல வேளை நான் யாருக்கும் தூது போகவில்லை ஹாஹா!!!

ஜில்தண்ணி said...

//நண்பர்களாகவே இருந்தாலும், யாருக்காகவும் தூது செல்வதற்கு முன், பல முறை யோசித்துச் செய்ய வேண்டும்..! இது நான் கற்ற பாடம்..!//

எங்கையாவது மாட்டிக்கிட்டீங்களோ :)

சொல்லிட்டீங்கள இனி யோசிச்சிறுவோம்

கவிதய சொல்லிட்டு அத வச்சே அட்வைசா,அடடா அருமயான ஐடியா

Anonymous said...

ஆஹா,
அருமையான வரிகள்,
ஆழ்ந்த கருத்துக்கள்,
அபாரமான (கவிதை) சிந்தனை.....

Anonymous said...

ஆனந்தி கவிதை அருமையா இருக்கு

"உதவி செய்வதாய் உன் நினைப்பு.. அது
உனக்கு நீயே வைத்துக்கொள்ளும் ஆப்பு..!!

இது சூப்பர்

pinkyrose said...

hai aanandhi...
kavithailayae polambringa ok ok ok cheer up..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சே.குமார்
/// உண்மையான வலி ///

ஆமாங்க.. குமார்.. இப்ப சரி ஆச்சுங்க..
வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ப்ரின்ஸ்
/// அஹா!! இதெல்லாம் எப்போ நடந்தது ....சொல்லவே இல்ல ///

ஹிஹிஹி... நீங்க கேக்கவே இல்ல.. :D :D :D

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@வானதி
///ஆனந்தி, கவிதை நல்லா இருக்கு. நல்ல வேளை நான் யாருக்கும் தூது போகவில்லை ஹாஹா!!! ///

ஹா ஹா ஹா.. கரெக்ட் தான்..
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.. வானதி.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஜில்தண்ணி - யோகேஷ்

//நண்பர்களாகவே இருந்தாலும், யாருக்காகவும் தூது செல்வதற்கு முன், பல முறை யோசித்துச் செய்ய வேண்டும்..! இது நான் கற்ற பாடம்..!//
எங்கையாவது மாட்டிக்கிட்டீங்களோ :)
சொல்லிட்டீங்கள இனி யோசிச்சிறுவோம்
கவிதய சொல்லிட்டு அத வச்சே அட்வைசா,அடடா அருமயான ஐடியா ///

என்ன இருந்தாலும், உங்க லெவல்-க்கு வர முடியுமாங்க.. :-))))
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.. யோகேஷ்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@FIRE FLY
/// ஆஹா,
அருமையான வரிகள்,
ஆழ்ந்த கருத்துக்கள்,
அபாரமான (கவிதை) சிந்தனை.....
///

ஆஹா.. இதென்ன திருவிளையாடல் வசனம் மாதிரி இருக்கு..
தீர்ந்தது சந்தேகமா?? :D :D
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சந்த்யா
/// ஆனந்தி கவிதை அருமையா இருக்கு

"உதவி செய்வதாய் உன் நினைப்பு.. அது
உனக்கு நீயே வைத்துக்கொள்ளும் ஆப்பு..!!
இது சூப்பர் ///

ஹா ஹா ஹா..
ரொம்ப நன்றி சந்த்யா.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@pinkyrose
/// hai aanandhi...
kavithailayae polambringa ok ok ok cheer up..///

ஓகே ஓகே..
ரொம்ப தேங்க்ஸ் :-)

அண்ணாமலை..!! said...

இந்த மாதிரி கவிதைகள் நல்லாயிருக்கு!
நிறைய அனுபவங்கள்
இருக்கும் போலிருக்கே! :)

ஸ்ரீராம். said...

என்னென்ன அனுபவமோ....! கடைசி வரி சூப்பர்!

Karthick Chidambaram said...

நல்ல கவிதை தோழி. பெரிய ஆப்போ ?

கமலேஷ் said...

என்னங்க தத்துவார்த்தமான கவிதையா இருக்கு...

Admin said...

நல்ல வரிகள். நான் தூது போகவில்லை. தூது வருமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@அண்ணாமலை

/// இந்த மாதிரி கவிதைகள் நல்லாயிருக்கு!
நிறைய அனுபவங்கள்
இருக்கும் போலிருக்கே! :)////

ரொம்ப நன்றிங்க.. :)
இல்ல... நல்ல வேளை இந்த மாதிரி அனுபவம் நிறைய இல்லை.. :D :D

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஸ்ரீராம்
/// என்னென்ன அனுபவமோ....! கடைசி வரி சூப்பர்! ///

வாங்க ஸ்ரீராம்..
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Karthick Chidambaram
/// நல்ல கவிதை தோழி. பெரிய ஆப்போ ? //

ஹா ஹா..

வாங்க கார்த்திக்..
ரொம்ப நன்றி.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@கமலேஷ்
///என்னங்க தத்துவார்த்தமான கவிதையா இருக்கு...///

வாங்க கமலேஷ்..
எல்லாம் ஒரு அனுபவ கவிதை தாங்க.. ரொம்ப நன்றி :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சந்ரு
/// நல்ல வரிகள். நான் தூது போகவில்லை. தூது வருமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். ///

உங்களுக்கு சீக்கிரம் தூது வர வாழ்த்துக்கள்..
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.. :)

Gayathri said...

மிக அருமை..கடைசி வரி..சிரித்துவிட்டேன்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@காயத்ரி
/// மிக அருமை..கடைசி வரி..சிரித்துவிட்டேன். ///

ஹா ஹா.. :D :D
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி :-))

மங்குனி அமைச்சர் said...

ரொம்ப ரொம்ப லேட்டா வந்திட்டனோ ??? (யாரும் அடிக்காம இருந்தா சரி )
கவிதை ஓகே , ஆனாலும் சரியா புரியலை

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@மங்குனி அமைச்சர்
/// ரொம்ப ரொம்ப லேட்டா வந்திட்டனோ ??? (யாரும் அடிக்காம இருந்தா சரி )
கவிதை ஓகே , ஆனாலும் சரியா புரியலை///

வாங்க வாங்க..

யாரும்.... உங்கள அடிக்க முடியுமாங்க... நீங்க யாரு, உங்க பெருமை என்ன?? :-))

இது என்னங்க... சொல்லில் குற்றமில்லை.. ஆனா எனக்கு புரியலை.. அப்படியா?? :D :D

ஹ்ம்ம்.. சரி சொல்றேன்... ஒரு நட்புக்கு உதவி செய்ய போயி, இன்னொரு நட்பை இழந்தேன்..
இப்போ சரி ஆச்சுங்க..

உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி :)

Anonymous said...

//யாருக்கில்லை இந்த பாரம்..
காலம் சென்றால் கவலை போகும்....!!//


யதார்த்தமான உண்மை, நன்றி..

செந்தில்குமார் said...

யாருக்கில்லை இந்த பாரம்..
காலம் சென்றால் கவலை போகும்....!!

ம்ம்ம் ஆனந்தி நல்ல வரிகள்

இருந்தாலும் புன்களை சொறியும் போது வலிக்காது பிறவு ம்ம்ம்ம் அம்ம்ம்ம்ம‌
அதுபோலத்தான் சரியா.......

Mythili (மைதிலி ) said...

அருமையான பாடம்.... சரி யாருக்கு தூதாய் போனாய்?? எனக்கு மட்டும் சொல்லடி தோழிப்பெண்ணே...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@கோவை குமரன்
//// யதார்த்தமான உண்மை, நன்றி.. ///

உங்க வருகைக்கு நன்றிங்க :-)




@செந்தில்குமார்
///ம்ம்ம் ஆனந்தி நல்ல வரிகள்

இருந்தாலும் புன்களை சொறியும் போது வலிக்காது பிறவு ம்ம்ம்ம் அம்ம்ம்ம்ம‌
அதுபோலத்தான் சரியா.......///

ஒரு வகையில் சரி தான்..
நான் அது கடந்து போன பிறகு, கவிதையாக்கினேன்..
உங்க வருகைக்கு நன்றி :-)




@Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்)
///அருமையான பாடம்.... சரி யாருக்கு தூதாய் போனாய்?? எனக்கு மட்டும் சொல்லடி தோழிப்பெண்ணே...///

ஹா ஹா.. எஸ் எஸ்..
சரி சரி சொல்றேன்.. நன்றி மைதிலி :D

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)