topbella

Thursday, May 17, 2018

புதுக்கவிதை நீ..!!!


வாசல் தொட்டு போகும் வான்மழையும் நீ.. வண்ணமயில் கண்டாடும் வானவில்லும் நீ.. மென்விரல்கள் தீண்டி எழும் மெல்லிசை நீ.. மீட்டெடுத்து நான் கண்ட முத்துச்சரம் நீ.. நேசத்தில் எனை மூழ்கடிக்கும் ஈசனும் நீ.. கோபத்தில் கொந்தளிக்கும் நீசனும் நீ.. வானமழை தொட்ட மண் வாசம் நீ.. கானமழை தீண்டிய பூந்தென்றல் நீ.. கட்டுக்குள் அடங்காத காட்டாற்று வெள்ளம் நீ.. கண் மூடி நான் வரைந்த காவியம் நீ.. பூங்காற்று புனைந்த புதுக்கவிதை நீ.. பொறுத்திருந்து நான் கண்ட பொக்கிசமும் நீ..!!! ~அன்புடன் ஆனந்தி

(படம்: கூகிள், நன்றி)

2 comments:

KILLERGEE Devakottai said...

அருமை இரசித்தேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய வரிகள்

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)