topbella

Tuesday, November 7, 2017

நெடும் கனவே..!!!



விதைத்த அன்பில்
விளைந்த உறவே
விழியின் மொழி அறிந்த
விந்தை மனமே..

விமரிசையாய் விளங்க வைத்தும்
வில்லங்கம் செய்யும் அழகே
விசித்திர விதமாய் நேசிக்கும்
விண் முட்டும் காதலே..

கனவில் கதை பேசி
கருவில் காத்து வந்த
கலையே காவியமே
கண் வரைந்த ஓவியமே..

ஒரு வரிக் கவிதையே
ஓயாது ஒலிக்கும் ரீங்காரமே
ஒப்புமை செய்ய இயலா
ஓருயிரே ஓங்காரமே..

ஊஞ்சலாய் ஆடும் நெஞ்சில்
உல்லாசமாய் நின்று கொண்டு
உள்ளுணர்வில் மெல்லிசையாய்
உள்ளமை உணரச் செய்த உயிரே..

நிலைத்து நிற்கும்
நிதர்சனமே நிஜமே
நீங்காத வரமே
நீண்ட நெடும் கனவே..!!!

~அன்புடன் ஆனந்தி 

(படம்: நன்றி கூகுள்)

5 comments:

Prabu said...

Nice Poem Friend...
ரொம்ப நாள் கழித்து உங்கள் பதிவைப் படித்ததில் ரொம்பவே சந்தோஷம்...
கவிதை மிக அழகு... ரசனையான வார்த்தைகள்....
தொடர்ந்து எழுதுங்க.... :-)

Rengesh said...

Super

Rengesh said...

Super

Prabu M said...

Nice Poem Friend...
ரொம்ப நாள் கழித்து உங்கள் பதிவைப் படித்ததில் ரொம்பவே சந்தோஷம்...
கவிதை மிக அழகு... ரசனையான வார்த்தைகள்....
தொடர்ந்து எழுதுங்க.... :-)

'பரிவை' சே.குமார் said...

அருமை...
வாழ்த்துக்கள்.

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)